search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "purchase"

    • விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
    • ரங்கநாதபுரத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பாபநாசம் வட்டம் விழுதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    விழுதியூர் பகுதியில் கடந்த காலங்களில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் ஒரு வார காலமாக காத்து கிடக்கும் அவலம் உள்ளது. உடனடியாக ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பின்னர் மனுவை அளித்துவிட்டு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று தரையில் நெல்லை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
    • விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைச்சான்றுத் துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும். விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.

    சாக்குப் பைகளில் தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட ஆதார நிலை(வெள்ளைஅட்டை) அல்லது சான்றுநிலை(நீலநிற அட்டை)-ல் ஏதேனும் ஒன்றுடன் உற்பத்தியாளர் அட்டையும் சேர்த்து 2 அட்டைகள் பொருத்தப்பட்ட விதைகளை வாங்க வேண்டும்.

    விவர அட்டைகளில் விதையின் ரகம், உற்பத்தியாளர் முகவரி விதைச்சான்றளிப்புத் துறையின் முத்திரை காணப்படும். காலக்கெடு தேதியைக் கவனித்து, காலக்கெடு முடிவடையாத, விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, முக்கியமாக அந்தப் பருவத்திற்கு ஏற்ற ரகம்ரானா எனக் கவனித்து வாங்க வேண்டும்.

    விதை வாங்கும்போது விற்பனை ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விற்பனை ரசீதில், வாங்குபவர்கள் கண்டிப்பாக கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.

    விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும். விதை வாங்கும் போது மேற்கூறிய கருத்துக்களை கவனித்தில் கொண்டால், தரமான விதை கொண்டு அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.
    • கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும்.

    வீரபாண்டி : 

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் காய்கறி பயிர்கள், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.

    உள்ளூர் விளைச்சல் குறைவாக உள்ளதால் அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உள்ளூரில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அருகே உள்ள நொச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவநாதன் கூறுகையில், காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோளம் பயிரிட்டோம்.

    தற்பொழுது குவிண்டால் 1800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏக்கருக்கு 25 முதல் 30 குவிண்டால் கிடைக்கும். கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும். எனவே மத்திய மாநில அரசுகள் விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து மத்திய மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் வேண்டும் என்றார்.

    .

    • ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி.
    • ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளையும், நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

    • பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
    • கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி இந்த விற்பனை கூடங்களிலும் இதுவரை 9,844 விவசாயிகளிடமிருந்து ரூ.129 கோடி மதிப்பிலான 12,145 மெட்ரிக் டன் அரைவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மின்சாரம், தோட்டக்கலை உள்பட பல துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் உள்ள திட்டம் குறித்து விளக்கினர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும், வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தகட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பேசியதாவது:-

    விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    துணை தாசில்தார் மாதவன் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் தனித்துறை ரமேஷ் நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    நுகர்வோர் நலனை பாதுகாப்பதற்காக தரப்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதலின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தரப்படுத்தப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதால் உற்பத்தி யாளர்களின் தரமும் மேம்படுகிறது.

    இதில் பங்கேற்பாளர் களும் தங்கள் கொள்முதல் டெண்டர்களில் இந்திய தர நிர்ணயத்தை இணைத்து கொள்வதன் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

    தயாரிப்புக்களை அடையாளம் காண புகார் தீர்க்கும் நெறிமுறைகள் போன்றவைகள் குறித்தும், தரமான பொருட்களை வாங்குவதற்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்த பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது குறித்தும், தனிப்பட்ட துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001 போன்ற மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களுடன் செயல்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைக்க ப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறை, கல்வித்துறை, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், மாநில நெடுஞ்சாலைகள் துறை , சுகாதாரத்துறை, மாவட்ட வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, கூட்டுறவு சங்கம், மாவட்ட சுற்றுலா, சுய உதவிக்குழு, சட்டம் வல்லுநர்கள் போன்ற சம்பந்தப்பட்ட துறைகள் ரீதியாக விழிப்புணவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மதுரை கிளை அலுவலக தலைமை விருந்தினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து பெய்யும் மழையால் நெல்லை காய வைக்க முடியவில்லை.
    • 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மத்திய குழுவினரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழையாலும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாக உள்ளதாலும் அறுவடை செய்யப்படும் நெல் ஈரப்பதம் கூடுதலாக உள்ளது. அரசு 17 சதவீதம் ஈரப்பதம் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இதனால் நெல்லை விவசாயிகள் காய வைத்தும் தொடர்ந்து பெய்யும் மழையால் நெல்லை காய வைக்க முடியவில்லை.

