search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government girls school"

    • மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.

    சென்னை:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், தி.மு.க.தலைமை பொதுக் குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எஸ்.கே.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தாமோதரன், வண்டலூர் வட்டாட்சி யர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் கே.பி.ஜார்ஜ், கே.பி. அச்சுததாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராமமூர்த்தி, ஜெ.மனோகரன், கே.பாஸ்கர், மதன கோபால், எம்.கே.டி.சரவணன், எம்.கே.எஸ்.செந்தில், ஓய்.ஜினோ, எஸ்.மதன், கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ்.ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன், த.சீனிவாசன், என்.கோகுலநாதன், வி.சண்முகம், ஜெமினிஜெகன்,எம்.கே.பி.சதீஷ்குமார், ஆர்.தினேஷ்குமார்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எஸ்.தரணி, பாலாஜி, வெங்கடேசன், ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்ரீமதி ராஜி, ப.ரவி, ஜெ.குமரவேல், டி.சதீஷ்குமார், ஆர்.விக்னேஷ், எம்.நாகேஸ் வரன், அ.டில்லீஸ்வரி ஹரி, ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யா சந்தோஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகா பழனி, ஸ்ரீமதி டில்லி, கெளசல்யாபிரகாஷ், ஜெயந்தி ஜெகன், நளினி மோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன்,கே.கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யப்படாததை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளி கழிவறையை மாத கணக்கில் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் கழிவறையில் நேப்கின் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.

    இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷெலினா அங்கு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவிகள் கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளது. கழிவறையை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×