search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools Open"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டம்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு 1300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது.
    • வெப்ப அலையால் அங்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகின்றன.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் கோடை விடுமுறை முடிந்து மேல்நிலைப் பள்ளிகள் வரும் 5-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகள் 7-ம் தேதியும் திறக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

    ஆனால் மாநிலத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது. அங்கு இந்த மாதத்தின் முதல் பாதி வரை வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இந்நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றார்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது
    • பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர்

    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு நடந்தது. கடந்த 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 12 நாட்களும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்களும் விடுமுறை விடப்பட்டிருந்தது. அதன்படி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பள்ளிகளில் திருத்தப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 7-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவக்கால விலையில்லா பாடப்புத்தக்கங்களும், பாட குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன. 8, 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.




    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • 1 முதல் 5-ம் வகுபு மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    சென்னை:

    1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 23-ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது.

    அரையாண்டு தேர்வு முடிந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று

    பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    • லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு திரும்பினர்.
    • முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டன.

    மணிலா :

    சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தது.

    நீண்ட காலமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால் மாணவர்களின் கல்வி சூழலை மோசமாக்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிலிப்பைன்சில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு திரும்பினர். முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் சரிபாதி அளவு மட்டுமே மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பள்ளிகள் நவம்பர் மாதம் திறக்கப்படும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதி.

    கொழும்பு :

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

    இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி உள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு அனுமதி அளித்து உள்ளது.

    எனினும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

    • கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

    கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 996 அரசு பள்ளிகள், 493 அரசு உதவி ெபறும் பள்ளிகள், 253 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 1,742பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.

    மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வழங்கப்பட்டது. பல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை வரவேற்க தோரணங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    • ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    கோடை விடுமுறை முடிந்து நாளை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக துவக்க, நடுநிலைப்பள்ளிகள் மட்டும் துவங்கப்பட உள்ளதால், பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டது.

    இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தலைமையில் குழு அமைத்து சுகாதாரம், கட்டுமான பணிகள் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி வகுப்பறை, வளாகம், மைதானம் சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது.3 வாரங்களாக பள்ளி செயல்படாததால், மின் வயர்கள், குடிநீர், மேல்நிலை, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி நிலை, தண்ணீர் இருப்பு, கழிப்பிடங்கள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அவை சுத்தப்படுத்தப்பட்டன.

    பள்ளி திறக்கும் நாளிலே புத்தகங்கள் வழங்கவும், அட்மிஷன் துவங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு பள்ளிக்கு தலா இரு ஆசிரியர்களுக்கு பணி, பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் அதிக மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் மாநகராட்சி சுகாதார ஊழியர் மூலமும், புறநகரில் மண்டல அலுவலகங்களில் இருந்து ஊழியர்களை அனுப்பியும் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள துவக்க, நடுநிலைப்பள்ளிகள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் போது, தூய்மை, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி கல்வித்துறை, பெற்றோர், ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் மூலம் தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள் செய்து தருகின்றனர். ஓரிரு மாதங்களில் மீண்டும் பழைய நிலை வந்து விடுகிறது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் பள்ளிக்கென தனியே ஒரு சுகாதாரக் குழு அமைத்து,தூய்மை பணி, பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்து விட்டால் பள்ளி திறப்பு நாளில் இருப்பது போன்று பிற நாட்களிலும் பள்ளிகள் பளிச்சிடும். தூய்மை, பராமரிப்பு பணி செயல்பாடுகள் வரும் காலங்களில் தொடர வேண்டும்என்றனர்.

    • தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன.
    • பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறைகளின்போதும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதற்கிடையே, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று 1,450 பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
     
    கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்தது.

    பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1- ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் அனைத்துப் பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வரும் 15-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாற்றப்பட்ட சீருடையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து விலைஇல்லா பாடப்புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
    சென்னை:

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. கடந்த மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த மாதம் 23-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு முடிவு 30-ந் தேதியும் வெளியிடப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு கடந்த மாதம் 30-ந்தேதி வெளியிட்டதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த சேர்க்கை முடிந்த பின்னர் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும்.



    நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் காலையில் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு அவர்களின் பெற்றோர்களுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் இறைவணக்க பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.

    பள்ளிகளில் முதன் முதலாக சேர்ந்துள்ள பெரும்பாலான குழந்தைகள் பழக்கம் இல்லாத இடம் என்பதால் வகுப்புகளுக்கு செல்லமாட்டேன் என்று அடம்பிடித்து அழுதன. அந்த குழந்தைகளுக்கு சாக்லெட், மிட்டாய்களையும், விளையாட்டு பொருட்களையும் ஆசிரியர்கள் கொடுத்தனர்.

    பெற்றோர்கள் பலர் பள்ளிக்கூடம் அருகிலேயே இருந்து பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

    மாணவர்-மாணவிகள் அரசு அறிவித்த சீருடைகளை அணிந்து பள்ளிகளுக்கு வந்தனர். அவர்கள் அணிந்து இருந்த சீருடைகள் தனியார் பள்ளிச் சீருடைகள் போல சிறப்பாக இருந்தன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விலை இன்றி கொடுக்கப்பட்டன. 1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. 
    ×