search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer vacation"

    • பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர்.
    • இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.

    லாச்சுங்:

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரோடுகள் சேதமாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட 500 பேரையும் தாங்கள் தங்கி இருந்த 3 ராணுவ முகாம்களுக்கு அழைத்துசென்று தங்க வைத்தனர். அவர்களுக்கு சூடான உணவு, காபி மற்றும் குளிரை தாங்கும் உடைகளை வழங்கப்பட்டது.

    • கலெக்டர் அறிவுறுத்தல்
    • ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது

    வேலுார்:

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, தபால் துறை யின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' மூலம், பள்ளிகளி லேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள 'ஸ்மா ர்ட் போன்' மற்றும் பயோ மெட்ரிக் சாத னம் மூலம், தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி, விரல்ரேகை மூலம் ஆதார் இணைப் புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

    இந்த வசதி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலிஆட்டம், முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
    • பெயர்களை நாளை ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    "இல்லம் தேடிக்கல்வி" மற்றும் பள்ளிகளில் பயிலும் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் கோடை விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிடத் தக்க வகையில், தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால இலவசப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) முதல் 18-ந் தேதி ( வியாழக்கிழமை ) வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், அழகிய கையெழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி முதலானவை இலவசமாக வழங்கப் பட உள்ளன. மேலும் பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலிஆட்டம், பம்பரம் விடுதல், சிலம்பாட்டம், செஸ், சுண்டாட்டம், குதியாட்டம் (ஸ்கிப்பிங்) முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.

    இம்முகாமில் பங்கேற்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பெயர், வயது, படிக்கும் வகுப்பு முதலான விவரங்களைத் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், நூலகரிடம் நேரிலோ அல்லது 99764 27038, 94448 60511 ஆகிய புலன (வாட்ஸ் ஆப்) எண்களிலோ, பதிவு செய்து கொள்ளலாம்.

    பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பெயர்களை நாளை ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    14 ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நூலக வாசிப்பு நடைபெறும். 15-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை வண்ணம் தீட்டுதல் நடைபெறும். இதையடுத்து 10.30 மணி முதல் 11.30 மணி வரை சதுரங்கம், ஸ்கிப்பிங் , 11.30 முதல் 12 மணி வரை நூலக வாசிப்பு நடைபெறும்.

    16-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை அழகிய கையெழுத்துப் போட்டி, 10 மணி முதல் 11 மணி வரை கேரம் பலகை, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் நடைபெறும்.

    17-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை சிலம்பம், 10 மணி முதல் 11 மணி வரை கதைசொல்லல், ஓவியம் நடைபெறும்.

    18-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கோலாட்டம், கும்மி அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மேல் நிறைவு விழா நடைபெறும். அப்போது சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சிகள் நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

    இப்பயிற்சி முகாமில் ஓவிய பயிற்சி, கலை பயிற்சி ,கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, காகிதக்கலை பயிற்சி, பேச்சுக்கலை பயிற்சி, எழுத்துக்கலை பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 75024 33751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    • பள்ளிகள் முழு ஆண்டு தேர்வு இன்னும் சில நாட்கள் நிறைவடைய உள்ளது. பின்னர் கோடை விடுமுறை துவங்கிவிடும்.
    • கூடுதல் ெரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    கோடை விடுமுறை துவங்க உள்ளதை ஒட்டி உடுமலை வழியாக கூடுதல் ெரயில்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

    கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில் நிலையம் உள்ளது.இந்த வழித்தடம் அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் தற்போது குறைந்த அளவிலான ெரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.கோவை- மதுரை பாலக்காடு- திருச்செந்தூர் பாலக்காடு -சென்னை, திருவனந்தபுரம்- மதுரை ஆகிய ெரயில்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலைப் பகுதியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிற்சாலை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் சொந்த ஊருக்கு ெரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர் ஆனால் அவர்கள் செல்ல போதுமான ெரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை .ஆனால் அவர்கள் அதிக செலவு செய்து பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது .பள்ளிகள் முழு ஆண்டு தேர்வு இன்னும் சில நாட்கள் நிறைவடைய உள்ளது. பின்னர் கோடை விடுமுறை துவங்கிவிடும்.

