search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva"

    • தேப்பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாத சுவாமி திருக்கோவில்.
    • சிவனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடுகிறார்கள்.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திலும், திருநாகேஸ்வரத்தில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, தேப்பெருமாநல்லூர் என்ற ஊர். இங்கு விஸ்வநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

    இத்தல மூலவருக்கு, பிரதோஷம், சிவராத்திரி முதலான சிவனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடுகிறார்கள்.

    இந்த அலங்காரத்தில் விஸ்வநாத சுவாமியை வழிபாடு செய்வதால் சிறப்புமிக்க பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். சூரிய பகவான் நாள் தவறாது தன்னுடைய கதிர்களால் வழிபடும் இறைவன் இந்த விஸ்வநாத சுவாமி ஆவார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் பிறவிப் பிணி அகலும் என்பது ஐதீகம்.

    • 5 சிவ சபைகளில் தாமிரசபை நெல்லையப்பர் கோவிலில் உள்ளது.
    • கோவிலின் 2-வது திருச்சுற்றில் தெற்கு பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் இறைவன் ஈசன் நடராஜர் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான 5 சிவ சபைகளில் தாமிரசபை நெல்லையப்பர் கோவிலிலும், சித்திரை சபை குற்றாலத்திலும் உள்ளது.

    இந்த தாமிரசபையினில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலின் 2-வது திருச்சுற்றில் தெற்கு பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.

    கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபத்தை நிறுத்தப்பட்டு, இதனின் மேற்கூரையில் தாமிர தகடுகளால் பதிக்கப்பட்டு உள்ளன. இவை பிரமிடுபோல் கூம்பு வடிவத்தில் தோற்றம் கொண்டவையாகும். தாமிரசபையின் பின்புறமாக சந்தன சபாபதி சன்னதி அமைந்துள்ளது.

    இங்கே மூலவராக நடன திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    சந்தன சபாபதி கண்களுக்கு பூசப்படும் சந்தனமானது, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய 6 சந்தர்பங்களில் களையப்பட்டு புதியதாக மீண்டும் பார்க்கப்படுகிறது. தாமிரசபையில் எழுந்தருளியிருக்கும் சந்தன சபாபதிக்கு 6 அபிஷேகங்கள் நடக்கின்றன.

    தாமிரசபையின் முன்புறமான இல்லாததான் ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் மேற்கூரையானது வளைவான ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. கட்டுமான ெபாருட்கள் எவையும் பயன்படுத்தபடாமல் முட்டுக்கொடுத்து நிறுவிஇருக்கிறார்கள்.

    இந்த மண்டபத்தில் தூண்களின் கீழ்புறம் அமைந்துள்ள யானை சிற்பங்கள்தான் இந்த மண்டபத்தை தாங்கி நிற்கிறது. மார்கழி திருவாதிரை திருநாளில் தாமிரசபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிர சபாபதியின் திருநடனம் இந்த மண்டபத்தில் வைத்துதான் நடைபெறுகிறது.

    இந்த திருநடன காட்சியினை மகாவிஷ்னு மத்தளம் வாசிப்பது போலவும், மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி முதலான இறைவர்களோடு சேர்ந்து பதஞ்சலி, வியாக்கியானம் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதை போன்று புடைப்பு சிற்பங்களாக இந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களில் உளிகொண்டு உயிரூட்டம் கொடுத்தனர்.

    இந்த திருநடன காட்சி ஒவ்வொரு ஆண்டும் தாமிரசபையில் மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் வெகு விமரிசையாக நடைெபற்று வருகிறது.

    நடராஜ பெருமாளின் ஐந்தொழிலையும் தனித்தனியாக செய்யும் தாண்டவங்களையும், அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் திருப்பதூர் புராணத்தில் நீங்கள் அறியப்படலாம்.

    தாமிரசபையின் மேற்கூரையில் மரத்தாலான எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன. தாமிரசபையில் நடுநாயகமாக அமைத்துள்ள கல் பீடத்தில் வைத்து நடத்தப்படுகிறது. ஆடல் வல்லானின் திருநடன காட்சியினை கூரையின் முதல் அடுக்கில் இறைவனின் திருமூர்த்தங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

    2-வது அடக்கில் முனிவர்கள் நிறையவர்கள் பார்த்து ரசிப்பது போல் இருக்கின்றன. இந்த மரச்சிற்பங்களில் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    • புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம், குடைவரைக் கோவில் புகழ் பெற்றது.
    • திருக்கோகர்ணேஸ்வரர், இங்கே பாகம்பிரியாள் அன்னையுடன் அருள்பாலிக்கிறார்.

