search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water resources"

    • நீர் ஆதாரம் மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடை பெற்றது. தலைவர் திசை வீரன், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டத்தில் பணி புரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணிபுரிந்தால் அந்த மாவட்டமானது வளர்ச்சி பெறும். அவ்வாறு செயல்படுவதற்கு திட்டக்குழு அவசியமான ஒன்றாகும்.

    நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் மட்டுமே பற்றாக்குறையாக இருந்து வருகிறது. அந்த பற்றாக்குறையை போக்கு வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றது.

    தண்ணீர் சீராக கிடைத்திடும் பட்சத்தில் விவசாயம் மேம்படும், சட்டம் ஒழுங்கு சீராக அமை யும்,முதல்-அமைச்சரின் அறிவுறுத்த லின்படி குடிநீர் சீராக கிடைத்திடும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குடிநீரானது கரூரி லிருந்து கொண்டு வரப்படு கிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீரை எவ்வாறு வீணாகாமல் உபயோகிப்பது என திட்டக்குழு உறுப்பினர்கள் திட்டங்கள் வகுக்க வேண்டும். அவ்வாறு திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது ஏற்படாது.

    குடிநீர் வீணாக்காமல் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் செல்லக்கூடிய கால்வாய்கள், குளங்கள் அனைத்தையும் தண்ணீரை சேமிப்பதற்கு உரிய நட வடிக்கைகளை திட்டக்குழு உறுப்பினர்கள் மேற் கொள்ள வேண்டும். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய திட்டக்குழு உறுப்பி னர்கள் திட்டங்களை வகுக்கின்ற போது தங்கள் பகுதிகளில் நீர் ஆதார மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
    • விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான கால்வாய்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்ப டுத்தவும், நிலத்தடி நீர்மட்ட த்தை மேம்ப டுத்தவும் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி மதிப்பீட்டு தொகை ரூ.3060.00 லட்சங்கள் மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட மாநில நிதியின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த அணைக்கட்டு கட்டுவதால் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, இதன் மூலம் 6316.10 ஏக்கர் பயன்பெறும். மேலும், இந்த அணைக்கட்டு கட்டப்படுவதால் பதினெட்டான்கோட்டை, வாகுடி மற்றும் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறி யாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், பூமிநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • நெல்லை நீர்வளம் அமைப்பின் சார்பில் நெல்லை நீர் வளம் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    உலக ஆறுகள் தினத்தை யொட்டி நெல்லை மாவட்ட கலெக்டரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட நெல்லை நீர்வளம் அமைப்பின் சார்பில் நெல்லை நீர் வளம் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு

    பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், நீர்நிலை தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை நீர் வளம் நினைவுத் தொகுப்பு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள நீர் நிலைகளின் வழித்தடங்கள் தொடர்பான தண்ணீர் வரைபடம் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    தாமிரபரணி ஆற்று தண்ணீரை குளிக்கும் தரத்தில் இருந்து குடிக்கும் தரத்திற்கு உயர்த்த நெல்லை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். வருகிற 2024-ம் ஆண்டுக்குள் குடிக்கும் தரத்திற்கு தாமிரபரணி ஆற்றின் நீர் மாற்றப்படும்.

    தாமிரபரணி நதியை ஒட்டி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி அதனை தரமான முறையில் மாற்றுவதற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும்.

    தாமிரபரணி நீர் சுத்தமாவதன் மூலம் அதனை நம்பியுள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் குடிக்கும் தரத்துக்கு மாறிவிடும். அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு நம் நெல்லை மாவட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க முடியும். எனவே அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா, சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிஷப், தாமிரபரணி நீர் நிலை செயற்பொறியாளர் மாரியப்பன், மற்றும் பழனிச்சாமி, மதிவாணன், வெங்கட்ராமன், சீனிவாசன், அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நீர்நிலை ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர் அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவெட்டி ஊராட்சியில் அத்திவெட்டி ஊராட்சி மன்றமும் அசிசிஸ்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து தேனீ வளர்ப்பு வைத்திய முறை நடைபெற்றது. 

    முதல் கட்டமாக விவசாயிகளுக்கு நீர்வள முக்கியமானது என்பதால் நீர் வளத்திற்குரிய முயற்சி எடுக்கப்பட்டது. 

    இந்த விவசாயத்திற்கு பயிர் நன்றாக வளர்வதற்கு மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு தேனீயும் ஒரு பங்காக அமைகின்றது. இதனை அடுத்து அத்திவெட்டி ஊராட்சியில் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கு உரிய நீர் வளத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    பயிற்சியாளர் செல்வகுமார் முயற்சியில் விவசா–யிகளுக்கு, பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அத்திவெட்டி ஊராட்சி மன்றமும்அசிசிஸ்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கு தேனீக்களின் நன்மை–களை எடுத்துக் கூறியும் தேனீக்களை வளர்ப்பத–ற்கான பயிற்சியும் நடை–பெற்றது.  

    இந்த பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயி–களுக்கு பயிற்சிக்கான சான்றிதழும் ஒரு விவசா–யிக்கு இரண்டு தேனி வளர்ப்பு பெட்டிகளும் வழங்கப்படும் என்பதை அடுத்து அனைத்து விவசா–யிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகுடி நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும், நீர் வழித் தடங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நீர் நிலைகளை தூர்வாரி பராமரித்து நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்து போனதால் குடிநீரில் உப்புத் தன்மை அதிகரித்து சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகளால் அவதியுறும் பொதுமக்களை காப்பாற்றும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.கே. விஸ்வநாதன், தேசிய மனித உரிமைகள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் கோசிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×