search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Care"

    • அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
    • இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

    அழகாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் இயற்கையான அழகைப்பெற யாரும் முயற்சி எடுப்பதில்லை. உடலை நன்றாக பராமரித்தாலே அழகாக தோற்றமளிக்கலாம். இயற்கை தோல் பராமரிப்பு என்பது மிகவும் எளிதானது. இயற்கையான விதிமுறைகளை பின்பற்றுவதால் உங்களது தோலுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது.

    இயற்கை பராமரிப்பை மேற்கொண்டால் பாதிப்பும் இருக்காது. பலனும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தினமும் இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். புத்தம் புதிய பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரைகளை சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க்புட் அயிட்டங்களை தொடவே கூடாது.

    கூடுமானவரை செயற்கை மேக்-அப் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அவசியம் செய்ய வேண்டும் என்றால், நீண்ட நேரம் நீடித்து இருக்கக் கூடிய மேக்-அப்பை செய்யக் கூடாது. எப்போதும் ரிலாக்சாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். சிறிது நேரமாவது தியானம் அல்லது யோகா செய்ய வேண்டும்.

    செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உங்களின் தோல் மருத்துவரை 6 மாதத்திற்கு ஒருமுறையாவது கன்சல்ட் செய்ய வேண்டும்.

    இந்த எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதும், உங்களது முகம் மட்டும் அல்ல உடலின் அனைத்து தோல் பகுதிகளும் மிருதுவாகவும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும். தோலை பொலிவுபடுத்துவதற்காக செயற்கை அழகுசாதன பொருட்களை தேடிப்போக வேண்டியதில்லை. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் நீங்கள் அவஸ்தைப்படவும் தேவையில்லை.

    அதுமட்டுமல்ல நீண்டகாலத்திற்கு இந்த பலன் நீடித்து இருக்கும். வயதான காலத்திலும் கூட சில ஆண்களும், பெண்களும் பார்ப்பதற்கு பளபளவென்று காணப்படுவார்கள். அவர்களின் தோலில் சுருக்கமோ, சொர சொரப்புத்தன்மையோ இருக்காது. அதற்கு காரணம், இது போன்ற இயற்கை பராமரிப்புதான். எனவே நீங்களும் இந்த பராமரிப்பை கடைபிடித்தால் வயதான காலத்திலும் உங்களது தோல் பார்ப்பதற்கு இளமையானதாகத் தோன்றும்.

    • சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
    • சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    சுவாசம் மேம்படும்

    துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.

    சரும பாதுகாப்பு

    துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    செரிமானம்

    அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.

    அழற்சி

    துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.

    மன நலம்

    துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.

    ரத்த சர்க்கரை

    துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.

    எடை மேலாண்மை

    துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.

    இதய ஆரோக்கியம்

    துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    • பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
    • சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.

    வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

    ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

    பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

    பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

    மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

    சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

    சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

    சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

    • வெண்ணையில் மிக அதிக அளவில்வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
    • உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.

    வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது.

    பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால் ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறை இதை செய்யலாம்.

    ஒரு கப் தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தினர் இதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவி, உலர விட்டு கழுவினால் மெத்தென்று மிருதுவாக ஈரப்பதத்துடன் உங்களுடைய சருமம் நீடிக்கும்.

    ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெயை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.

    ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய் இரண்டும் கலந்த கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதுப்பிக்கிறது. அத்துடன் ரோஸ் வாட்டர் சருமத்தினை நீரேற்றமாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது.

    இவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

    • வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
    • வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.

    வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

    ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

    வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

    வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

    • ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
    • இது கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

    ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும், பொடுகு போன்ற தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.

    பொதுவான அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையில் அமில-கார சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

    பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய இந்த வினிகரை பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பாப்போம்.

    உங்கள் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டாலோ, அதிகமாக கொட்டினாலோ நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி பார்க்கலாம். இது உங்கள் கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும். பின்னர் ஒரு குவளை தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கடைசியாக ஒரு முறை மீண்டும் அலசவும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.

    சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5 - 10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் பளபளவென்று பொலிவடையும். ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது

    ஆப்பிள் சீடர் வினிகரைக் (apple cider vinegar ) கொண்டு தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் ஆப்பிள் போன்ற கன்னங்களைப் பெறலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சி கிடைக்கும்.

