search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer vacation"

    திருப்பதியில் கோடை விடுமுறையில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.86 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.
    திருமலை:

    திருப்பதியில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டு பேசினார்.

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தலா 30 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமையில் தலா 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. செவ்வாய், புதன், வியாழக்கிழமையில் தலா 17 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    திருமலையில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக உணவு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தினமும் தலா 10 ஆயிரம் பேருக்கு மேல் உணவு வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் ஒருநாளைக்கு திருமலையில் 2 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், அன்னதானக்கூடத்தில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் ஒருநாளைக்கு அன்னதானக்கூடத்தில் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2-ல் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் 26 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு மே மாதம் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 1 கோடியே 5 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 70 லட்சம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் 70 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.78 கோடியே 47 லட்சம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.86 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம் திவ்ய தரிசனத்தில் 5 லட்சத்து 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறையில் இந்த ஆண்டு மே மாதம் 5 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் டைம் ஸ்லாட் அல்லாமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் என மொத்தம் 55 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கைரானா மற்றும் நூர்புர் இடைத்தேர்தலில் தோற்றதற்கு கோடை விடுமுறையில் தொண்டர்கள் டூர் போனதே காரணம் என உத்தரப்பிரதேச பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி விளக்கமளித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.

    எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். “கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். இதனால், இடைத்தேர்தலில் தோற்றோம்” என லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாற்றப்பட்ட சீருடையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து விலைஇல்லா பாடப்புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. கடந்த மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த மாதம் 23-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவு 30-ந் தேதியும் வெளியிடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு கடந்த மாதம் 30-ந்தேதி வெளியிட்டதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த சேர்க்கை முடிந்த பின்னர் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும்.



    நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் காலையில் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு அவர்களின் பெற்றோர்களுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் இறைவணக்க பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் முதன் முதலாக சேர்ந்துள்ள பெரும்பாலான குழந்தைகள் பழக்கம் இல்லாத இடம் என்பதால் வகுப்புகளுக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதன. அந்த குழந்தைகளுக்கு சாக்லெட், மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

    பெற்றோர்கள் பலர் பள்ளிக்கூடம் அருகிலேயே இருந்து பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

    மாணவர்-மாணவிகள் அரசு அறிவித்த சீருடைகளை அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். அவர்கள் அணிந்து இருந்த சீருடைகள் தனியார் பள்ளிச் சீருடைகள் போல சிறப்பாக இருந்தன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விலை இன்றி கொடுக்கப்பட்டன. 1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. 
    சுமார் ஒரு மாதகால கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். #SchoolsReopend
    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், மாணவ மாணவிகள் விடுமுறையை கொண்டாடிவிட்டு பள்ளிக்கு இன்று உற்சாகமாக வருகை தந்தனர். இன்றே, பாடபுத்தகம், சீருடை உள்ளிட்டவை வழங்க பள்ளிக்கல்வித்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்கும் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை இறை வணக்கத்திற்கு பின்னர் மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். 
    ×