search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை
    X

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு - மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை

    சுமார் ஒரு மாதகால கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். #SchoolsReopend
    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், மாணவ மாணவிகள் விடுமுறையை கொண்டாடிவிட்டு பள்ளிக்கு இன்று உற்சாகமாக வருகை தந்தனர். இன்றே, பாடபுத்தகம், சீருடை உள்ளிட்டவை வழங்க பள்ளிக்கல்வித்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்கும் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டது. காலை இறை வணக்கத்திற்கு பின்னர் மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். 
    Next Story
    ×