search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • விவசாயிகளின் 13 மாதம் கால போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
    • தேங்காய்களுக்கு கிலோ ரூ. 50 நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி காமராஜ் சிலை அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் டார்ச் லைட் ஒளி வீச்சில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநிலச் செயலாளர்பி.எஸ். மாசிலாமணி,விவசாய சங்கம் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ, பிவி.சந்தர ராமன், மாவட்ட நிர்வாக குழு கோ. ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.பி. சுந்தர், விவசாய சங்க நகர செயலாளர் முருகேசன், பக்கிரிசாமி, பி எச் பாண்டியன், பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விவசாயிகளின் 13 மாதம் கால போராட்டக் கோரிக்கைகளை ஒப்புதல் அளித்த படி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்தவும், கோவில் மடம் அறக்கட்டளை வக்போர்டு குத்தகை விவசாயிகளை தொடர் பேரிடர் பாதிப்பில் கால குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்யவும், தேங்காய்களுக்கு கிலோ 50 ரூபாய் நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ 150க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×