என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் விபசாரம்: பெண் புரோக்கர்கள் உள்பட 4 பேர் கைது - 3 இளம்பெண்கள் மீட்பு
கோவை:
கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பஸ் நிறுத்தம் அருகே நேற்று 2 பெண்கள் நின்று கொண்டு அந்த வழியாக வரும் ஆண்களிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்க விரும்புகிறீர்களா? என விபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெண்களை வைத்து வீட்டில் விபசார நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்களான குறிச்சி கல்லுக்குழியை சேர்ந்த பிரேமா(58), கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 38 வயது பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகே காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் அங்கு வரும் ஆண்களை விபசாரத்திற்கு அழைத்துள்ளனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த விபசார புரோக்கர்கள் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சந்திரசேகர்(38), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்யா(31) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரை சேர்ந்த பெண் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோரை மீட்டு போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்