டிரோன் கேமரா மூலம் ஆய்வு - சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டம் தென்படவில்லை

2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனததுறையினர் நடவடிக்கை எடுத்தனர்.புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது
டிரோன் கேமரா மூலம் ஆய்வு - சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டம் தென்படவில்லை
Published on

நாகர்கோவில் :

பேச்சிப்பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புலி அட்டகாசம் செய்தது.

தொழிலாளர்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வேட்டையாடியதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து புலியை பிடிக்க வனதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட நவீன கேமராக்கள் அமைக்கப்பட்டும் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. 2 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் புலியை பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க எலைட் படையினரும், டாக்டர்கள் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நெல்லையிலிருந்து வந்த விரைவு படையினரும் தேடி வருகிறார்கள். பேச்சிப்பாறை மூக்கரைக்கல் பகுதியில் டிரோன் கேமரா மூலமாக தேடும் பணி நடந்தது.

இன்று 2-வது நாளாக வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா மூலமாக தேடி வருகிறார்கள். ஆனால் புலி சிக்க வில்லை. இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், பேச்சிப்பாறை சிற்றாறு பகுதிகளில் டிரோன் கேமரா மூலமாக கண்கா ணிக்கப்பட்டது. டிரோன் கேமராவிலும் புலி நடமாட்டம் தென்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்ததை அடுத்து புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆடுகளை மட்டும் பொதுமக்கள் பத்திரமாக அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com