search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prostitution"

    • விருத்தாசலத்தில் விபசார வழக்கில் வக்கீல் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஆலடிரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு பெண்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளராக இருந்த பிஞ்சனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராயர் (30) என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவையில் விபசாரத்தில் ஈடுபட்ட் 3 இளம்பெண்களை மீட்ட போலீசார் பெண் புரோக்கர்கள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பஸ் நிறுத்தம் அருகே நேற்று 2 பெண்கள் நின்று கொண்டு அந்த வழியாக வரும் ஆண்களிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்க விரும்புகிறீர்களா? என விபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெண்களை வைத்து வீட்டில் விபசார நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்களான குறிச்சி கல்லுக்குழியை சேர்ந்த பிரேமா(58), கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 38 வயது பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோன்று கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகே காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் அங்கு வரும் ஆண்களை விபசாரத்திற்கு அழைத்துள்ளனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த விபசார புரோக்கர்கள் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சந்திரசேகர்(38), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்யா(31) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரை சேர்ந்த பெண் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோரை மீட்டு போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் 151 ‘மசாஜ் கிளப்’புகளில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னையில் ஏராளமான மசாஜ் கிளப்புகள் செயல்படுகின்றன. ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் இந்த மசாஜ் கிளப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் இதற்கு அனுமதி பெற வேண்டும். மாநகராட்சியும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் மசாஜ் கிளப்புகளுக்கு அனுமதி வழங்குகிறது.

    மசாஜ் கிளப்புகளில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை மீறி ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன.

    அந்தவகையில் சென்னையில் 151 மசாஜ் கிளப்புகள் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார் 151 மசாஜ் கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக மசாஜ் கிளப் நடத்திய உரிமையாளர்களும், புரோக்கர்களும் பிடிபட்டனர். பல மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத சிகிச்சை என்று கூறிக்கொண்டு வெளிப்படையாக விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

    விபசாரத்துக்கு ஆண்களை அழைப்பதில் ஒரு ரகசிய வார்த்தை வைத்து இருந்தனர். மசாஜ் கிளப்புகளுக்கு ஆண்கள் செல்லும்போது பவுடர் மசாஜ் வேண்டுமா? ஆயில் மசாஜ் வேண்டுமா? என்று கேட்பார்கள். பவுடர் மசாஜ் என்றால், அது சாதாரணமாக இருக்கும். அதில் 'செக்ஸ்' கலந்து இருக்காது. ஆயில் மசாஜ் என்றால், அழகிகளோடு உல்லாசமாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    போலீஸ் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் நேற்று மாலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இரவு வரையிலும் சோதனை நீடித்ததால், பிடிபட்ட அழகிகள் எத்தனை பேர்?, புரோக்கர்கள் எத்தனை பேர் பிடிபட்டார்கள்? என்ற விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.
    மதுரையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் விபசாரம் தொடர் கதையாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தர விட்டார்.

    மாநகர தலைமையக துணை கமி‌ஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகரம் முழுவதும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அப்துல்கலாம் ஆரிப்பை (23) செல்போனில் பெண் தொடர்பு கொண்டார். அவர், “எங்களிடம் விபசார அழகிகள் உள்ளனர். வீட்டில் வைத்து தொழில் செய்து வருகிறோம். போலீஸ் பிரச்சினை இல்லை” என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

    பயந்துபோன அப்துல்கலாம் பதில் சொல்லாமல் செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து அவர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் அப்துல்கலாம் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்வது என்று போலீசார் திட்டமிட்டனர். போலீசாரின் திட்டப்படி அப்துல்கலாம் மீண்டும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அவர், “நான் பணம் கொடுக்க தயார், எங்கு வரவேண்டும்?” என்று கேட்டுள்ளார். அந்த பெண் கண்ணனேந்தல் பகுதிக்கு வரச் சொல்லியதன் பேரில் அங்கு சென்றார்.

    அவரை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 2 பெண்கள் இருந்தனர். அப்துல் கலாமிடம் பணம் வாங்கிக் கொண்ட கும்பல், அவரை பெண்ணுடன் தனி அறைக்கு அனுப்பி வைத்தது. அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாராயணபுரம் கோகலே தெருவைச் சேர்ந்த பாண்டிகுமார் (36), புதூர் மகாலட்சுமி நகர் தேவராஜ் மனைவி பிரசன்னாதேவி (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார். போலீசார் இருவரையும் திருப்பாலை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    புதுவையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரும் ஏற்கனவே விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து உருளையன்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அண்ணாநகர் மற்றும் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர்.

    சோதனையில் 10 அழகிகள் மீட்கப்பட்டனர். இதில் அண்ணாநகர் ஸ்பாவிலிருந்து மீட்கப்பட்ட அழகிகளில் 17 வயது சிறுமியும் ஒருவர்.

