search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்ப்பு"

    • விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் கஞ்சம் பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பராணி தலைமை தாங் கினார். துணைத் தலைவர் அருமை நாயகம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங் கியதும் ஊராட்சி மன்ற செயலாளர் கிராம வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.

    இதனைத் தொடர்ந்து கிராமத்தின் வளர்ச்சி, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங் கள் பகுதியில் உள்ள குறை கள், மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்து எடுத் துரைத்தனர்.

    பின்னர் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கிரா மத்தின் சுற்று பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தற்போது வரை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை அழிக்கும் நோக்கில், தங்க ளது சுயலாபத்திற்காக சில விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளை மீறி வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்ற னர்.

    இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவது மட்டு மின்றி நிலத்தடி நீரும் பாதிக் கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு எவ்வித அனுமதி வழங்கக் கூடாது. அதற்கு ஊராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தனது கோரிக்கை மனு வழங்கினார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இன்னாத்துக்க ன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
    • அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் விமானப்ப டைத்தளம் அமைந்துள்ளது.

    இந்த விமானப்படை தளத்திற்கு கூடுதலாக சுற்றுச்சுவர் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்னாத்துக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மீதமுள்ள சாலையும் கையகப்ப டுத்தப்பட்டு சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.

    இன்று காலை இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இனாத்துக்கான்பட்டி பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர் .

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், சாலையை கையகப்படுத்தி சுற்று சுவர் கட்டுவதால் நாங்கள் நகருக்குள் செல்ல வேண்டு மென்றால் வேறு வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது .

    இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

    1எனவே எங்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இதனை ஏற்று க்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவ த்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீரங்கம் உத்தர வீதிகளில் புதிதாக கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது
    • மாநகராட்சி ஆணையரிடம் ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தினர் மனு அளித்தனர்

    திருச்சி,

    ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் திருச்சி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்தி நாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது;-ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் ஏற்கனவே கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 3 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இந்த நிலையில் கீழ் உத்தர வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் வேதாந்த தேசிகர் சன்னதி அருகில் புதிதாக ஒரு கழிப்பறையும், வடக்கு உத்தர வீதியில் ஸ்ரீ ராமானுஜ ஐயர் மடத்திற்கு எதிரில் மற்றொரு பொது கழிப்பறையும் மாநகராட்சி நிர்வாகத்தால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது.இதனால் 4 உத்தர வீதிகளில் வசிக்கும் மக்களும் மிகுந்த அதிருப்திக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்.இந்த வீதிகளில் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.பழமையான மடங்கள் ஆச்சாரியார்களின் சன்னதிகள், பாடசாலைகள் உள்ளன.உத்தரவீதிகளில் கழிவுநீர் வெளியேற்ற பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை.இதனால் மழைக்காலங்களில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் புதிதாக 2 கழிப்பறைகளை உத்தர வீதிகளில் கட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்திற்கும் தை தேரோட்டத்திற்கும் திருவிழாக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படும். ஏற்கனவே உத்தர வீதிகளில் கழிப்பறைகள் அமைக்க நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளோம்ஆகவே கோவிலுக்கு சொந்தமான மாற்று இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறை கட்டினால் நல்லது.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
    • சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    அதன்படி இன்று திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் சிவபிரகாசம், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ரகுபதி, நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன் செயலாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையாளர் முத்துசாமி மற்றும் 18 வார்டு கவுன்சிலர்கள் ,அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் துவங்கியதுமே கவுன்சிலர்கள் ஏன் ரகசிய கூட்டம் போல் நடத்துகின்றனர். பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் இருந்தால் தானே பொதுமக்கள் பிரச்சனை குறித்து என்ன பேசுகிறோம் , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வரும். அதை விடுத்து ரகசியமாக கூட்டம் நடத்துவது தேவையா என ஆட்சேபித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் 48 தீர்மானங்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டதாகவும் இதற்கு 3,7,10,11,12,13,17, ஆகிய 7 வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், தீர்மானங்களை எதிர்த்து1,2,4,6,8,9,14,15,16,18, ஆகிய 10 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது.

    இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நடையனூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
    • வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் மத்தியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த கோபுரம் அமைப்பதனால் இந்த கோபுரத்தில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கதிர்வீச்சினால் விவசாய நிலமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறி செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

    • புதுக்கோட்டை பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
    • கர்நாடக முதல்வரிடம், தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை,

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையில் பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.பின்னர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-கர்நாடகாவில் தற்போது ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையில் காவிரிஆற்றில் மேகதாது இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்துள்ளனர் . அதற்கு தமிழக முதல்வர் கண்டனம்தெரிவிக்காமல் அங்கு சென்று வந்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டார். காவிரி விசயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழக அமைச்சர் கள் முதல்வருக்கு அழுத்தம் தரவேண்டும். இல்லையெனில் புதுக்கோட் டையில் அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கர்நாடகாவில் 2012 பாஜக அரசு அணை கட்டும் பணிகளை ஆரம்பித்த போது அதற்கு தமிழக பாஜக சார்பாக எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் குருஸ்ரீராம், மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம், மாநில பொதுக்குழு மயில் சுதாகர், தரவு மேலாண்மை மாநில செயலாளர் கார்த்திகேயன், நகரத்தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு தலைவர் கோவேந்திரன், மாவட்ட செயலாளர் சுந்தரவேல், பிரசாத் உட்பட பலர் இருந்தனர்.