    இதனால் விவசாயிகளுக்கு பொருட் செலவு அதிகமாகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு கோரியுள்ள 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூா் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • தமிழகத்திலும் உரிக்காத தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    உடுமலை:

    கோவை, திருப்பூா் மாவட்ட பகுதிகளில் பாசன வசதி குறைந்த பகுதிகளிலும், பி.ஏ.பி. வாய்க்கால் பாசன வசதியுள்ள பகுதியிலும் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயா்வு போன்றவை முக்கிய பிரச்சினைகளாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. பயிா் சாகுபடி செய்து அறுவடைக்குப் பிறகு, போட்ட முதலீடு நிச்சயம் கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

    இந்த நிலையில் அதிக உழைப்பின்றி குறைந்த பராமரிப்பில் தென்னை சாகுபடியில் நல்ல வருமானம் கிடைப்பதால் பலரும் தென்னை சாகுபடிக்கு மாறிவிட்டனா். இதனால் திருப்பூா் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் கொப்பரை கிலோ ரூ. 105.90-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. தென்னை சாகுபடி பரப்பு அதிகம் உள்ள கேரளத்தில் விவசாய தொழிலாளா் பற்றாக்குறை காரணமாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பாலும், மட்டையுடன் தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் உரிக்காத தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

    இது குறித்து சின்னகாளிபாளையம் தென்னை விவசாயி ஈஸ்வரன் கூறுகையில், தேங்காய் விலை உயா்ந்திருந்தாலும்கூட நியாயமான விலை இல்லை. தென்னை விவசாயிகள் பயன்பெற வேண்டுமெனில், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். தேங்காயை கொப்பரையாக மாற்றி விற்பனை செய்வதில் சிரமம் உள்ளது. கேரளத்தைப் போல, முழு தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்து கொப்பரையாக மாற்றவேண்டும் என்றாா்.

    இதுகுறித்து வேளாண்மை விற்பனை துறை வட்டாரத்தில் கூறுகையில், கேரளத்தில் விவசாயிகளிடம் நேரடியாக முழு தேங்காயை கொள்முதல் செய்து, கொப்பரையாக மாற்றி கூட்டுறவுத் துறை மூலம் நாபெட் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளனா். கேரள அரசு உத்தரவுப்படி கொப்பரையை கிலோ ரூ. 105.90-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    தேங்காயில் இருந்து கொப்பரையாக மாற்றுவதற்கு, கூடுதலாக கிலோவுக்கு ரூ. 3.40 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனா். அதேபோல, தமிழகத்திலும் கொப்பரை கொள்முதல் நிலையங்களில் மட்டையுடன் கூடிய தேங்காயை, கொப்பரையாக மாற்றி கொள்முதல் செய்ய அரசுக்கு அனுமதி கோரி கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றனா்.

    • அக்டோபர் 31-ந்தேதி வரை, நேபட் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • ‘சிண்டிகேட்’ அமைத்து வெளி மார்க்கெட்டில் விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

    காங்கயம்:

    தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த,பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பந்து கொப்பரை கிலோ 110 ரூபாய்க்கும், அரவை கொப்பரை கிலோ 105.90 ரூபாய்க்கு, கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை, 31 வரை செயல்பட்டன.கொப்பரை மற்றும் தேங்காய்க்கு வெளி மார்க்கெட்டில் விலை உயராத நிலையில் கடும் பாதிப்பை தென்னை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.எனவே கொப்பரை கொள்முதல் காலத்தை நீடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அக்டோபர் 31-ந்தேதி வரை, நேபட் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்ய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

