என் மலர்
நீங்கள் தேடியது "வானிலை ஆராய்ச்சி மையம்"
- நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை, மிகவும் ஆபத்தான 2 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது.
- ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம், மற்ற பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும்.
இந்தியாவில் அக்னி நட்சத்திர வெயில் நேற்று முடிவடைந்தது. இந்த நேரத்தில், உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளுக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அடுத்த 5 ஆண்டுகளில், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீண்டும் மீறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை, மிகவும் ஆபத்தான 2 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை தாண்ட 86 சதவீத வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

கார்னெல் பல்கலைக்கழக பருவநிலை விஞ்ஞானி நடாலி மஹோவால்டு. இந்த கணிப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் கூறுகையில், மிதமிஞ்சிய வானிலைக்கான காரணமாக வலுவான சூறாவளிகள், வலுவான மழைப்பொழிவு, வறட்சி ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.
இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ரிச்சர்டு பெட்ஸ் கூறுகையில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம், மற்ற பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும். அதனால் கடல் நீர்மட்டம் உயரும். உலகளாவிய வெப்பநிலை, ஒரு நகரும் படிக்கட்டில் மேலே ஏறுவது போல் உயருகிறது என்றார்.
- இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
- தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் 1½ மாதத்தில் எப்போதும் 283 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 243 மி.மீ. அளவுக்கே மழை பெய்துள்ளது. இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது புயலாக மாறி வங்கதேச கடற்கரை நோக்கி சென்றுவிட்டது.
இதனால் தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.
இந்நிலையில் வருகிற 19-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 20-ந்தேதி தமிழகம்-புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.