    அனைத்து வித சருமத்திலும் ஆப்பிள் சீடர் வினிகர் செயலாற்றுகிறது. வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான தோற்றம் தக்கவைக்கப்படும்.

    • தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.
    • வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பற்றி பார்க்கலாம்.

    தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது சருமத்திற்கு ஊட்டமளித்து, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ரசாயனம் இல்லாத மேக்கப்-க்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பற்றி பார்க்கலாம்.

    தயிர், தேன் தலா 1 தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தில் நன்றாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள், வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தணிக்கும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.

    சமையலறையில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிப் புது பொலிவை தரும்.

    1 டீஸ்பூன் ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து, அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாகத் தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். அதை வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது. தேன் மற்றும் ஓட்ஸ், இவை இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. ஓட்ஸ், நம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்து புதிய பொலிவைத் தரும் அதே சமயம், தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.

    ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

    ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

    • பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.
    • ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது.

    ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:

    சாமந்திபூ: இது வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகுபெற செய்கிறது.

    தேவையானவை: சாமந்தி பூக்கள் 3, பால் 1 தேக்கரண்டி, யோகர்ட் - 1 தேக்கரண்டி, துருவிய கேரட் -2 தேக்கரண்டி.

    செய்முறை: முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி பூ இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும்.

    ரோஜா பூ

    தேவையானவை: ரோஜாப் பூ- 1, பால் - 1 தேக்கரண்டி, கோதுமை தவிடு - 1 தேக்கரண்டி.

    செய்முறை: முதலில் ரோஜாப் பூவின் இதழை நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவிடையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெறும்.

    செம்பருத்தி பூ: செம்பருத்தி பூ முடி பிரச்னையை சரி செய்வதோடு, முக அழகை பராமரிக்க உதவுகிறது.

    தேவையானவை: செம்பருத்தி பூ -1, தயிர் - 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி- 2 தேக்கரண்டி, ரோஜா பூ - 1.

    செய்முறை: முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும்.

    • நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன்.
    • ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம்.

    முகத்தில் தோன்றும் பருக்களே பொதுவாக முக அழகை மாற்றி கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இயற்கையாக இவற்றை நீக்கி பழைய தோற்றத்தை பெறுவது என்பதே கடினமான ஒன்று. ஆனால், அதைவிட மன அழுத்தம் தரக்கூடிய ஒன்று திடீரென்று அல்லது இருபதுகளின் பாதியிலேயே ஏற்படும் முதுமை தோற்றம்.

    முகத்தில் ஏற்படும் சுருக்கங்களும் இதில் முக்கிய இடம் பெறுகிறது. ஆரோக்கியமான சருமம் பெற இவற்றை சரி செய்து கொள்வது என்பது மிகவும் அவசியமானதாகிறது. இதற்கு கொலாஜன் அவசியமாகிறது.

    கொலாஜன் என்பது என்ன?

    ''நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன்(Collagen). இந்த புரதச்சத்து சருமங்களில் அதிகமாக இருக்கும். ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் உற்பத்தியாகிறது.

    பொதுவாக கொலாஜன் என்பது உடலுக்கு மிக அவசியமாகிறது என்றாலும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. நம் உணவுமுறையில் சில மாற்றங்களை செய்யும்போது நம் உடலில் கொலாஜன் இயற்கையாகவே உற்பத்தியாகும். உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்தாலும் சரியான உணவுமுறையின் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.''

    கொலாஜனின் முக்கியத்துவம் என்ன?

    ''கொலாஜன் உற்பத்தி நம் உடலில் சீராக இருக்கும்பட்சத்தில் சுருக்கங்கள், முதுமைத் தோற்றம் போன்றவை இருக்காது. கொலாஜன் சருமத்தை மிருதுவாகவும், அழகாகவும், ஈரப்பதத்துடனும், இறுக்கமாகவும் வைக்க உதவுகிறது. சில நேரங்களில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும்போது சருமத்தில் சுருக்கங்கள், தொய்வுகள், நெற்றி மற்றும் கண்களை சுற்றி சிறு சிறு கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும். சருமத்தில் ஆங்காங்கே தொங்கி முதுமை தோற்றத்தையும் உண்டாக்கும். இந்த பிரச்னையை சரியான உணவு பழக்க வழக்கத்தின் மூலம் சரி செய்யலாம்.''

    கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா?

