search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Maanila Congress"

    • நம் நாடு - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.
    • நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. நம் நாடு - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.

    அதாவது ஊழல், லஞ்சம், போதைப்பொருட்கள் கடத்தல், ஹவாலா மோசடி போன்ற குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதகமே. அதே சமயம் இந்த அறிவிப்பால் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொத்தத்தில் இந்த அறிவிப்பானது பண ஆசையில் தவறாக, குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று. குறிப்பாக சாமானியர்களும், நல்லவர்களும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும். எனவே ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பை த.மா.கா சார்பில் வரவேற்று, சாதாரணமானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ்வில் மேம்பட இது போன்ற நல்ல நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கோரிக்கைகள் சம்பந்தமாக பணியைப் புறக்கணித்த பிறகும் ஊழியர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
    • தமிழக அரசு, தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசிடம் 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, குறைந்தது 10 சதவீதம் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க கோரிக்கை வைக்கின்றனர். சுமார் 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜி.ஒ.100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக முன் வைக்கின்றனர். இக்கோரிக்கைகள் சம்பந்தமாக பணியைப் புறக்கணித்த பிறகும் ஊழியர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தமிழக அரசு, தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் மின்விநியோகம் சரியாக நடைபெறவும், பணியாளர்கள் பணியை முறையாக மேற்கொள்ளவும், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க ஆட்சியின் தவறுகளை திசை திருப்பவே முயற்சி செய்கிறார்கள்.
    • முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மருத்துவக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு என தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்தக்கோரி தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது தமிழக அரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலை எடுத்துக்காட்டுகிறது.

    குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழக அரசுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகமாகியிருக்கிறது.

    இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க மக்கள் மத்தியில் வளர்ச்சி அடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் மீது வழக்கு தொடுத்திருப்பது, தி.மு.க ஆட்சியின் தவறுகளை திசை திருப்பவே முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

    முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
    • இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் மாணவிகள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர்.

    எனவே தமிழக அரசு, இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரு காலக்கெடுவிற்குள் கண்டறிந்து, பணி நீக்கம் செய்யவும், தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்கவும், இனிமேல் மாநிலத்தில் எங்கும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2021 ஏப்ரல் முதல் இதுவரை வயது முதிர்வில் ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் இரண்டு வருடங்களாகியும் வழங்கப்படாதது நியாயமற்றது.
    • தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, அரசு போக்குவரத்தில் காலிப்பணியிடங்களை காலத்தே நிரப்ப முன்வர வேண்டும். அதே போல தமிழக அரசு, அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வினை நீதிமன்ற தீர்ப்பிற்கு ஏற்ப காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். மேலும் அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2021 ஏப்ரல் முதல் இதுவரை வயது முதிர்வில் ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் இரண்டு வருடங்களாகியும் வழங்கப்படாதது நியாயமற்றது. இதனை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்.

    நாளைய தினம் நடைபெறவுள்ள சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் அரசு போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு, ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க மேற்கொள்ளும் நடவடிக்கையை கைவிடவும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கஞ்சா விற்கப்படுவதால் அதனை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை சீரழிகிறது.
    • தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா விற்பனைக்கும், பதுக்கலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

    காரணம் கஞ்சா விற்கப்படுவதால் அதனை வாங்கி பயன்படுத்தும் இளைஞர்கள், மாணவர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை சீரழிகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் போன்ற பல்வேறு தரப்பினரின் உடல்நலன், வருங்கால நல்வாழ்வு ஆகியவற்றை மிக முக்கிய கவனத்தில் கொண்டு கஞ்சாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிராம்பட்டினம் வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
    • திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் தான் தெரியும்.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கியாஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். இதுபோல் தி.மு.க அரசும் தேர்தலில் கியாஸ்க்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    அதிராம்பட்டினம் வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. உடல் பாதுகாப்பாக தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து, கியாஸ் மானியம் போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.
    • எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 13 மருத்துவக்கல்லூரிகள் வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு நேரு வீதியில் அ.தி.முக. வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருக்க வேண்டும். தி.மு.க. என்றாலே ஊழல், கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீரழிவு இப்படி சொல்லி கொண்டே போகலாம். இதுக்கு முடிவு கட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நல்ல வாய்ப்பாக இருக்கும். தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள்.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து, கியாஸ் மானியம் போன்ற வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் 13 மருத்துவக்கல்லூரிகள் வந்தன. அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்தார். கடந்த முறை த.மா.கா போட்டியிட்டது. இந்த முறை அ.தி.மு.க. போட்டியிடுகிறது. காரணம் பொதுமக்கள் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் அ.திமு.க. போட்டியிடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்.
    • மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல.

    தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ரூ.20 ஆயிரம் போதுமானதல்ல என்பதை விவசாயிகளே தெரிவிக்கின்றனர். அதே போல மழையினால் பாதிக்கப்பட்டுள்ள உளுந்து, கடலை உள்ளிட்ட மற்ற பயிர்களுக்கும் விவசாயிகள் அடைந்துள்ள இழப்பீட்டிற்கு ஏற்ப நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையினால் நனைந்து நெல்மணிகள் முளைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல்மூட்டைகளை பாதுகாக்கவும், நனைந்து வீணாகியுள்ள நெல் மூட்டைகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே தமிழக அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம்.
    • தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தொகுதியை கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கீடு செய்து இருந்ததால் இந்த தடவையும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என்று தி.மு.க. தலைமை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் களம் இறங்கப்போவது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இளங்கோவனா? அல்லது வேறு யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே இந்த தடவையும் த.மா.கா. போட்டியிடுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த யூகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    இதற்கிடையே பாரதிய ஜனதாவும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியானது. எனவே அ.தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை எதிர்த்து எந்த கட்சி களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இத்தொகுதியில் த.மா.கா வேட்பாளராக எம். யுவராஜா அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசிக்கிறார்கள்.

    தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மீறி, எங்கள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று 58,396 வாக்குகள் பெற்றோம்.

    தொடர்ந்து அத்தொகுதியில், கடந்த 20 மாதங்களாக மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். தற்போது எதிர்பாராத சூழல் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் என்னை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்கள்.

    அப்போது இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் த.மா.கா.வின் மூத்த தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசனை செய்தேன்.

    மேலும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்கால பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டணியின் முதன்மைக் கட்சியான அ.தி.மு.க.வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டது.

    தமிழக மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலன் ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றி கூட்டணி கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கும், கூட்டணிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது.
    • ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி விட்டன.

    அ.தி.மு.க. கட்சிக்குள் சட்ட ரீதியாக சிக்கல் முடிவுக்கு வராத நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதும் அந்த கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. த.மா.கா. சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என்று இருவிதமான எண்ணத்தில் தவிக்கிறது.

    அ.தி.மு.க. போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும். இரட்டை இலை சின்னத்தை பெற எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கையெழுத்து போட வேண்டும்.

    அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தயாரில்லை. அவர் தனியாக வருகிற 23-ந்தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    எனவே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    த.மா.கா.விலும் போட்டியிட தயக்கம் உள்ளது. கடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

    சின்னம் கிடைக்காத பட்சத்தில் த.மா.கா.வின் சின்னங்களான ஆட்டோ அல்லது தென்னந்தோப்பு சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அது இந்த குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமடையுமா? என்ற சந்தேகம் உள்ளது. அது மட்டுமல்ல இடைத்தேர்தலில் போட்டியிட அதிகமான பணச்செலவாகும்.

    பொதுத்தேர்தல்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டு பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். ஆனால் இடைத்தேர்தலில் போட்டி அந்த அளவுக்கு இருக்காது என்பதால் பணம் செலவழிப்பது சாத்தியமில்லை. இப்படிப்பட்ட சூழலில் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்? என்றுதான் தயங்குகிறார்கள்.

    இந்த நிலையில் இது பற்றி ஆலோசிப்பதற்காக டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, பெஞ்சமின் ஆகிய அ.தி.மு.க. நால்வர் குழு இன்று காலை 11 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது இருதரப்பிலும் தங்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி விளக்கமாக விவாதித்ததாக கூறப்படுகிறது. ஜி.கே.வாசன் தெரிவித்த கருத்துக்கள் அ.தி.மு.க. தலைமைக்கு சொல்லப்படும். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

    சந்திப்பு முடிந்ததும் தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் நாங்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம்.

    இன்று அ.தி.மு.க. தலைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இன்றைய அரசியல் சூழலை கவனத்தில் கொண்டு எங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. அதற்கான வியூகங்களை வகுப்பது பற்றி இரு தரப்பினரும் ஆலோசித்தோம்.

    எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, மக்கள் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை அதிகரித்துள்ளது.

    இவையெல்லாம் ஆட்சிக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளையே அதிகரிக்க வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும். கூட்டணி கட்சிகள் கூடிப்பேசி எந்த கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி இரு கட்சிகளும் தயங்குவதை காரணம் காட்டி கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராகி வருகிறது.

    இதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. முதற்கட்டமாக 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தா, சரஸ்வதி எம்.எல்.ஏ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, வேல் பாண்டியன் உள்ளிட்ட 14 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

    பா.ஜனதா களம் இறங்கி பலத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் கட்சியினரிடையே உள்ளது. டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை காளிங்கராயன் பாளையத்தில் காளிங்கராயன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அ.தி.மு.க.வின் செங்கோட்டையன், த.மா.கா.வின் விடியல் சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்றனர். அப்போது தேர்தல் தொடர்பாக அவர்கள் தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    நாளை (21-ந்தேதி) மாலை அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. இந்த ஆலோசனைகள் முடிந்த பிறகே அ.தி.மு.க. கூட்டணியில் யார் களம் இறங்குவார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    • தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், அதற்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
    • பொது மக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அறிவித்திருக்கும் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு போதுமானதல்ல. தமிழர்களின் தலையாய பண்பாட்டுப் பண்டிகை பொங்கல் பண்டிகை. குறிப்பாக விவசாயிகளுக்குத் தான் பொங்கல் பண்டிகை பெருமகிழ்ச்சியை தரும், ஊக்கமளிக்கும், பயன் தரும் பண்டிகையாக அமையும். தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க அறிவித்திருந்தாலும் இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அரசின் பரிசு மக்களுக்கு இனிக்கவில்லை.

    தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், அதற்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும் பொது மக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

    குறிப்பாக ரொக்கமாக அறிவித்திருக்கும் ஆயிரம் ரூபாயும் போதுமானதல்ல. குறைந்த பட்சம் 2,500 ரூபாயை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும். எனவே தமிழக அரசு, பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2,500 மற்றும் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×