    * வில்வம், நொச்சி, மாவிலங்கை, முட்கிளுவை, விளா ஆகிய ஐந்தையும் 'பஞ்ச வில்வம்' என்று பெரியோர்கள் கூறுவர். இவற்றின் தழைகளில் மூவிதழ்கள் கொண்ட பத்திரங்களைக் கொண்டு, சிவராத்திரியின் நான்கு சாமங்களிலும் சிவ பூசை செய்தல் வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது.

    * தென்காசி விசுவநாதர் கோவில் கோபுரப்பணியை தொடங்கியவர், பராக்கிரம பாண்டியன். ஆனால் அந்தப் பணியை அவரால் முழுமையாக முடிக்க முடியவில்லை. எனவே அவர், "ஒப்பற்ற இத்திருக்கோவில் பணியினை முடித்து காப்பவரின் அடிகளை, என் முடி மீது தாங்கிப் போற்றுவேன்" என்று சொல்லியதாக கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகின்றது. பின்பு அண்ணன், பணி அரைகுறையாய் கிடத்தல் கூடாது என்று நினைத்து, குலசேகரப் பாண்டியன் அந்த கோபுரப்பணியை முடித்ததைஅறிய முடிகிறது.

    * கும்பகோணம் கீழ்க்கோட்டத்தில் உள்ள நாகேஸ்வரர் திருக் கோவிலில், சூரியன் தமிழகத்திற்கு நேராக இயங்கும் காலமான சித்திரை மாதத்தில் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மூலவர் மீது சூரியன் தன்னுடைய ஒளிக் கிரகணங்களைப் படரவிட்டு வழிபாடு செய்கின்றான்.

    * புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம், குடைவரைக் கோவில் புகழ் பெற்றது. புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் உருவாக்கியுள்ள இக்கோவில் `மகிழவனம்' என்ற பெயரில் விளங்கி, குல தெய்வக் கோவிலாகக் கட்டப்பட்டது. திருக்கோகர்ணேஸ்வரர், இங்கே பாகம்பிரியாள் அன்னையுடன் அருள்பாலிக்கிறார்.

    * மதுரைக்கு அருகில்' விராதனூர்' என்னும் சிவத்தலத்தில் சிவன், `ரிஷபாரூடர்' வடிவத்தில் நான்கு வேதங்களையும் கால்களாகக் கொண்ட நந்தியின் மீது பார்வதியுடன் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

    *திருவாரூர் தூவாய் நாதருக்கு அபிஷேகம் செய்யும் போது இவரது திருமேனியில் கண் தடம் தெரியும். சுந்தரருக்கு கண் கிடைத்த தலம் இது.

    * சிவனின் (சுயம்புலிங்கம்) எதிரில் சூரிய பகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலத்தினை தஞ்சை பரிதியப்பர் கோவில் பாஸ்கரேஸ்வரர் ஆலயத்தில் மட்டுமே காணலாம்.

    * திருவாடானை ஆதிரத்தினபுரீஸ்வரர் ஆலய சுயம்பு மூர்த்திக்கு உச்சிக் காலத்தில் பாலாபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சி தருவார்.

    * ராமேசுவரம் கோவில் பிரகாரம் பிரமாண்டமானது. இது 1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. இக்கோவிலின் இந்த மூன்றாம் பிரகாரம் உலகப் புகழ்பெற்றது.

    * வேதாரண்யம் திருமரைக்காயர் தலத்தின் தலமரம் வன்னிமரம். இம்மரத்தில் காய்க்கும் காயின் ஒரு பக்கம் நீளமாகவும், முட்களுடனும் உள்ளது. இதன் இன்னொரு பக்கம் உருண்டையாகவும் முட்கள் இல்லாமலும் உள்ளது.

    - இரா. அருண்குமார், புதுச்சேரி.

    • நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள்.
    • சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்

    சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் விசேஷம்தான். குறிப்பாக சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், இன்னும் சிறப்பானது, வலிமை மிக்கது. அதனால்தான் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் செல்லுங்கள். சிவ தரிசனம் செய்யுங்கள். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசியுங்கள். நம் பாவமெல்லாம் பறந்தோடும்.

