search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஆவடியில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை

    ஆவடியில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கவுரிப்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ் (வயது 25). தண்ணீர் டிராக்டர் டிரைவர் இவர். டிராக்டர் டேங்கரில் தண்ணீர் நிரப்பி வீடுகளுக்கு சப்ளை செய்வது வழக்கம்.

    இன்று காலை 6 மணியளவில் அவர் டிராக்டரில் தண்ணீர் பிடிப்பதற்காக ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு வந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு டிராக்டரில் தண்ணீர் பிடிப்பதற்காக ஆவடி பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் வந்திருந்தார்.

    அங்கு மனோஜிக்கும், பிரபுவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரபுவுக்கு ஆதரவாக மேலும் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரும்பு கம்பியால் மனோஜை சரமாரியாக தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உடனே பிரபும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் விரைந்து வந்து மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையுண்ட மனோஜிக்கும், பிரபுக்கும் இடையே ஏற்கனவே பணம், கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×