search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சோழவரம் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை

    சோழவரம் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    சோழவரம் அடுத்த மாபுஸ்கான்பேட்டையைச் சேர்ந்தவர் பூபாலன் (வயது37). மது பழக்கத்துக்கு அடிமையானவர். நேற்று இரவு அவர் குடி போதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டார்.

    அப்போது பூபாலன தனது அக்காள் மற்றும் அவரது கணவரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூபாலனை தாக்கி வீட்டில் உள்ள அறையில் அடைத்து வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அறைக் கதவை திறந்து பார்த்தோது பூபாலன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பூபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பூபாலனின் அக்காள் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×