search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன் கேமரா"

    • கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் .

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் கடற்கரையோரம் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன் எக்கியார் குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர்களில் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார். இந்நிலையில் எக்கியார் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல்கள் கிடைத்து வருகின்றது.

    இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார் . இதனை தொடர்ந்து கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் மரக்காணம் காவல்து றை ஆய்வாளர் பாபு தலைமையில் மரக்கா ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, திவாகர் மற்றும் போலீசார் எக்கியார் குப்பம் மீனவர் பகுதிக்கு அந்த பகுதி பொதும க்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்ய முடியும் என கோரி விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இப்பகுதியில் ஆள் நடமா ட்டம் இல்லாத இடத்தில் கள்ளச்சாரா யம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிங்கவரம் கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது.
    • கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சிங்கவரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. இதுமிகவும் பழமை வாய்ந்ததாகும். கோவிலில் கற்பாறையால் ஆன மூலவர் மட்டுமல்லாமல் பஞ்சலோக சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.25 மணியளவில் கோவில் உள்ள மலை மீது டிரோன் கேமரா ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த டிரோன் சுமார்10 நிமிடங்கள் பறந்து அப்பகுதியை படம் எடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் மலையின் பின்பகுதியில் டிரோன் கேமரா மறைந்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சமூக விரோதிகள் யாராவது கோவிலில் கொள்ளை அடிக்க சதி திட்டம் திட்டுகிறார்களா என்ற கோணத்தில் அறநிலைத்துறையினர் இது குறித்து செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இதேபோல் சிங்கவரத்தை அடுத்த மேளச்சேரி காப்புக்காட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலை சுற்றியும் டிரோன் பறந்ததாக கூறப்படுகிறது.

    • 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனததுறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
    • புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது.

    தொழிலாளர்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வேட்டையாடியதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புலியை பிடிக்க வனதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நெல்லையிலிருந்து வந்த விரைவு படையினரும் தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக தேடும் பணி நடந்தது.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா மூலமாக தேடி வருகிறார்கள். ஆனால் புலி சிக்க வில்லை. இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், பேச்சிப்பாறை சிற்றாறு பகுதிகளில் டிரோன் கேமரா மூலமாக கண்கா ணிக்கப்பட்டது. டிரோன் கேமராவிலும் புலி நடமாட்டம் தென்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்ததை அடுத்து புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆடுகளை மட்டும் பொதுமக்கள் பத்திரமாக அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • 30 லிட்டர் சாராயம், பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    ஆரணி உட்கோட்ட துணை போலீஸ் சுப்பிரண்டு வி.ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து டிரோன் கேமரா உதவியுடன் பள்ளகொல்லை கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுப்படனர்.

    மூட்டையுடன் பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் சாராயம் கடத்தி வந்த காரமலை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 25) என்பது தெரிந்தது. பின்னர் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 30 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுசம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.
    • காவல் துறையினர் சுமார் 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

    திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

    குறிப்பாக இந்த டிரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல்
    • வனத்துறையினர் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறி செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மகா தீபத்தின் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் மலை உச்சியில் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது தலைமையிலான வனத்துறையினர் மலை உச்சிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மலையில் கந்தாசிரமம் அருகில் வெளிநாட்டினர் 3 பேர் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதைக் கண்டு அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் ஒருவர் மட்டும் படம் பிடித்ததாகவும் மற்ற 2 பேர் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கேமரா வைத்திருந்த நபரை மட்டும் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்து டிரோன் கேமரா, செல்போன், 360 டிகிரி படம் பிடிக்கக்கூடிய பிரத்யோக கேமரா மற்றும் படம் பிடிக்க வைத்திருந்த பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சரேஜ் (வயது 34) என்பதும், அவர் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அருகே உள்ள அண்ணாமலை நகரில் தங்கியிருப்பது. தெரியவந்தது.

    தனக்கு மலை ஏற தடை விதித்து இருப்பது தெரியாது என்றும், தனது யூடியூப் ேசனலில் பதிவிடுவதற்காக படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    மலையின் உச்சியில் டிரோன் கேமரா மூலம் வெளிநாட்டவர் படம் பிடித்த சம்பவத்தினால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×