    மாணவர்கள், பொதுமக்கள் சுற்றுலா செல்ல விரும்புவர் .அவர்கள் தற்போது இயக்கப்படும் ெரயில்களில் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்கள் ,வெளி மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் கோவை -திண்டுக்கல் வழித்தடத்தில் கூடுதல் ெரயில்கள் இயக்கத்துக்கு ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக ெரயில்வேக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் . பொதுமக்களும் அதிக அளவில் பயன்பெறுவர். எனவே கூடுதல் ெரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடகள சங்கத்தின் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
    • அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூர் தடகள சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவரும், திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஜூன் மாதம் 2-வது திருப்பூர் மாவட்ட சீனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளையும், ஆகஸ்டு மாதம் 5-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளையும் போட்டோ பினிசிங் எலக்ட்ரானிக் மெசர்மெண்ட் முறையில் நடத்துவது, அதிகப்படியான மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்வது, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தடகள போட்டிகள் நடத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலமாக கிடைக்கும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் அனைத்து பள்ளி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர், தடகள பயிற்சியாளர்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யும்முறை, உணவு வகைகள், பயிற்சி முறைகள், காயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றி பயிற்சி முகாம் நடத்துவது, அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி முகாம் நடத்துவது, திறமையான, பொருளாதாரத்தில் பின்தங்கிய தடகள வீரர்களை கண்டறிந்து உதவிகள் அளிப்பது, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பயண வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

    • ரோஜா பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்பு
    • பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர் கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை தந்த மகிழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆர்ப்பரித்தனர்.

    கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த மழலையர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.சில குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அடம் பிடித்து அழுது கொண்டே சென்றனர். அவர்களை பெற்றோர்கள் சமாதானம் செய்ததை காணமுடிந்தது.

    சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாணவ மாணவிகளுக்கு பூக்கள் வழங்கியும் மேளதாளத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,266 அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. தொரப்பாடி மற்றும் அணைக்கட்டு அரசு பள்ளிகளில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். 

    • தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து 2022-23-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்குவதற்காக நாளை மறுநாள் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    • கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    விழுப்புரம்:

    கொரோனா காரணமாக பள்ளி- கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளி- கல்லூரிகள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன. கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் கொரோனா ஊரடங்கினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாகவும் கல்வி கற்பிக்க அரசு வழிவகை செய்தது.

    இந்நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வுகள் கடந்த மே மாதம் முடிந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டது. மீண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது.

    அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து 2022-23-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்குவதற்காக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி மாணவ- மாணவிகளின் நலனை கருதி அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும்படி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதி உதவி பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், பகுதிநேர நிதி உதவி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி இந்த பள்ளிகளின் வளாகம், வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறைகள், கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    திருப்பதியில் கோடை விடுமுறையில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.86 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.
    திருமலை:

    திருப்பதியில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டு பேசினார்.

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தலா 30 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமையில் தலா 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. செவ்வாய், புதன், வியாழக்கிழமையில் தலா 17 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    திருமலையில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக உணவு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தினமும் தலா 10 ஆயிரம் பேருக்கு மேல் உணவு வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் ஒருநாளைக்கு திருமலையில் 2 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், அன்னதானக்கூடத்தில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் ஒருநாளைக்கு அன்னதானக்கூடத்தில் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2-ல் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் 26 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு மே மாதம் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 1 கோடியே 5 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 70 லட்சம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் 70 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.78 கோடியே 47 லட்சம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.86 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம் திவ்ய தரிசனத்தில் 5 லட்சத்து 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறையில் இந்த ஆண்டு மே மாதம் 5 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் டைம் ஸ்லாட் அல்லாமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் என மொத்தம் 55 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கைரானா மற்றும் நூர்புர் இடைத்தேர்தலில் தோற்றதற்கு கோடை விடுமுறையில் தொண்டர்கள் டூர் போனதே காரணம் என உத்தரப்பிரதேச பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி விளக்கமளித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.

    எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். “கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். இதனால், இடைத்தேர்தலில் தோற்றோம்” என லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாற்றப்பட்ட சீருடையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து விலைஇல்லா பாடப்புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. கடந்த மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த மாதம் 23-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவு 30-ந் தேதியும் வெளியிடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு கடந்த மாதம் 30-ந்தேதி வெளியிட்டதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த சேர்க்கை முடிந்த பின்னர் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும்.



    நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் காலையில் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு அவர்களின் பெற்றோர்களுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் இறைவணக்க பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் முதன் முதலாக சேர்ந்துள்ள பெரும்பாலான குழந்தைகள் பழக்கம் இல்லாத இடம் என்பதால் வகுப்புகளுக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதன. அந்த குழந்தைகளுக்கு சாக்லெட், மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

    பெற்றோர்கள் பலர் பள்ளிக்கூடம் அருகிலேயே இருந்து பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

    மாணவர்-மாணவிகள் அரசு அறிவித்த சீருடைகளை அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். அவர்கள் அணிந்து இருந்த சீருடைகள் தனியார் பள்ளிச் சீருடைகள் போல சிறப்பாக இருந்தன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விலை இன்றி கொடுக்கப்பட்டன. 1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. 
    ×