search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police constable case"

    சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா பதுக்கிய வழக்கில் போலீஸ் ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சென்னை:

    சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராமதுரை.

    போலீஸ் நிலையத்தில் ராமதுரை பணியில் இருந்தபோது மெக்கானிக் ஆறுமுகம் என்பவர் சதீஷ், பூமிநாதன் ஆகிய இருவர் மீது புகார் அளித்துள்ளார். தன்னிடம் தகராறு செய்ததாக 2 பேர் மீதும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

    இதுபற்றிய விசாரணைக்காக சதீஷ், பூமிநாதன் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கர்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களது மோட்டார் சைக்கிளில் இருந்து கஞ்சா பொட்டலங்களை ஏட்டு ராமதுரை பறிமுதல் செய்தார்.

    இதுபற்றி அவர்களிடம் அவர் விசாரணையும் நடத்தினார். இந்த விவகாரம் பற்றி இன்ஸ்பெக்டர் ஜான் வின்சென்ட் (பொறுப்பு) மேல் விசாரணை மேற் கொண்டார். அப்போது வாலிபர் சதீஷ், பூமிநாதன் இருவரும் கஞ்சா பொட்டலங்களை நாங்கள் பதுக்கி வைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது புகார் கொடுத்த மெக்கானிக் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்களை வைப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், “ஏட்டு ராமதுரையின் துணையுடன் எதிராளிகளை பழி வாங்குவதற்காக அவர்களது மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்களை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மெக்கானிக் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஏட்டு ராமதுரை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடி தலைமறைவான அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் ஏட்டு ராமதுரை மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. அவரை சஸ்பெண்டு செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் ஏட்டு மீது 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Policeconstable

    சென்னை:

    அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயந்தி. தனது வீட்டில் வைத்தே இவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு பார்த்திபன் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி விபசார அழகியின் வீட்டுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயந்தியின் வீட்டுக்கு விஸ்வநாதன் என்ற வாலிபர் சென்றுள்ளார். உல்லாசம் அனுப விப்பதற்காக சென்ற அந்த வாலிபரை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்ட மிட்டார்.

    இதன்படி வாலிபர் விஸ்வநாதன் கொடுத்த பணம் போதாது என்று கூறி அவர் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் இதுபற்றி போலீஸ் ஏட்டு பார்த்திபனுக்கும் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அரும்பாக்கத்தில் உள்ள விபசார அழகி ஜெயந்தியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து செக்ஸ் ஆசையில் வந்த விஸ்வநாதனை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவர் மீதே குற்றம்சாட்டி அமிஞ்சிகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் வாலிபர் விஸ்வநாதன், ஏட்டு பார்த்திபன் பற்றிய ரகசிய தகவல்களை கொட்டித் தீர்த்து விட்டார். தன்னை மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்ததாகவும் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டே இதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார்.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணா நகர் துணை கமி‌ஷனர் சுதாகர் ஆகியோரது மேற் பார்வையில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஏட்டு பார்த்திபனின் லீலைகள் அம்பலமானது.

    இதையடுத்து வாலிபர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் படி அமிஞ்சிகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்தார். போலீஸ் ஏட்டு பார்த்திபன், விபசார அழகி ஜெயந்தி ஆகியோர் மீது விபசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போடப்பட்டது.

    வாலிபர் விஸ்வநாதனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ் 2 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டியது, வழப்பறி உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் ஏட்டு பார்த்திபன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏட்டு பார்த்திபனின் செயல்பாடுகள் பற்றியும், பின்னணி குறித்தும் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்த்திபனின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    கைதான விபசார அழகி ஜெயந்தி போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், கடந்த ஓராண்டாக ஏட்டு பார்த்திபனுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

    விஸ்வநாதனை ஏமாற்றி பணம் பறித்தது போல இருவரும் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழகி ஜெயந்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் அரும்பாக்கம் பகுதிக்கு குடிவந்துள்ளார்.

    விபசாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதும் உறுதியாகி உள்ளது. இது போன்று விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை போலீசார் குற்றவாளியாக சேர்க்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பார்கள்.

    ஆனால் ஜெயந்தி விபசார தொழிலில் ஈடுபடும் எண்ணத்தில் ஏட்டு பார்த்திபனுடன் சேர்ந்தே அரும்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியிருந்தது உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஜெயந்தி மீது விபசார வழக்கு பாய்ந்துள்ளது. ஏட்டு பார்த்திபனும் வசமாக சிக்கி விட்டார். போலீஸ் ஏட்டு ஒருவர் விபசார தொழிலில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டிருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இச்சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. #Policeconstable

    ×