search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப நிலை"

    • உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் :

    எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

    ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது.

    இது, மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

    வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    • காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது.
    • டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் புதுடெல்லியில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது பருவத்தின் சராசரியவை விட 7 புள்ளிகள் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்ப நிலை 14.1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. காற்றின் ஈரப்பதம் காலையில் 94 சதவீதமாகவும், மாலையில் 28 சதவீதமாகவும் இருந்தது. டெல்லியில் 24 மணி நேர காற்று தரக்குறியீடு மாலை 4 மணிக்கு 260 ஆக இருந்தது.

    ×