search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siege of parents"

    திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யப்படாததை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளி கழிவறையை மாத கணக்கில் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் கழிவறையில் நேப்கின் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.

    இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷெலினா அங்கு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவிகள் கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளது. கழிவறையை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×