search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cottons"

    • ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது.
    • குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு வேளாண் ஒழுங்குமுறை கமிட்டி வளாகம் கடந்த சில வருடமாக பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்கிய நிலையிலும், முட் புதர்கள் மண்டிய நிலையிலும் காணப்படுகிறது. ஒழுங்குமுறை கமிட்டியில் கடந்த சில மாதங்களாக பருத்தி கொள்முதல் நடைபெற்று வருகிறது. பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர், சாலியமங்களம், அம்மாபேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாரந்தோறும் பருத்தி கொள்முதலுக்காக பாபநாசம் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு இரவு, பகல் என ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

    பருத்தி தாட்டுகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை சுற்றிலும் ஏராளமான முட்புதர்கள் மண்டிய நிலையில் உள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டமும் நாளுக்கே நாள் அதிகரித்து கொண்டே வருகிறது அதனால் பருத்தி கொள்முதலுக்கு வரும் விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது.

    எனவே அரசு பாபநாசம் ஒழங்குமுறை கமிட்டி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×