search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை"

    செங்குன்றம் அருகே லாரியை ஏற்றியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
    சென்னை:

    சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கத்தில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டில் மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி கமல், குமரன் ஆகிய 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதுதொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    லாரியை ஏற்றியதில் நவீன் என்ற வாலிபர் படுகாயம் அடைந்திருந்தார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டிருந்த நவீனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம் லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணையாலால், கிளீனர் கிரிஸ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உயிர் பலி 3 ஆக உயர்ந்துள்ள நிலையில் போலீசார் வடபெரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றது. போலீசார் இரவு நேரங்களில் அதிரடி சோதனை நடத்தியதையடுத்து கொலை சம்பவங்கள் குறைந்தது.

    இந்தநிலையில் நேற்றிரவு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துமாரி என்ற பெண்ணும் அவரது 2 மகன்களும் கொலை செய்யப்பட்டனர்.

    3 பேரையும் கொன்ற முத்துமாரியின் கள்ளக்காதலன் கோபால தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மற்றொரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சோழவரம் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அடுத்த மாபுஸ்கான்பேட்டையைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது37). மது பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று இரவு அவர் குடி போதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டார்.

    அப்போது பூபாலன தனது அக்காள் மற்றும் அவரது கணவரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூபாலனை தாக்கி வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அறைக் கதவை திறந்து பார்த்தோது பூபாலன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பூபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பூபாலனின் அக்காள் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆவடியில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கவுரிப்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ் (வயது 25). தண்ணீர் டிராக்டர் டிரைவர் இவர். டிராக்டர் டேங்கரில் தண்ணீர் நிரப்பி வீடுகளுக்கு சப்ளை செய்வது வழக்கம்.

    இன்று காலை 6 மணியளவில் அவர் டிராக்டரில் தண்ணீர் பிடிப்பதற்காக ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு டிராக்டரில் தண்ணீர் பிடிப்பதற்காக ஆவடி பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் வந்திருந்தார்.

    அங்கு மனோஜிக்கும், பிரபுவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரபுவுக்கு ஆதரவாக மேலும் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரும்பு கம்பியால் மனோஜை சரமாரியாக தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே பிரபும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் விரைந்து வந்து மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையுண்ட மனோஜிக்கும், பிரபுக்கும் இடையே ஏற்கனவே பணம், கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே முடியனூரை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் மல்லாங்கிணறு பஸ் நிறுத்தத்திற்கு சென்று தனது நண்பரை பஸ்சில் ஏற்றி விட காத்திருந்தார். 

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாலமன் ராஜா (32) என்பவர் விஜயிடம் மது வாங்கி வரும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சாலமன் ராஜா அரிவாளால் விஜையை வெட்டியுள்ளார். 

    இதில் காயமடைந்த விஜய் ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி விஜயின் தாய் பாக்கியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெண்ணந்தூர் அருகே கோவில் சிற்பி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையொட்டி உடன் இருந்த சக சிற்பியை வெண்ணந்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகம், ஓலப்பட்டி அருகே உள்ள ராசாபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. கோவிலின் சிற்ப வேலைபாடுகளுக்காக நாகை மாவட்டம், திருகடையூர், டி ரஸ்தா கீல வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் செந்தில்குமார் (வயது 24), மயிலாடுதுறை அருகே உள்ள திருவிழுந்தூர் தோப்பு தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன் (31) உள்பட 3 பேர் கடந்த 2 மாதங்களாக சிற்ப வேலைப்பாடுகளை செய்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் கோவில் அருகே உள்ள வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் செந்தில்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். இதனால் நேற்று இரவு சீனிவாசனும், செந்தில்குமாரும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமாகவே செந்தில்குமார் சீனிவாசனை கெட்டவார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த சீனிவாசன் சூரிக் கத்தியால் செந்தில்குமாரின் தலையின் பின் பகுதியில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் டி.எஸ்.பி. (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன், வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    பிறந்தநாள் அன்று செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகம் அடைந்தனர். செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் வெண்ணந்தூருக்கு விரைந்து வந்தனர்.

    கோவில் சிற்ப வேலைக்காக வந்திருந்த சிற்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    யார் தலைவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் சுரேஷ் (வயது 29). இவரது நண்பர்கள் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார். இவர்கள் மீது திருப்பூர் போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    நேற்றிரவு சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5பேரும் சேர்ந்து சந்திராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் மது பாரில் மது அருந்தினர். அப்போது சுரேஷ் அவரது நண்பர்களிடம் , நான் தான் உங்களுக்கு தலைவன். நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் சொல்கிறபடி எதிராளிகளை நீங்கள் அடிக்க வேண்டும். நான் தான் உங்களுக்கு பணம் பெற்று கொடுக்கிறேன். எனவே எனக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்றார்.

    இதற்கு அவரது நண்பர்கள் 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் சொல்கிறபடி நீ நடந்து கொள் என்றனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாரில் இருந்து அனைவரும் வெளியேறினர். அதன்பிறகும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து பட்டா கத்தியால் சுரேசை சரமாரி வெட்டினர். இதில் சுரேசின் தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நள்ளிரவு 1மணியளவில் நடந்தது.

    இதைத்தொடர்ந்து நண்பர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று காலை சுரேஷ் பிணமாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேசை கொலை செய்த அவரது நண்பர்கள் மோகன்ராஜ், மணிகண்டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார் ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யார் தலைவன் என்பது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம் பகுதியில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கம் வழியாக புழல், செங்குன்றம் பகுதிகளுக்கு செல்லும் மாதவரம் நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் நடத்தி வருகிறார்.