    ''ஃபேஷியல் மசாஜ்கள், மாய்சரைஸர்கள், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவு கொலாஜன் உற்பத்தி ஆகும். வைட்டமின் சி க்ரீம்கள் மற்றும் ரெட்டினால் இருக்கும் க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் 15-லிருந்து 20 சதவீதம் வரை கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.

    இது தவிர மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க மாத்திரைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. கடைகளில் சில தவறான கொலாஜன் உற்பத்தி மாத்திரைகளும் கிடைக்கின்றன. அதனால் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியம். இது மருத்துவர் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே எடுப்பதால் இதில் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.''

    கொலாஜன் மிகுந்துள்ள உணவுகள் என்னென்ன?

    ''உணவு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். நேரடியாக உடலில் கொலாஜன் உற்பத்தி குறையும்போது சரியான உணவுப்பழக்கம் கொலாஜனை உற்பத்தி செய்ய வழி வகுக்கும்.

    பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு போன்றவை கொலாஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. வைட்டமின் சி மிகுந்துள்ள சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழ வகைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போதும் கொலாஜன் உற்பத்தி தூண்டப்படும்.

    இது தவிர அசைவ உணவில் முட்டையின் வெள்ளைக்கரு, மீன் வகைகள், சிப்பி மீன் வகைகள் போன்றவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். மிக பழமையான மற்றும் அனைவரும் அறிந்த ஆட்டுக்கால் சூப் போன்றவற்றிலும் கொலாஜன் உற்பத்தி மிகுதியாக இருக்கும்.''

    கொலாஜன் உற்பத்தியை கெடுக்கும் உணவுகள் என்ன?

    ''அரிசி, மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்பு வகைகள், வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தொடர்ந்து உண்ணும்போது உடலில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும். எனவே, சருமத்தின் ஆரோக்கியம் காக்க முடிந்தவரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.''

    • வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    • பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

    தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும்.

    பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்:

    தேவையானவை:

    அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன்

    பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன்

    மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச் என மிளிரும்.

    முகச்சுருக்கத்துக்கான பேக்:

    தேவையானவை:

    தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    முட்டை வெள்ளைக் கரு - ஒரு டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்

    தேவையான எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அரை மணி நேரம் பேக் போட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும். மாதம் நான்கு முறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.

    முகத்தொய்வை நீக்கும் பேக்:

    தேவையானவை:

    யோகர்ட் - 5 டீஸ்பூன்

    காபித்தூள்- கால் டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    மூன்றையும் பேஸ்ட் பதத்துக்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, ரோஸ் வாட்டரால் முகத்தை லேசாக ஒற்றி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்துவர, முகத்தொய்வு சரியாகும்.

    கருவளையத்திற்கான பேக் :

    தேவையானவை:

    தக்காளிச்சாறு - கால் டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு சாறு - கால் டீஸ்பூன்

    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

    தக்காளிச்சாறு, உருளைகிழங்குச்சாறு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கண்களைக் குளிர்ந்த நீரால் துடைக்க, கருவளையத்துக்கு டாட்டா சொல்லலாம்.

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொதுவாக பார்லர் செல்ல நேரம் இருப்பதில்லை. அந்த மாதிரியான சூழலில், வீட்டில் உள்ள சில பொருள்களைவைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும். வீட்டில் கிடைக்கும் பொருள்களைவைத்து எளிமையான பேக்குகளை முயற்சிசெய்து, உங்களின் அழகை மெருகேற்றுங்கள். இனி பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

    • சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை.
    • சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது.

    சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

    அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

    சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

    அவசரமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 3-4 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

    கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும்.

    எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

    க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

    தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமம் அழகாக இருக்கும்.

    • மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும்.
    • சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள்.

    வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.

    சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

    மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

    இரவு நீண்ட நேரம் படிப்பதாலும், வேலை செய்வதாலும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின்மீது பூசிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள். கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், சருமத்தில் சுருக்கங்கள் வாராமல் தடுத்து, வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.

    வாழைப்பழத் தோளில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் ஏவில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின், தொற்று உள்ள இடத்தை சரி செய்து, பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழத் தோளை நறுக்கி, முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில், மெதுவாக தேய்க்கவும். பத்து நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால், நாள் முழுவதும் கூட கழுவாமல் அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்குவதற்கு முன் கூட இப்படி செய்து தூங்கி விடலாம். நீண்ட நேரம் சருமத்தில் (skin) இருந்து கொண்டு நன்றாக வேலை செய்யும்.

    ×