search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Source"

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
    • விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான கால்வாய்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள், வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்ப டுத்தவும், நிலத்தடி நீர்மட்ட த்தை மேம்ப டுத்தவும் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டும் பணி மதிப்பீட்டு தொகை ரூ.3060.00 லட்சங்கள் மதிப்பீட்டில் தமிழக அரசால் கட்டிக்குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்ட மாநில நிதியின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த அணைக்கட்டு கட்டுவதால் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர், துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு மற்றும் மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு, இதன் மூலம் 6316.10 ஏக்கர் பயன்பெறும். மேலும், இந்த அணைக்கட்டு கட்டப்படுவதால் பதினெட்டான்கோட்டை, வாகுடி மற்றும் செம்பராயனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

    இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறி யாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், பூமிநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×