search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surveillance"

    • பந்தலூரில் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறை மும்முரம்
    • வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனா்.

    இதனால் அவர்கள் ஊருக்குள் திரியும் கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து பந்தலூா் வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் ரிச்மண்ட் பகுதியில் கூண்டு வைத்து கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

    • சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
    • பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். இதனால் சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக நேற்று 1365 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1895 சிறப்பு பஸ்களும், நாளை கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

    எனவே பயணிகளின் பாதுகாப்புக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 300 போலீசார் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையும் மேற்கொண்டனர். இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்க விட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்றும், நாளையும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.
    • எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

    ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கருவடிக் குப்பம் மற்றும் இடையஞ் சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் லாஸ்பேட்டை மற்றும் ஆரோவில் போலீ சார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இவர்கள் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை பகுதி, சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.

    மேலும் வெடி பொருள், கத்தி போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என சோதனையிட்டனர். ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்களிடம் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்து கொள்ள எச்சரித்தனர்.

    இதே போன்ற சோதனை புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி வெடிமருந்து பதுக்கி வைத்தல், குற்ற நடவடிக்கைக்கு திட்டமிடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த சோதனையை 3 மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    • மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
    • திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

    சென்னையில் இந்த ஆண்டு பருவமழையின் போது வெள்ளம் தேங்காமல் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் தேங்கும் தாழ்வான இடங்கள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஆற்றின் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் உடனடியாக அகற்றப்படும்.

    அடையார், கோவளம், கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆற்று பகுதிகளிலும் வெள்ளம் தேங்காமல் தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் நீர் நிலை எச்சரிக்கை பற்றிய சென்சார்கள் உள்ளன. ஆனால் டிரோன் கண்காணிப்பு விரைவான மீட்பு பணிக்கான தகவல்களை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'டிரோன் மூலம் செய்யப்படும் ஆய்வுகள் தாழ்வான பகுதிகளை உடனே தெரிந்து கொள்ள உதவும்.

    மேலும் மழைநீர் வடிகால்களில் பாதிப்புகளையும் சரிசெய்ய முடியும். இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

    கடந்த ஆண்டில், அம்பத்தூரில் 16 இடங்கள், அண்ணாநகரில் 10 இடங்கள் உள்பட மாநகராட்சி முழுவதும் மொத்தம் 37 வெள்ளப் பகுதிகளை சென்னை மாநகராட்சி கண்டறிந்தது. இதில் 28 இடங்களில் 2 அடிக்கும் குறைவாக தண்ணீர் தேங்கியது. இந்த முறை அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • தேயிலை தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காடுகளை அடக்கி வரும் ஆன்பீல்ட் கமாண்டோக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வயநாடு மாவட்ட போலீஸ் அதிகாரி பதம்சிங் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி கேரள வன வளர்ச்சிக் கழக அலுவலகத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து தங்களை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் வயநாடு மாவட்டம் கம்பமாலா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கேரள மாநில வடக்க மண்டல ஏ.டி.ஜி.பி. அஜித்குமார், கம்பமாலா சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை, காடுகளை அடக்கி வரும் ஆன்பீல்ட் கமாண்டோக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வயநாடு மாவட்ட போலீஸ் அதிகாரி பதம்சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தரைமட்டச் சண்டைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை. எனவே தமிழகம் மற்றும் கர்நாடகா வில் உள்ள இந்தப் படையுடன் இணைந்து செயல்பட கேரள காவல்துறை திட்டமிட்டுள்ளது என்றார்.

    • காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மானாசாலை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சுழி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மானாசாலை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தி லிருந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடியை கடந்து செல்ல வேண்டும்.

    விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து முறையான அனுமதி யுடன் குறிப்பிட்ட வழித்த டங்கள் வழியாக அஞ்சலி செலுத்த வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்கும் விதமாக திருச்சுழி, நரிக்குடி மற்றும் மானாச்சாலை ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கண்காணிப்பு காமிராக்களின் காட்சிப் பதிவுகளின் செயல்பாடு களையும் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதி யில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.

    ராமநாதபுரம்

    பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி தியாகி இமானு வேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்ப டுவதையொட்டி பாது காப்பு பணியில் 8 ஆயி ரம் போலீசார் ஈடுபடுத் தப்பட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (11- ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் விரி வான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 30 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 70 துணை சூப்பிரண்டுகள் மற்றும் உ களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கண்டறியப் பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி யாரும் வாகனங்களில் செல்லவோ, வரவோ கூடாது. இதனை மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழா நடைபெறும் பகுதி உள்ளிட்ட பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ காமிரா மூலம் வாகனங்க ளில் வருபவர்கள், வாக னங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்கா ணிக்கப்பட உள்ளனர். நினைவிடத்திற்கு எக் காரணம் கொண்டு யாரும் இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. இதனை மீறி யாராவது வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடந்த காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட வர்கள் என கண்டறியப்பட்ட 350 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஓராண்டுக்கு குற்ற செயலில் ஈடுபடமாட் டோம் என்ற உறுதிமொழி பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இவர்கள் குற்ற செயலில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக் கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுதந்திர தினத்தைெயாட்டிமதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழு–வதும் உள்ள விமான நிலை–யங்கள், வழிபாட்டு தளங் கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள் ளது. மதுரையில் தீவிர பாது–காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை விமான நிலை–யத்துக்கு வரும் வாகனங் களை பிரதான நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங் களை பாதுகாப்பு படையி–னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்ற–னர்.