    பிரதோஷம் என்பதும் பிரதோஷத்தின் போது சிவ வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு பலன்கள் இருக்கின்றன. திங்கட்கிழமை வருகிற பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சோம என்றால் திங்கள். சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கும் ஈசனை, திங்கட்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் பூஜை செய்து வணங்கினால், மோட்ச கதி அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

    குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம். எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ர பாராயணம் செய்வதும் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்கிறார்கள் பக்தர்கள்.

    மூன்றாவதாக, அதேசமயம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுவது சனிப் பிரதோஷம். சனி பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்பார்கள். சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில், விரதம் இருந்து சிவ தரிசனம் செய்வது அனைத்துப் பாவங்களையும் போக்கக்கூடியது. சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    இன்று, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

    பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று, சனிக்கிழமை, பிரதோஷம். சனி பிரதோஷம் சகல பாவங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய பிரதோஷம் என்பது நாம் அறிந்ததே. அற்புதமான இந்தநாளில், மாலை வேளையில், பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்யுங்கள். நமசிவாயம் சொல்லி சிவனாரை வணங்குங்கள். ருத்ரம் ஜபித்து, சிவனாருக்கு வில்வம் வழங்குங்கள். நந்திதேவருக்கு வில்வமும் அருகம்புல்லும் வழங்குங்கள்.

    சனிப் பிரதோஷம், நம் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும்!

    • பூமி அதிர நடக்கக் கூடாது.
    • நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.

    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான். ஆனால் நாம் சிவன் கோவிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு. அதனால் நமக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கக் கூடும். எப்படி எல்லாம் பிரதட்சணம் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

    சிவாலயங்களில், கோவிலினுள் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு (நவகிரகங்களை தவிர), ஆலயத்தின் முன் இருக்கும் கொடிமரத்தின் அருகில் நின்று மூன்று முறை சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். கோவிலின் மற்ற சன்னதிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக் கூடாது.

    அதன் பின்னர் வெளிப் பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது கொடிமரத்தையும் சேர்த்து வலம் வருவது அவசியம்.

    அடி பிரதட்சணம் செய்பவர்கள் பொறுமையாக பிரதட்சணம் செய்ய வேண்டும். பூமியை, அதாவது நிலத்தைப் பார்த்த படி, சிவ நாமத்தை நினைத்த படி செய்ய வேண்டும். பூமி அதிர நடக்கக் கூடாது.

    கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்வதை விட, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்யும் போது அதிக பலன்கள் கிடைக்கும். கோவிலுக்கு வெளியே செருப்பு கழட்டிட்டு போறதுக்கு உண்மையான காரணம் இது தான். வெளிப்புறப் பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்வது மிக அவசியம். கடைசியாக நவகிரக சன்னதியில் வணங்கி சிவனின் அருளோடு வீடு திரும்பலாம்.

    ஆலயங்களை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வரலாம். கோவிலை வேகமாக எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருதல் பயனற்றது. நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.

    கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வேகமாக வலம் வருவார்கள். இது மிகவும் தவறானது. கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும் அல்லது அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள்.

    ஒரு நிறைமாத கர்ப்பிணி, எவ்வாறு நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோவிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சிவபூஜையால் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.
    • சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

    சித்திரை -பலாசம்,

    வைகாசி -புன்னை,

    ஆனி-வெள்ளெருக்கு,

    ஆடி-அரளி,

    ஆவணி-செண்பகம்,

    புரட்டாசி -கொன்றை,

    ஐப்பசி -தும்பை,

    கார்த்திகை -கத்திரி,

    மார்கழி-பட்டி,

    தை-தாமரை,

    மாசி- நீலோத்பலம்,

    பங்குனி- மல்லிகை.

    மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

    சித்திரை -மரிக்கொழுந்து,

    வைகாசி- சந்தனம்,

    ஆனி -முக்கனிகள்,

    ஆடி-பால்,

    ஆவணி- நாட்டுச்சர்க்கரை,

    புரட்டாசி -அப்பம்,

    ஐப்பசி- அன்னம்,

    கார்த்திகை- தீபவரிசை,

    மார்கழி- நெய்,

    தை- கருப்பஞ்சாறு,

    மாசி- நெய்யில் நனைத்த கம்பளம்,

    பங்குனி- கெட்டித்தயிர்.

    • சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
    • நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொவர்க்க போகம் கிடைக்கும்.

