search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கரப்"

    • சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை.
    • சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது.

    சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்த பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

    அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

    சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

    அவசரமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 3-4 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

    கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும்.

    எலுமிச்சை சாற்றில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

    க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

    தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தாலும், சருமம் அழகாக இருக்கும்.

    • பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.
    • இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள்.

    ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

    தேவையானவை :

    வெள்ளை சர்க்கரை - அரை கப்

    சமையல் சோடா - 1 டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தேன்- 1 டீஸ்பூன் பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் - 2 துளி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

    சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும்.

    சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும்.

    தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.

    ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

    தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.

    • முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
    • முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

    முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்யணும்... என்ன செய்யக்கூடாது என்று தெரியுங்களா? இன்றைய காலத்தில் முகப்பரு, கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்கும் முகத்தை காண்பது என்பது அரிதானது.

    அவற்றை நீக்குவதற்கு என்னதான் அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தாலும், சருமத்தில் இருந்து அவை முழுவதும் நீங்கிவிடுவதில்லை. மேலும் எவ்வளவு தான் விலை உயர்ந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தினாலும், இதற்கான ஒரு நல்ல முடிவு கிடைக்க பல நாட்கள் ஆகின்றன.

    எனவே அழகான முகத்தை இரண்டே நாட்களில் பெறுவதற்கு சில அழகான டிப்ஸ் இருக்கிறது. முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். மேலும் வெளியே செல்வதற்கு முன்பும், வீட்டிற்கு வந்த பின்பும் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து கழுவிட வேண்டும்.

    இவற்றால் சரும துளைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அதிலும் பாடி ஜெல் மற்றும் சோப்புகளை பயன்படுத்தினால், சருமத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டு, முகப்பருக்கள் வந்துவிடும். ஆகவே குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    முகத்தை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். அதிலும் அந்த துணியை சூடான நீரில் நனைத்து பிழிந்து, பின் துடைக்க வேண்டும். மேலும் அவ்வாறு செய்யும் போது, அந்த துணியை நீரில் நனைத்து பிழிந்ததும் முகத்தில் வைத்து, ஒரு நிமிடம் வைக்க வேண்டும். இதனால் முகத்திற்கு ஒரு சிறிய ஸ்டீம் செய்தது போல் இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்து வந்தால், 2 நாட்களில் சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முக்கியமாக முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீர் தான் சிறந்தது, அப்போது சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அழுக்குகள் சருமத்திலேயே தங்கிவிடும்.

    கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கைகளை கழுவாமல் எப்போதும் முகத்தை தொடக்கூடாது. ஏனெனில் கைகளில் எப்போதும் கிருமிகள், பாக்டீரியாக்கள் இருக்கும். ஆகவே சுத்தம் மிகவும் முக்கியம்.

    சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்க, வாரத்திற்கு ஒரு முறையாவது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் சர்க்கரை ஸ்கரப் மிகவும் சிறந்தது. அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

    ×