search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temperature"

    • கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும்.

    துவக்கத்தில் ஒரு மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து உறைபனி விழும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற சமயங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு செல்வது வழக்கம். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டி கிடக்கும்.

    ஆனால் இந்த முறை உறைபனி அதிகம் விழவில்லை. அதேசமயம் கடந்த 2 மாதங்களாக ஊட்டியில் நீர்பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் வேளையிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.

    அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகளில் உறைபனி விழத் தொடங்கி உள்ளது.

    நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்பிஎப் போன்ற பகுதிகளில் உறைபனி காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், நீர்நிலை பகுதிகளில் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி இருந்தது. இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகி உள்ளது.

    கடுமையான குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் மாலை நேரங்களிலேயே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 4-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும். ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.
    • பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    அதிகரிக்கும் வெப்பத்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள, உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம். நீர் சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க அதிக தண்ணீரை அடிக்கடி அருந்த வேண்டும்.பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், உப்பு, சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும். இது உடலில் நீர் சத்தை தக்க வைக்க உதவும். பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தல் நல்லது. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லாமல் இருக்கலாம். காலில் செருப்பு அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    • 21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    தாராபுரம் :

    வெப்பநிலை அதிகரிப்பால் 21,22,23 ஆகிய தேதிகளில் முறையே 2,3,4 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்காக காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:- பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நீனோ நிகழ்வு காரணமாக நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.அக்னி நட்சத்திரம் சமயங்களில் வழக்கமாக, 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும். தற்போது, 40 டிகிரி செல்சியஸ் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    21,22,23 ஆகிய மூன்று நாட்கள், வெப்பநிலை புதிய உச்சத்தை தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 23ந் தேதி இதுகுறித்த பதிவுகள் உறுதிசெய்யப்படும்.வயதானவர்கள், குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக நீர் பருக வேண்டும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையுடன், சராசரியை காட்டிலும் 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.மதியம் 12 மணி முதல்4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    பகல், இரவு வெப்பநிலை உயர்ந்தும், காற்றின் ஈரப்பதம் குறைந்தும் காணப்படுவதால் மதியம் 2மணி முதல் 3 மணி வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டு கொடுப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது.
    • ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் அதிகமாக இருக்கும்.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.

    தற்போது மழை குறைந்ததால் பனிப்பொழிவு குறைந்து உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக உறைபனியில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும் இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரும் நிலவுகிறது.

    ஊட்டியில் இன்று காலை தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது.

    இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது.

    அதிகாலையில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள் வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 23.7 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இது புறநகர் பகுதிகளில் குறைந்து 2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.

    அதே சமயம், ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    ஊட்டியில் கடும் உறைபனி காணப்பட்ட நிலையிலும், குளிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களை கண்டு ரசித்தனர்.

    மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் தென்மேற்குபருவமழை தொடங்கி உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இப்போது அங்கும் கன மழை இல்லை. அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது.

    கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இரவிலும் அனல் தகிக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வலு இழந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பான வெயிலை விட 3 டிகிரி அதிகரிக்கும்.

    வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வெப்பம் அதிகரிக்க கடல் காற்று மிக தாமதமாக வீசுவதே காரணம். அதேபோலத்தான் அடுத்த 3 நாட்களுக்கு வீசும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று வெயில் கடுமையாக இருந்தது. அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடினார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கலவை 2 செ.மீ., எண்ணூர், வால்பாறை, பரங்கிப்பேட்டை, சின்னக்கல்லாறு, நெய்வேலி தலா 1 செ.மீ. 
    சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தின் தென்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்தமழை நேற்றுமுன்தினம் குறைந்து உள்ளது.

    சென்னையில் அக்னி நட்சத்திர காலத்தில் கூட வெயில் அளவு 100 டிகிரியை எட்டவில்லை. ஆனால் அக்னி வெயில் முடிந்த மறுநாளே சென்னையில் வெயில் கடுமையாக இருந்தது. அதன் தாக்கம் இரவு 1 மணி வரை மின்விசிறி கூட வெப்பக் காற்றைத் தான் உமிழ்ந்தன.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதவது:-

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மரை நோக்கி சென்று விட்டது. இதன் காரணமாக காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இந்த நிலை அடுத்து 3 நாட்களுக்கு இருக்கும்.

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு இழந்து அப்படியே மறைந்து விட்டது.

    கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் தென் மேற்கு பருவகாற்று வீசுகிறது.

    அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கள்ளாறுவில் 5 செ.மீ.மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அங்கு உள்ள வால்பாறையில் 3 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியாறில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று(வியாழக்கிழமை) தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×