search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reopened"

    • காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
    • புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி, இணைப்பு தொழிற்சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் ஓட்டல் செண்பகாவில் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். கேரளா மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள், இணைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்க தேசிய தலைவராக மீண்டும் சஞ்சீவரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. மாநாட்டில் அகில இந்திய துணைத்தலைவராக சந்திரசேகரன், புதுவை மாநில தலைவராக ஜி.ஆர்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

    ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு ஐ.என்.டி.யூ.சி கண்டனம் தெரிவிக்கிறது. பா.ஜனதா அரசை தூக்கியெறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி. புதுவை ஸ்பின்கோ ஆலையை மீண்டும் அரசே இயக்க வேண்டும். தனியார் பெயிண்ட் ஆலையில் சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும். அவரை மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்தார். #TuticorinSterlite
    புதுடெல்லி:

    வேதாந்தா நிர்வாகத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கு நிருபர்கள் அவரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரம் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் தற்போது போராட்ட அனல் வீசி வருகிறது. அந்த அனல் ஓய்ந்த பிறகு நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம். அந்த பகுதி மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் எங்களை பற்றி தவறான செய்திகள் தரப்படுகின்றன. தமிழக அரசு எங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த உண்மைகளை விரைவில் மக்களிடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். எங்கள் நிறுவனம் எப்போதும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கும்.

    எங்கள் மீது உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் எங்கள் ஆலையில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு அமிலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்பதுதான். உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் எதையும் நாங்கள் காற்றில் கலக்க விடுவது இல்லை. தூத்துக்குடி பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு அமிலம் மிகவும் அதிகமாக உள்ளது.

    எங்கள் ஆலையில் கழிவாக வெளியேறும் கந்தக அமிலத்தை நாங்கள் வணிக ரீதியாக மாற்றி அதை நாங்கள் விலைக்கு விற்கிறோம். அதை நாங்கள் காற்றில் கலக்க விடுவது இல்லை. அதனை விற்று காசாக்குகிறோம்.

    ஆனால் கந்தக அமிலத்தை அதிகமாக வெளியிடும் அனல் மின்நிலையங்கள் அதனை வர்த்தக ரீதியாக விற்பது இல்லை. காற்றில் கலக்க விடுகின்றன. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை காட்டிலும் அதிகமான சுற்றுச்சூழல் மாசு இந்த அனல் மின்நிலையங்களால்தான் ஏற்படுகின்றது.

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவினால் புற்றுநோய் ஏற்படும் என்பது தவறான செய்தி ஆகும்.

    எங்கள் ஆலையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து மறு உபயோகத்துக்கு எடுத்துக்கொள்கிறோம்.

    எங்களுக்கு எதிராக மிகவும் தவறான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். சமூக விரோதிகளும், வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் சில தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து நாட்டில் கலகம் விளைவிக்கிறார்கள்.

    எங்களுக்கு எதிரான பொய்ப்பிரசாரங்களை முறியடித்து பிரச்சினையை சட்டரீதியாக அணுகி, ஸ்டெர்லைட் ஆலையை ஒருசில மாதங்களில் மீண்டும் திறப்போம்.

    இவ்வாறு தலைமை செயல் அதிகாரி ராம்நாத் கூறினார். அப்போது ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடன் இருந்தனர்.  #TuticorinSterlite #tamilnews 
    சுமார் ஒரு மாதகால கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். #SchoolsReopend
    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், மாணவ மாணவிகள் விடுமுறையை கொண்டாடிவிட்டு பள்ளிக்கு இன்று உற்சாகமாக வருகை தந்தனர். இன்றே, பாடபுத்தகம், சீருடை உள்ளிட்டவை வழங்க பள்ளிக்கல்வித்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்கும் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை இறை வணக்கத்திற்கு பின்னர் மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். 
    ×