search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு - தனியார் நிறுவன ஊழியர்கள் கைது

    புதுவையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரும் ஏற்கனவே விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து உருளையன்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அண்ணாநகர் மற்றும் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர்.

    சோதனையில் 10 அழகிகள் மீட்கப்பட்டனர். இதில் அண்ணாநகர் ஸ்பாவிலிருந்து மீட்கப்பட்ட அழகிகளில் 17 வயது சிறுமியும் ஒருவர்.

    இதனால் உருளையன் பேட்டை போலீசார் விபசார வழக்கை போக்சோ வழக்காக மாற்றி அண்ணாநகர் ஸ்பாவின் உரிமையாளர் சுனிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் அந்த சிறுமியை ஸ்பாவில் பியூட்டிசியன் வேலைக்காக அழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் ஸ்பா உரிமையாளர் சுனிதாவை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த ஸ்பாவிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தையும் சுனிதா போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்தார்.அதன் அடிப்படையில் சென்னை,புதுவை,கடலூர் திண்டிவனம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 40 பேர் வரை அந்த சிறுமியை சீரழித்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

    மேலும் ஸ்பாவிற்கு வந்து சென்ற வாடிக்கையாளர்ளை அடையாளம் காண்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கினர்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்டதற்கான பரிவர்த்தனை மற்றும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் ஸ்பாவில் உள்ள வருகை பதிவேடுகளை போலீசார் கைப்பற்றினர்.

    அதன் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் 30 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட 2 பேர் மறைமலை அடிகள் சாலையில் சுற்றி திரிவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர்கள் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன் (வயது 29), மற்றொருவர் கோட்டக்குப்பத்தை சேர்ந்த அருண் (24) என்பது தெரிய வந்தது. இதில், விக்னேஷ்வரன் சென்னையில் உள்ள குடோனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அருண் தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் அந்த சிறுமியை 10 நாட்களாக சீரழித்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் ஏற்கனவே விபசார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர்கள் என தெரியவந்தது.

    பின்னர் விக்னேஷ் மற்றும் அருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் திவீரமாக இறங்கியுள்ளனர்.

    Next Story
    ×