    தென்னை மரங்கள், வழக்கமாக, ஏப்ரல்- மே மாதங்களில் மகசூல் குறைவாகவும், பருவ மழை துவங்கியதும், ஜூன், ஜூலை மாதங்களில் மகசூல் அதிகரித்தும் காணப்படும். கொப்பரை கொள்முதலில், மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஈரப்பதம், பூஞ்சானம் தாக்குதல் உள்ளிட்டவற்றோடு ஒரு ஏக்கருக்கு, 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.இதன் வாயிலாக ஒரு ஏக்கரில் உற்பத்தியாகும் கொப்பரையில் 20 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் மையங்களில் விவசாயிகள் விற்க முடியும்.மீதமுள்ள 80 சதவீதம் கொப்பரையை, வெளி மார்க்கெட்டில் விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகளிடமிருந்து ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்வதால், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும். அரசு கொள்முதல் காரணமாக வெளி மார்க்கெட்டில் விலை உயரும் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்து வருகிறது.ஆனால் தற்போது ஏக்கருக்கு 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு காரணமாக மீதமுள்ள கொப்பரை விற்பனைக்கு வரும் என்பதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, குறைந்த விலைக்கு மட்டுமே வெளி மார்க்கெட்டில் கொள்முதல் செய்து வருகின்றனர்.அரசு கொப்பரை கொள்முதல் துவக்கியும், வெளி மார்கெட்டில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு விலை உயரவில்லை. மாறாக அரசு நிர்ணயித்த ஆதார விலையை விட குறைவாகவே கிலோ 76 ரூபாய் என்ற அளவில் வெளிமார்க்கெட் விலை உள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: -விவசாயிகளுக்கு பயன் மற்றும் வெளி மார்க்கெட்டில், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் என்ற அடிப்படையில், மத்திய அரசு கொப்பரைக்கான ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது.தற்போது ஒரு ஏக்கரில் 60 முதல் 70 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு தென்னை மரத்தில் சராசரியாக ஆண்டுக்கு 150 முதல் 200 காய்கள் கிடைக்கும்.இவ்வாறு ஒரு ஏக்கரில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் காய்கள் வரை மகசூல் இருக்கும். 100 தேங்காயில் 13 முதல் 18 கிலோ வரை கொப்பரை உற்பத்தியாகும்.இவ்வாறு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் 1,300 முதல் 1500 கிலோ வரை கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.ஆனால் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் தென்னை இருந்தால் 216 கிலோ மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரையில், 80 சதவீதம் வரை வெளி மார்க்கெட்டில் விற்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான கொப்பரை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து வெளி மார்க்கெட்டில் விலை உயராமல் பார்த்துக்கொள்கின்றனர்.தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மட்டை உள்ளிட்ட உப பொருட்களும் விற்பனையாகாமல் தேங்கி வருகிறது.எனவே தென்னை மகசூல் அடிப்படை கணக்கீட்டை மாற்றி அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து கொப்பரைகளையும் அரசு கொள்முதல் செய்வதோடு கொப்பரைக்கான ஆதார விலையையும் உயர்த்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • விவசாயிகளின் 13 மாதம் கால போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
    • தேங்காய்களுக்கு கிலோ ரூ. 50 நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி காமராஜ் சிலை அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் டார்ச் லைட் ஒளி வீச்சில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநிலச் செயலாளர்பி.எஸ். மாசிலாமணி,விவசாய சங்கம் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ, பிவி.சந்தர ராமன், மாவட்ட நிர்வாக குழு கோ. ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.பி. சுந்தர், விவசாய சங்க நகர செயலாளர் முருகேசன், பக்கிரிசாமி, பி எச் பாண்டியன், பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விவசாயிகளின் 13 மாதம் கால போராட்டக் கோரிக்கைகளை ஒப்புதல் அளித்த படி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்தவும், கோவில் மடம் அறக்கட்டளை வக்போர்டு குத்தகை விவசாயிகளை தொடர் பேரிடர் பாதிப்பில் கால குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்யவும், தேங்காய்களுக்கு கிலோ 50 ரூபாய் நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ 150க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது.
    • குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு வேளாண் ஒழுங்குமுறை கமிட்டி வளாகம் கடந்த சில வருடமாக பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்கிய நிலையிலும், முட் புதர்கள் மண்டிய நிலையிலும் காணப்படுகிறது. ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது. பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், சாலியமங்களம், அம்மாபேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாரந்தோறும் பருத்தி கொள்முதலுக்காக பாபநாசம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இரவு, பகல் என ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

    பருத்தி தாட்டுகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது அதனால் பருத்தி கொள்முதலுக்கு வரும் விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

    எனவே அரசு பாபநாசம் ஒழங்குமுறை கமிட்டி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×