    இதனால் உருளையன் பேட்டை போலீசார் விபசார வழக்கை போக்சோ வழக்காக மாற்றி அண்ணாநகர் ஸ்பாவின் உரிமையாளர் சுனிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் அந்த சிறுமியை ஸ்பாவில் பியூட்டிசியன் வேலைக்காக அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் ஸ்பா உரிமையாளர் சுனிதாவை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த ஸ்பாவிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தையும் சுனிதா போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்தார்.அதன் அடிப்படையில் சென்னை,புதுவை,கடலூர் திண்டிவனம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 40 பேர் வரை அந்த சிறுமியை சீரழித்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

    மேலும் ஸ்பாவிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்ளை அடையாளம் காண்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கினர்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்டதற்கான பரிவர்த்தனை மற்றும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் ஸ்பாவில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் கைப்பற்றினர்.

    அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 30 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் மறைமலை அடிகள் சாலையில் சுற்றி திரிவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர்கள் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன் (வயது 29), மற்றொருவர் கோட்டக்குப்பத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்தது. இதில், விக்னேஷ்வரன் சென்னையில் உள்ள குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அருண் தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் அந்த சிறுமியை 10 நாட்களாக சீரழித்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் ஏற்கனவே விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என தெரியவந்தது.

    பின்னர் விக்னேஷ் மற்றும் அருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் திவீரமாக இறங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் அறையில் விபசார தொழிலில் ஈடுபட்ட அழகி, புரோக்கர் மற்றும் லாட்ஜ் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகளும் கன்னியாகுமரியில் ஊடுருவி சுற்றுலா பயணிகளிடம் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கன்னியாகுமரியல் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மாறு வேடங்களிலும் போலீசார் கண்காணிப்பு நடக்கிறது.

    அதேப்போல விபசார செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் தற்போது கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவதால் விபசார கும்பல் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு விபசார புரோக்கர் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை அழகியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த லாட்ஜ் முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்யன் (வயது 52) என்ற விபசார புரோக்கர் நின்றுகொண்டு விபசாரத்திற்காக சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு அறையில் அரை குறை ஆடையுடன் அழகி ஒருவர் இருந்ததும் தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அந்த அழகி அதிர்ச்சி அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த லாட்ஜின் மானேஜரும் கைது செய்யப்பட்டார்.
    அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏட்டு தலைமறைவானதை அடுத்து அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #Policeconstable
    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் சேர்ந்து கோயம்பேடு போலீஸ் ஏட்டு பார்த்திபன் விபசார தொழிலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாடி பகுதியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவரான விஸ்வநாதன் ஜெயந்தியின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுத்தபோது, அந்த பணம் போதாது. மேலும் தர வேண்டும் என்று விபசார அழகியான ஜெயந்தி கேட்டதால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி ஏட்டு பார்த்திபனுக்கு ஜெயந்தி தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் ரெய்டுக்கு செல்வது போல சென்று மிரட்டல் விடுத்தார்.

    பின்னர் விஸ்வநாதனின் மோட்டார்சைக்கிளை பறித்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் செய்வதறியாமல் தவித்தார்.

    பின்னர் விஸ்வநாதன் மீது ஜெயந்தி போலீசிலும் புகார் அளித்தார். அதில் தன்னிடமிருந்து விஸ்வநாதன் பணப்பையை பறித்துக் கொண்டதாக கூறி இருந்தார்.

    ஆனால் போலீஸ் விசாரணையில் விஸ்வநாதன் போலீஸ் ஏட்டு ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டினார் என்று கூறியதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    ஜெயந்தியின் செல்போனை வாங்கி அவர் யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பதை ஆய்வு செய்தனர். அப்போது ஜெயந்தி ஏட்டு பார்த்திபனிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசி இருப்பது அம்பலமானது. இதன் பிறகே இருவரது லீலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. ஜெயந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏட்டு பார்த்திபன் மீது விபசார வழக்கு போடப்பட்டது. வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் பாய்ந்தன.

    ஜெயந்தி மீதும் அதே சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயந்தி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஏட்டு பார்த்திபன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பார்த்திபனை தேடி கண்டுபிடித்து கைது செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதனையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை முடக்கி விட்டுள்ளன.

    ஏட்டு பார்த்திபன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தீவிரமாகி உள்ளதால் ஏட்டு மீதான பிடி இறுகி உள்ளது.
    கோவை சித்தாபுதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தி வந்த புரோக்கர் உள்பட 5 பெண்கள் போலீசார் கைது செய்தனர்.
    கோவை சித்தாபுதூர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.

    அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் நேற்று வீட்டில் இருந்த ஒரு ஆண் மற்றும் 5 பெண்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி.என்.பாளையத்தை கண்ணன்(52), சூலூர் சுமதி (45), சரவணம்பட்டி நாகமணி (37), சோமனூர் ‌ஷப்னா(27), எட்டிமடை ரேகா(29), பல்லடம் மகேஸ்வரி(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். அவரையும், 5 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் ஏட்டு மீது 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Policeconstable

    சென்னை:

    அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயந்தி. தனது வீட்டில் வைத்தே இவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு பார்த்திபன் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி விபசார அழகியின் வீட்டுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயந்தியின் வீட்டுக்கு விஸ்வநாதன் என்ற வாலிபர் சென்றுள்ளார். உல்லாசம் அனுப விப்பதற்காக சென்ற அந்த வாலிபரை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்ட மிட்டார்.

    இதன்படி வாலிபர் விஸ்வநாதன் கொடுத்த பணம் போதாது என்று கூறி அவர் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் இதுபற்றி போலீஸ் ஏட்டு பார்த்திபனுக்கும் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அரும்பாக்கத்தில் உள்ள விபசார அழகி ஜெயந்தியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து செக்ஸ் ஆசையில் வந்த விஸ்வநாதனை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவர் மீதே குற்றம்சாட்டி அமிஞ்சிகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் வாலிபர் விஸ்வநாதன், ஏட்டு பார்த்திபன் பற்றிய ரகசிய தகவல்களை கொட்டித் தீர்த்து விட்டார். தன்னை மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்ததாகவும் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டே இதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார்.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணா நகர் துணை கமி‌ஷனர் சுதாகர் ஆகியோரது மேற் பார்வையில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஏட்டு பார்த்திபனின் லீலைகள் அம்பலமானது.

    இதையடுத்து வாலிபர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் படி அமிஞ்சிகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்தார். போலீஸ் ஏட்டு பார்த்திபன், விபசார அழகி ஜெயந்தி ஆகியோர் மீது விபசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போடப்பட்டது.

    வாலிபர் விஸ்வநாதனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ் 2 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டியது, வழப்பறி உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் ஏட்டு பார்த்திபன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏட்டு பார்த்திபனின் செயல்பாடுகள் பற்றியும், பின்னணி குறித்தும் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்த்திபனின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    கைதான விபசார அழகி ஜெயந்தி போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், கடந்த ஓராண்டாக ஏட்டு பார்த்திபனுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

    விஸ்வநாதனை ஏமாற்றி பணம் பறித்தது போல இருவரும் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழகி ஜெயந்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் அரும்பாக்கம் பகுதிக்கு குடிவந்துள்ளார்.

    விபசாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதும் உறுதியாகி உள்ளது. இது போன்று விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை போலீசார் குற்றவாளியாக சேர்க்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பார்கள்.

    ஆனால் ஜெயந்தி விபசார தொழிலில் ஈடுபடும் எண்ணத்தில் ஏட்டு பார்த்திபனுடன் சேர்ந்தே அரும்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியிருந்தது உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஜெயந்தி மீது விபசார வழக்கு பாய்ந்துள்ளது. ஏட்டு பார்த்திபனும் வசமாக சிக்கி விட்டார். போலீஸ் ஏட்டு ஒருவர் விபசார தொழிலில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டிருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இச்சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. #Policeconstable

    போலீசார் என கூறி மிரட்டி பணம் வாங்கிய விபச்சார புரோகர்களை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
    போரூர்:

    விபசார தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி சிலர் பணம் பறிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2பேரை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் 2 பெண்களை தனியார் விடுதியில் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதவிர விபசார தொழில் செய்து வரும் சிலரிடம் தாங்கள் விபச்சார தடுப்பு போலீசார் என கூறி மிரட்டி பணம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் வினோத்(32), நரேஷ்(24) என்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். #tamilnews
    துடியலூர் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.

    சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமியை நடுரோட்டில் அடித்து உதைத்த வங்காளதேச பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா (வயது 30). இவர் அங்குள்ள 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி வேலூருக்கு அழைத்து வந்தார்.

    வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற போகிறோம் என்ற ஆசையில் வேலூர் வந்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    சிறுமியை வேலூரில் உள்ள லாட்ஜில் தங்க வைத்த முஸ்கானா சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தினார்.அதற்கு சிறுமி மறுத்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபட மிரட்டினார். அங்கிருந்து தப்பிய சிறுமி கிருஷ்ணா தியேட்டர் அருகே ஓடி சென்றார்.

    அவரை பின் தொடர்ந்து சென்ற முஸ்கானா சிறுமியை மடக்கி பிடித்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முஸ்கானாவை கைது செய்தனர்.

    மேலும் அவரது பாஸ்போர்ட் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×