search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவனுக்கு ருத்ராட்ச கவசம்
    X

    சிவனுக்கு ருத்ராட்ச கவசம்

    • தேப்பெருமாநல்லூர் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாத சுவாமி திருக்கோவில்.
    • சிவனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடுகிறார்கள்.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திலும், திருநாகேஸ்வரத்தில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, தேப்பெருமாநல்லூர் என்ற ஊர். இங்கு விஸ்வநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

    இத்தல மூலவருக்கு, பிரதோஷம், சிவராத்திரி முதலான சிவனுக்கு உகந்த விசேஷ நாட்களில் 22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடுகிறார்கள்.

    இந்த அலங்காரத்தில் விஸ்வநாத சுவாமியை வழிபாடு செய்வதால் சிறப்புமிக்க பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். சூரிய பகவான் நாள் தவறாது தன்னுடைய கதிர்களால் வழிபடும் இறைவன் இந்த விஸ்வநாத சுவாமி ஆவார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் பிறவிப் பிணி அகலும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×