search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகள் இன்று திறப்பு
    X

    விருதுநகரில் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த சிறுமிகள். 

    பள்ளிகள் இன்று திறப்பு

    • கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
    • மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.

    கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 996 அரசு பள்ளிகள், 493 அரசு உதவி ெபறும் பள்ளிகள், 253 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 1,742பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.

    மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வழங்கப்பட்டது. பல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை வரவேற்க தோரணங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    Next Story
    ×