    இங்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான கமல் என்ற கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோர் மது குடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் 2 பேரும் சாப்பிடுவதற்கு சப்பாத்தி இருக்கிறதா? என கேட்டுள்ளனர். இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கமல், குமரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அதனை வேகமாக பின்னோக்கி ஓட்டினார். மின்னல் வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்ற அவர் கமல், குமரன், நவீன் ஆகியோர் மீது லாரியை ஏற்றினார். இதில் இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். நவீன் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் டிரைவர், லாரியை திருப்பி சிறிது தூரம் ஓட்டிச் சென்று விட்டு தப்பினார். அவருடன் இருந்த கிளீனரும் தலைமறைவானார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரி யார்டுக்கு திரண்டு சென்றனர். அவர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

    இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கமல், குமரன் இருவர் மீதும் லாரியை ஏற்றி அவர்களது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் கண்ணையாலால்சிங், கிளீனர் கிரீஸ்குமார் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    உயிரிழந்த கமல், குமரன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒன்றாக ஒரே பள்ளியிலேயே படித்துள்ளனர். இருவரும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தனர். கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரும் ஒரே நேரத்தில் கொலையுண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடபெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக அங்கு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட கமல், குமரன் இருவருமே இளம் வயதை சேர்ந்தவர்கள். கமலுக்கு 36 வயதும், குமரனுக்கு 34 வயதும் ஆகிறது. இருவருக்கும் திருமணமாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர்.

    படுகாயத்துடன் உயிர் தப்பிய நவீனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து லாரியை ஏற்றி 2 வாலிபர்களை கொலை செய்துள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து செங்குன்றம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    மாதவரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பால்பண்ணை 4 வது யூனிட் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 34).

    இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மோகன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உறவினர்களான‌ அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 38), திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெபா (எ) ஜெயகுமார் (வயது 34) மற்றும் சில நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

    அப்போது பிரபுவும், ஜெயகுமாரும் மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில் பிரபுவும் ஜெயகுமாரும் மது பாட்டிலால் மோகனை கடுமையாக தாக்கி குத்தினர். இதில் மோகன் மயங்கினார். பின்னர் அனைவரும் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மணலி சின்னசாமி நகரில் வசிக்கும் மோகனின் அண்ணன் செந்தில், மோகனை பார்க்க நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சுயநினைவு இன்றி இருந்த மோகனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, மாதவரம் பால்பண்ணை போலீசார் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மோகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரபுவும், ஜெயக்குமாரும் மதுபாட்டிலால் குத்தியதில் மோகன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபு, ஜெயக்குமார் இருவரையும் கைது செய்தனர். இவர்களில் ஜெயக்குமார் ரவுடி என்றும் அவர் மீது வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பட்டறை தொழிலாளி கொலையில் போலீசில் புகார் கொடுப்பதாக மிரட்டியதால் கொன்றோம் என கைதான அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வாக்குமூலம் அளித்தனர்.
    மதுரை

    மதுரை காமராஜபுரம், திரு.வி.க. நகரை சேர்ந்த அலுமினிய பட்டறை தொழிலாளி ராஜேஷ்குமார் (வயது40)  மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    அப்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து, காவல் நிலையத்தில் விசாரித்தனர்.  அவர்கள் மருதுசூர்யா (30), தெப்பக்குளம் சி.எம்.ஆர் ரோடு சந்தோஷ் (24), வண்டியூர் தக்காளி சதீஷ் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ராஜேஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து மருதுசூர்யா, தக்காளிசதீஷ், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். போலீசில் மருதுசூர்யா கொடு த்துள்ள வாக்குமூலத்தில்  கூறியிருப்பதாவது:-
    நான் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறேன்.  கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி  தெளிப்பதற்காக திரு.வி.க நகருக்குச் சென்றேன். அப்போது எனக்கு ராஜேஷ்குமாரின் மனைவி சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. 

    அலுமினிய பட்டறையில் ராஜேஷ்குமார் வேலை பார்ப்பதால் சத்யா குடித்தனம் நடத்த போதிய பணமின்றி அவதிப்பட்டு வந்தார். நான் அவரிடம்  உங்களையும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை  கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். 

    இதனைத்தொடர்ந்து   2 பேரும் நெருங்கி பழகினோம்.  நானும் சத்யாவும் நெருங்கி பழகுவது, ராஜேஷ் குமாருக்கு தெரியவந்தது.  அவர் சத்யாவை வேலைக்கு அனுப்பவில்லை. இதனால் நான் அவளுடன் பழக முடியாமல் தவித்து வந்தேன். இருந்தபோதிலும் நாங்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம்.
     
    இது எப்படியோ ராஜேஷ் குமாருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னுடன் பேச கூடாது என்று சத்யாவிடம் சண்டை போட்டார்.   ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் என்னை தேடி வந்தார். அப்போது அவர்  நீ என் மனைவியுடன் இனிமேல் செல்போனில் பேசக்கூடாது. மீறி பேசினால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார். எனவே அவரை கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. 

    இது குறித்து நான் எனது நண்பர்களான  ஆட்டோ டிரைவர் தக்காளி சதீஷ், பழ வியாபாரி சந்தோஷ் ஆகியோரிடம்  பேசினேன். அப்போது ராஜேஷ்குமாரை நள்ளிரவில் கொல்ல முடிவு செய்தோம். அதன்படி நாங்கள் 3 பேரும் திரு.வி.க நகருக்கு சென்றோம். அங்கு சத்யா வீட்டின் கதவைத் தட்டினோம். 
    அப்போது ராஜேஷ்கு மார் வெளியே வந்தார். அவரை நாங்கள் கத்தியால் சரமாரியாக குத்தினோம்.  அவர்    அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். அதன்பிறகு   சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டோம். 

    இவ்வாறு  அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.      
    ×