    • அரசால் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, திட்டம் நிறைவேற்றாமல் எப்படி கைவிட முடியும் என கேட்டனர்.
    • பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் நகராட்சி எல்லைக்குட்பட்ட போகனப்பள்ளி கிராமத்தில், 60 அடி அகல சாலை அமைப்பதற்காக தனியார் பள்ளி அருகே ஒதுக்கப்பட்ட நிலத்தில், அத்திட்டத்தை செயல்படுத்தாததால், திட்டம் கைவிடப்படுவதாக முதல் தீர்மானம் இயற்றப்பட்டது.

    இதற்கு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜ., கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரசால் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, திட்டம் நிறைவேற்றாமல் எப்படி கைவிட முடியும் என கேட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதில் பதில் அளித்து நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:-

    கடந்த, 1994-ம் ஆண்டு நகர் ஊரமைப்பு துறை மூலம் கண்டறியப்பட்ட கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட இடங்கள் சாலை விரிவு அபிவிருத்தி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, அரசிதழிலும் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் அங்கு நடக்கவில்லை.

    அரசு அறிவித்து மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலத்திற்கான தொகையை நில உரிமையாளர்கள் தரப்பில் வழங்காமலோ, அறிவிக்கப்பட்ட பணிகள் செய்யவில்லை என்றாலோ அந்த திட்டம் காலாவதி ஆகி விடும். அந்த அடிப்படையில் தற்போது அத்திட்டம் நடப்பதற்கு சாத்தியம் இல்லாததால் கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதை அவர்கள் ஏற்காமல் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

    அதேபோல கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்றுவது, கிருஷ்ணகிரி நகராட்சி அருகில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் செயற்பொறியாளர் சேகரன், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் போரட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று பல்லடம் அருகே உள்ள அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் தொடங்கியது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே தொடங்கிய இந்த காத்திருப்பு போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருந்தொழுவு மகாலிங்கம்,மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம்,கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்,மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன், மாநில துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், அகில இந்திய பிரதிநிதி நல்லாக்கவுண்டர் உள்பட பலர் பேசினர்.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • போலீசார் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இந்த சம்பவத்தால் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள நஞ்சைகவுண்டன்புதூரை சேர்ந்தவர் 52 வயதான வியாபாரி.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு அடுத்த தேவராயபுரத்தை சேர்ந்த தீபா (29) என்பவரிடம், ஒரு மாடு, கன்று, ஒரு காளை மாட்டினை ரூ.72 ஆயிரத்திற்கு வாங்கினார்.

    அதில் மாட்டையும், கன்றையும் மட்டும் வளர்ப்புக்கு வைத்து கொண்டு, காளை மாட்டை கேரளாவுக்கு இறைச்சிக்காக விற்க முடிவு செய்தார்.

    இதற்காக கடந்த 3-ந் தேதி வியாபாரி, காளை மாட்டை பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு வந்திருந்தார்.

    இதுபற்றி அறிந்ததும், தீபாவும், பொள்ளாச்சி சந்தைக்கு வந்தார். அவருடன் பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க வினரும் வந்தனர்.

    அவர்கள் மாட்டை கேரளாவுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தீபா, மாட்டை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தானே அந்த மாட்டை திரும்ப வாங்கி கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார், அந்த வியாபாரியிடம் இருந்து மாட்டை தீபாவிடம் வாங்கி கொடுத்தனர். பின்னர் அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குளித்தலை நகர புறவழிச்சாலையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்
    • அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளனர்

    கரூர்

    குளித்தலையில் அண்ணா நகர் பகுதியில் குளித்தலை நூலகம் முதல் ரெயில்வே கேட் வரை செல்லும் நகர புறவழிச்சாலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் தற்போது நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த புறவழிச்சாலையில் நடைபாதை அமைக்கும் இடத்தில் சாலையோரம் பல்வேறு மரங்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்க்கப்பட்டு தற்போது இந்த மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளது.இந்தநிலையில் அந்த பகுதியில் நடைபாதை பணிகள் நடப்பதால் அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மேலும் சில மரங்களில் குறியீடு இடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்த நபர்கள் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பால் ஊற்றி மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் மரங்களை வெட்டாமல் பணிகள் மேற்கொள்ள அதிகாரியிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் செக்கானூரணி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    மதுரை அருகே உள்ள தேன்கல்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தேன்கல்பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானுாரணி-திருமங்க லம் மெயின் ரோட்டில் உள்ளது.

    இப்பகுதியில் இறந்தவர் களை மயானத்தில் அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிர தாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்ற னர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மின் மயானமாக மாற்றினால் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

    மேலும் மின் மயானம் அமைந்தால் நாளடைவில் எங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் படிப்படியாக குறையும். பின்வரும் சந்ததிகளுக்கு இப்பகுதி மக்களின் பாரம் பரியம் தெரியாமல்போகும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×