search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மயானம்"

    • செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் செக்கானூரணி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    மதுரை அருகே உள்ள தேன்கல்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தேன்கல்பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியமான மயானம் செக்கானுாரணி-திருமங்க லம் மெயின் ரோட்டில் உள்ளது.

    இப்பகுதியில் இறந்தவர் களை மயானத்தில் அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிர தாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்ற னர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் இருக்கும் மயானத்தை மின் மயானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மின் மயானமாக மாற்றினால் பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

    மேலும் மின் மயானம் அமைந்தால் நாளடைவில் எங்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் படிப்படியாக குறையும். பின்வரும் சந்ததிகளுக்கு இப்பகுதி மக்களின் பாரம் பரியம் தெரியாமல்போகும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மின் மயானம் அமைவதை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×