    விமான நிலைய வளாகத் தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் களுடன் மதுரை விமான நிலையத்தின் உள்பகுதிக–ளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வரு–கின்றனர். முக்கிய பிரமுகர் கள் வரும்போது வழங்கப்ப–டும் பாஸ்களுக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டு உள் ளது.

    விமானங்களுக்கு எரி–பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்கா–ணிப்பு கேமராக்களு–டன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண் காணிக்கப்பட உள்ளது. விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை விமானங் களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள் ளது.

    பயணிகள் எடுத்து வரும் உடைமைகள் ஸ்கேனிங் எந்திரம் மூலம் சோதனை செய்யப்படுகிறது. விமானங் களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவி–ரமாக கண்காணித்து, பல–கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின் றன. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள் நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1.5 மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3.5 மணி நேரத்துக்கு முன்னதா–கவும் வருவதற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி நள்ளி–ரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் ஏற்படமால் தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி–களிலும் மாட்டுத்தா–வணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்க–ளில் போலீஸ் பாதுகாப்பு அதி–கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நட–மாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத் தில், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர பாது–காப்பு பணிகளில் ஈடுபட் டுள்ளனர். சந்தேகத்திற்கிட–மாக சுற்றித் திரிபவர்களை உடனடியாக பிடித்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே தடங்க–ளிலும், நடைமேடைகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் மற்றும் அவர்க–ளது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் சோத–னைக்கு பின்னரே அனும–திக்கப்ப–டுகின்றனர்.

    மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடு–பட்டு வருகின்றனர். நகர் பகுதியின் எல்லையில் உள்ள சோதனை சாவடிக–ளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    மேலும் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப–டுத்தியுள்ளனர்.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவில், அழகர் கோவில்கள் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்க–ளிலும் போலீசார் கண்கா–ணித்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடற்கரையோரம் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிலையில் எக்கியார் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றது.

    இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் . இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் மரக்காணம் காவல்து றை ஆய்வாளர் பாபு தலைமையில் மரக்கா ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, திவாகர் மற்றும் போலீசார் எக்கியார் குப்பம் மீனவர் பகுதிக்கு அந்த பகுதி பொதும க்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய முடியும் என கோரி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இப்பகுதியில் ஆள் நடமா ட்டம் இல்லாத இடத்தில் கள்ளச்சாரா யம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும்.

    புதுச்சேரி:

    புதுவை-தமிழக எல்லை பகுதி அடர்ந்த பசுமையான காடுகளையும் முந்திரி தோப்புகளையும் கொண்ட பகுதியாகும்.

    புதுவையில் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு இங்குள்ள பகுதிகளில் குற்றவாளிகள் தஞ்சம் அடைந்து வருவது வழக்கமாகியுள்ளது. கோட்டகுப்பம் ஆரோவில் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது.

    கோட்டகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருட்டு வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு இது போன்ற பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றனர்.

    மேலும் போலீசார் கண்ணில் படாமல் இருக்க காட்டுப்பகுதிகளில் மது அருந்தும் ரவுடி கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் காரணமாக கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்து வரும் நிலையில் பிரத்தியேக ட்ரோன் கேமரா மூலம் தினமும் இந்த பகுதிகளை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி சின்ன கோட்டகுப்பம் பிரின்ஸ்பர்க் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் ட்ரோன்களை இயக்கி பார்த்தபோது அங்கு ஒரு கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது.

    ட்ரோன் கேமராவில் இருந்து செல்போனுக்கு நேரடியாக வந்த காட்சிகளை வைத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மது அருந்தியவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    ட்ரோன் கேமரா மூலம் தேவைப்படும் பொழுது அடர்ந்த காட்டு பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கண்காணிக்கலாம். இதன் மூலம் ரவுடிகள் நடமாட்டம், ரவுடிகள் தஞ்சம் அடைவது, சூதாட்டம் நடக்கும் இடம், கஞ்சா பயன்படுத்தும் நபர்களை கண்டறிய முடியும். மேலும் முன்கூட்டியே குற்றவாளிகளை கைது செய்யவும் இது உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
    • குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இருந்து வாளையாறு, வேலந்தாவளம், பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழகம், கேரள அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவை வாளையாற்றில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்த இருதரப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரி குணசேகரன், ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி கிருஷ்ணன், வாளையாறு இன்ஸ்பெக்டர் அஜீஸ், வனத்துறை அதிகாரி ஆதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கேரளாவில் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவில் ரேஷன் அரிசி வாங்கும் வியாபாரிகள் பற்றிய விவரங்களை சேகரிப்பது, அரிசி கடத்தி தப்பிய குற்றவாளிகளை தேடுவது, ஜாமீனில் வந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்வது, பஸ் மற்றும் ரெயில் மூலம் யார் யார் எல்லாம் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து தமிழகம், கேரளா எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×