என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆவடியில் தண்ணீர் டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த கவுரிப்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ் (வயது 25). தண்ணீர் டிராக்டர் டிரைவர் இவர். டிராக்டர் டேங்கரில் தண்ணீர் நிரப்பி வீடுகளுக்கு சப்ளை செய்வது வழக்கம்.
இன்று காலை 6 மணியளவில் அவர் டிராக்டரில் தண்ணீர் பிடிப்பதற்காக ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு வந்தார்.
அப்போது அங்கு மற்றொரு டிராக்டரில் தண்ணீர் பிடிப்பதற்காக ஆவடி பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் வந்திருந்தார்.
அங்கு மனோஜிக்கும், பிரபுவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரபுவுக்கு ஆதரவாக மேலும் 2 பேர் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரும்பு கம்பியால் மனோஜை சரமாரியாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே பிரபும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விரைந்து வந்து மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட மனோஜிக்கும், பிரபுக்கும் இடையே ஏற்கனவே பணம், கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்