search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட சுரேஷ்.
    X
    கொலை செய்யப்பட்ட சுரேஷ்.

    திருப்பூரில் தொடர் கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சி

    திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றது. போலீசார் இரவு நேரங்களில் அதிரடி சோதனை நடத்தியதையடுத்து கொலை சம்பவங்கள் குறைந்தது.

    இந்தநிலையில் நேற்றிரவு திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துமாரி என்ற பெண்ணும் அவரது 2 மகன்களும் கொலை செய்யப்பட்டனர்.

    3 பேரையும் கொன்ற முத்துமாரியின் கள்ளக்காதலன் கோபால தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மற்றொரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×