search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவளையம்"

    • முகத்தின் அழகினை கெடுப்பது கருவளையங்கள்.
    • இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும்.

    கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான். முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் மட்டும் போதும். இந்த நைட் கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 1

    பாதம் பொடி - 1 ஸ்பூன்

    கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை:

    * முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி கொள்ள வேண்டும்.

    * பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உருளைக்கிழங்கு சாறை ஒரு சின்ன பவுலில் சேர்த்து அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.

     பயன்படுத்தும் முறை:

    முதலில், தினமும் இரவில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தயார் செய்து வைத்துள்ள நைட் கிரீமை முகத்தில் தடவ வேண்டும். அப்படியே இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

    • வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    • பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

    தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும்.

    பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்:

    தேவையானவை:

    அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன்

    பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன்

    மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச் என மிளிரும்.

    முகச்சுருக்கத்துக்கான பேக்:

    தேவையானவை:

    தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    முட்டை வெள்ளைக் கரு - ஒரு டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்

    தேவையான எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அரை மணி நேரம் பேக் போட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும். மாதம் நான்கு முறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.

    முகத்தொய்வை நீக்கும் பேக்:

    தேவையானவை:

    யோகர்ட் - 5 டீஸ்பூன்

    காபித்தூள்- கால் டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    மூன்றையும் பேஸ்ட் பதத்துக்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, ரோஸ் வாட்டரால் முகத்தை லேசாக ஒற்றி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்துவர, முகத்தொய்வு சரியாகும்.

    கருவளையத்திற்கான பேக் :

    தேவையானவை:

    தக்காளிச்சாறு - கால் டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு சாறு - கால் டீஸ்பூன்

    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

    தக்காளிச்சாறு, உருளைகிழங்குச்சாறு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கண்களைக் குளிர்ந்த நீரால் துடைக்க, கருவளையத்துக்கு டாட்டா சொல்லலாம்.

    வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொதுவாக பார்லர் செல்ல நேரம் இருப்பதில்லை. அந்த மாதிரியான சூழலில், வீட்டில் உள்ள சில பொருள்களைவைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும். வீட்டில் கிடைக்கும் பொருள்களைவைத்து எளிமையான பேக்குகளை முயற்சிசெய்து, உங்களின் அழகை மெருகேற்றுங்கள். இனி பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

    • செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும்.
    • கருவளையத்தை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

    ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.

    வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.

    குங்குமாதிலேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.

    கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.

    ×