search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை முயற்சி
    X
    கொலை முயற்சி

    வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    விருதுநகர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே முடியனூரை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் மல்லாங்கிணறு பஸ் நிறுத்தத்திற்கு சென்று தனது நண்பரை பஸ்சில் ஏற்றி விட காத்திருந்தார். 

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாலமன் ராஜா (32) என்பவர் விஜயிடம் மது வாங்கி வரும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சாலமன் ராஜா அரிவாளால் விஜையை வெட்டியுள்ளார். 

    இதில் காயமடைந்த விஜய் ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி விஜயின் தாய் பாக்கியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×