search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
    X

    இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

    • இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
    • வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதி.

    கொழும்பு :

    இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

    இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி உள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு அனுமதி அளித்து உள்ளது.

    எனினும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

    Next Story
    ×