    மாதுளை - அரச பதவி கொடுக்கும்

    நெய் - மோட்சத்தைக் கொடுக்கும்

    அன்னம் - வயிற்று நோயை நீக்கும்

    நெல்லிக்கனி - பித்தம் நீக்கும்

    பழ ரசங்கள் - வறட்சியைப் போக்கும்

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற் படும்.

    நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.

    தேன், வியாதிகளை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.

    • சிவம் என்றால் மங்களம்.
    • லிங்கம் என்றால் அடையாளம்.

    சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது.

    சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம்.

    சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.

    1. புற்றுமண் லிங்கம்: முத்தி

    2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்

    3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்

    4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்

    5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்

    6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை

    7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு

    8. தயிர் லிங்கம்: நல்லகுணம்

    9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை

    10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்

    11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி

    12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்

    13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு

    14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி

    15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு

    16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.

    • சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
    • சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு.

    சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.

    1. நித்திய சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    2. பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.

    3. மாத சிவராத்திரி:

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    4. யோக சிவராத்திரி:

    சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    5. மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.

    மகா சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன. சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

    • முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
    • சிவபெருமானைப் போற்றி வழிபடும் சிவபுராணத்தைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும்.

    இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம், முருகக் கடவுளுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரம் இரண்டும் இணைந்த நாளாக இந்த நாள் விளங்குகிறது.

    வியாழக்கிழமையை குருவாரம் என்று சொல்வார்கள். வியாழ பகவான் தேவர்களின் குரு. எனவே, வியாழனுக்கு உரிய இந்த நாளில் குருவை வணங்குவதன் மூலமும் மகான்களை வழிபடுவதன் மூலமும் பல்வேறு நன்மைகளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. குருவே நம் பிழைகளை மன்னித்து அருள் செய்பவர். அதனால்தான் அருணகிரிநாதர், `குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்று பாடினார்.

    வியாழன் தேவ குரு என்றால் தட்சிணாமூர்த்தி லோககுரு. இந்தப் பிரபஞ்சம் முழுமைக்கும் குருவாக விளங்குபவர். ஞானம் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி. சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி திருவடிவத்தைக் கட்டாயம் வணங்க வேண்டிய நாள் வியாழக்கிழமை. அதோடு பிரதோஷம் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    இன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவருவது மேலும் ஒரு விசேஷம். கார்த்திகை முருகப் பெருமானின் நட்சத்திரம். முருகனும் சிவபெருமானும் வேறுவேறல்ல. சிவபெருமானின் அக்னி வடிவமே முருகக் கடவுள். முருகக் கடவுள் தேவர்களின் துயர்தீர்க்க அவதரித்தவர். கருணையே வடிவான வேலினைக் கையிலே கொண்டவர். அதோடு தகப்பன் சாமியாக சுவாமிமலையில் அமர்ந்து அருள்பாலிப்பவர். எனவே, வியாழன் அன்று முருகப்பெருமானை சுவாமிநாத ரூபத்தில் வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது.

    இன்று விரதம் இருந்து சிவபெருமானையும் முருகப் பெருமானையும் கட்டாயம் வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் முதலிய கவசங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவபெருமானைப் போற்றி வழிபடும் சிவபுராணத்தைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். ஐந்தெழுத்து மற்றும் ஆறெழுத்து மந்திரத்தை ஜபம் செய்யலாம். மாலை வேளையில் வீட்டில் விளக்கேற்றி வீட்டிலிருக்கும் சிவன் அல்லது முருகனின் படத்துக்குக் கிடைக்கும் மலர்களை சாத்தி வழிபடலாம். நோய்கள் தீரவும் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடவும் இன்று மாலை பிரதோஷ வேளையில் முருகப் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள்.

    • இன்று விரதம் இருந்து சிவவழிபாடு செய்வது உத்தமம்.
    • இந்தநாளில், ஞானமும் யோகமும் தந்தருளும் சிவனாரை விளக்கேற்றி வழிபடுவோம்.

    புண்ணியம் நிறைந்த வைகாசி மாதம் என்று ஞானநூல்கள் போற்றுகின்றன. இந்த வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திர நாள் என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். அதேபோல், வைகாசிச் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த நாள்.

    விசாக நட்சத்திரநாளில் முருக வழிபாடு மிகுந்த விசேஷம். அதேபோல், அம்பிகையை ஆராதிக்க, வாழ்வில் சங்கடங்கள் அனைத்தும் விலகிவிடும். சந்தோஷங்கள் பெருகும்.

    சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். வைகாசி மாதத்தின், திங்கட்கிழமைகள் ஈஸ்வர வழிபாடு ரொம்பவே வலிமையைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திங்கட்கிழமைகளில், விரதம் இருந்து சிவ ஸ்துதி பாராயணம் செய்து சிவபெருமானை தீபாராதனை காட்டி பிரார்த்தனை செய்வது உத்தமம். ருத்ரம் ஜபிப்பது, எதிரிகளையும் தீய சக்திகளையும் அழிக்கவல்லது.

    வைகாசி மாதத்தின் கடைசி சோமவாரம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநாளில், விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சோம வார நாளில், சோமன் எனப்படும் திங்கள் எனப்படும் சந்திரன் எனப்படும் நிலா உதயமாகும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். முடிந்தால், கிடைத்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். குடும்பமாய் அமர்ந்து சிவநாமம் சொல்லுங்கள். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடுங்கள் அல்லது ஒலிக்கவிடுங்கள். முக்கியமாக, நோய் தீர்க்கும் பதிகங்களைப் பாடி பரமேஸ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    சிவனாருக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஞானமும் யோகமும் தந்தருள்வார் சிவனார்.

    தென்னாடுடைய சிவனே போற்றி.

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

    • அன்பர்கள் கொண்டாடும் செல்லப் பிள்ளையாக முருகன் இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.
    • சிவாலயங்களில் முருகனுக்கு அதிகளவிலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    சிவாலயங்களில் சிவபெருமானுக்கே அன்றி அவரது பரிவார தெய்வங்களாக இருக்கும் விநாயகர், முருகன் போன்ற துணைத் தெய்வங்களுக்கும் தனியே சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக முருகனுக்கு அதிகளவிலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

    கிருத்திகை

    முருகனுக்கு மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில், அபிஷேக ஆராதனையோடு வீதியுலாவும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக சித்திரை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை, தைக் கிருத்திகை நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் சிறப்பான வழிபாடுகளைச் செய்கின்றனர். இரவில் முருகன் இருபெரும் தேவியருடன் மயில் வாகனத்தில் வீதிஉலா வந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கந்தர்சஷ்டி

    பெரிய ஆலயங்களில் ஐப்பசி மாதத்து வளர்பிறை சஷ்டியை ஒட்டி பெரிய விழா நடத்தப்படுகிறது. ஐப்பசி மாதப் பிரதமையில் கொடியேற்றி பஞ்சமியில் அன்னையிடம் வேல் வாங்கி சஷ்டியில் சூரசம்கார விழா நடத்துகின்றனர். இதில் பஞ்சமி வரையிலான முதல் ஐந்து நாட்கள் முருகன் வீதியுலா வருகிறார்.

    சஷ்டியன்று மாலையில் சூரசம்ஹாரமும், அடுத்த நாளான சப்தமியில் தெய்வானை முருகன் கல்யாணமும் நடத்தப்படுகின்றன. அஷ்டமி நவமியில் ஊஞ்சல் உற்சவமும் விடையாற்றி விழாவும் நடத்துகின்றனர். சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளும் போது முருகன், ஆட்டுக்கடா, அல்லது குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். சூரசம்ஹாரம் முடிந்ததும், அவரை மயில் வாகனத்தில் அமர்த்தி வீதியுலா காண்கின்றனர்.

    பங்குனி உத்திரம்

    சில தலங்களில் பங்குனி உத்திரத்தில் வள்ளிக்கும் முருகனுக்கும் திருமண விழா நடத்துகின்றனர். பங்குனி உத்திரத்தில் தண்டாயுதபாணிக்குச் சிறப்பு வழிபாடுகளும் வீதியுலாவும் நடத்தப்படுகின்றன.

    வைகாசி விசாகம்

    சண்முகர் உள்ள ஆலயங்களில் வைகாசி விசாகத்தில் சண்முகர் இந்திர விமானத்தில் பவனி வந்து காட்சி தருகிறார்.

    வசந்த விழா

    சிவாலயங்களில் பெருந்திருவிழாவினை அடுத்து நடைபெறும் வசந்த விழாவில் சிவபெருமானுக்கு வசந்தவிழா நடந்த பின்னர் முருகனுக்கெனத் தனியே வசந்த விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முருகனை பூஞ்சோலையின் நடுவே பூக்களைக் கட்டி அலங்கரித்த அழகான மண்டபத்தில் அமர்த்தி பன்னீரால் அபிஷேகித்து வெட்டிவேர், மருக்கொழுந்து, தவனம் முதலியவற்றால் அலங்கரித்து அவர்முன்பாக ஆடல் பாடல்களை நிகழ்த்துவர் குளிர்ச்சி தரும் நீர்மோர் பானகம் முதலியவை நிவேதிக்கப்படும். தயிர் சாதமும் நிவேதிப்பர். வெள்ளரிப் பிஞ்சுகளை நறுக்கித் தயிரில் இட்டு அளிப்பதும் உண்டு. வசந்த விழாவில் இன்னிசைக் கச்சேரிகளும், ஆடல்பாடல்களும் தனிச்சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

    நவராத்திரி விழாவிற்கு அடுத்தபடியாக பெரிய அளவில் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் விழாவாக வசந்த விழா நடத்தப்படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சிங்காரவேலரின் வசந்தவிழா தனிச்சிறப்பு கொண்டதாகும். செயற்கையாக நீராழி மண்டபத்துடன் கூடிய சிறிய குளத்தை அமைத்து அதில் நீர் நிரப்புகின்றனர். அதில் சிறிய தெப்பம் சுற்றி வருகிறது. குளத்தைச் சுற்றி பூந்தொட்டிகளை வைத்து பூஞ்சோலை அமைப்பை உருவாக்குகின்றனர். முருகன் இதை ஏழுமுறை சுற்றி வருகிறார்.

    அப்படிச் சுற்றிவரும் வேளையில் ஒவ்வொரு சுற்றிலும் முறையே வேத பாராயணம், திருமுறை ஓதுதல், நாதஸ்வரம், கிளாரினெட், சங்கநாதம், முகவீணை முதலியன இசைக்கப்படுகின்றன. பெரிய நிலைக்கண்ணாடியை வைத்து அதன் முன்பாக முருகனை நிறுத்தி தீபாராதனை செய்யப்படுகிறது. வசந்தவிழா மகிழ்ச்சியின் அடையாள விழாவாகும்.

    தெப்போற்சவம்

    சிவாலயங்களில் நடைபெறும் தெப்போற்சவத்தின் தொடர்ச்சியாக முருகனுக்கும் தெப்போற்சவம் நடத்தும் வழக்கமும் உள்ளது. சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச நாளை ஒட்டி மூன்று நாட்கள் நடைபெறும் தெப்போற்சவத்தில் முதல் நாள் கபாலீஸ்வரரும் இரண்டு மூன்று ஆகிய நாட்களில் வள்ளி தெய்வயானை உடனாய சிங்காரவேலரும் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழாவில் முதல் நாள் விநாயகரும், கிராம தேவதையும், இரண்டாம் நாளில் சந்திர சேகரரும் மூன்றாம் நாளில் முருகப்பெருமானும், நான்காம் நாள் பெருமாளும் தெப்பத்தில் உலா வருகின்றனர்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவினைத் தொடர்ந்து நடைபெறும் தெப்பத்திருவிழாவில் முதல் நாளில் அண்ணாமலையாரும் இரண்டாம் நாளில் பராசக்தி அம்மனும், மூன்றாம் நாளில் முருகனும் தெப்பத்தில் உலா வருகின்றனர்.

    பெருந்திருவிழாவில் முருகன் பவனி

    சிவாலயப்பெருந்திருவிழாவின் போது, நாள் தோறும் நடைபெறும் வீதி உலாவில் பஞ்சமூர்த்திகளில் ஒருவராக முருகன் தன் தேவியருடன் எழுந்தருள்கிறார். அப்போது அவர் எழுந்தருள்கின்றார். அப்போது அவர் மயில் தவிர மான், புலி, யானை, அன்னம், புருஷா மிருகம், கந்தர்வன், சிங்கம், தாரகாசுரன் முதலான வாகனங்களிலும் தேரிலும் பவனி வந்து அருள்பாலிக்கிறார்.

    மேலும், அன்பர்கள் தேவைப்படும் போது முருகனுக்கு லட்சார்ச்சனை, ஷண்முகார்ச்சனை கோடி அர்ச்சனை போன்றவற்றைச் செய்து மகிழ்கின்றனர். சில தலங்களில் சத்ருசம்ஹார திரிசதி, சகஸ்ர நாம அர்ச்சனை போன்றவை அடிக்கடி நடத்தப்படுகின்றன. அன்பர்கள் கொண்டாடும் செல்லப் பிள்ளையாக முருகன் இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    ×