search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "promotion"

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது. இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏல‌த்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகை யான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலா யுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.160-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், காக்கட்டான் ரூ.200-க்கும் ஏலம் போனது.

    இந்நிலையில் நேற்று அமாவாசை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏல‌த்தில், குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
    • இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் காவல்துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 239 பேர் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான ஆணையை சென்னை டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டு உள்ளது. நாமக்கல் எஸ்.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராஜா நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் மாநகர சி.பி.சி.ஐ.டி. ஓ.சி.யு. பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம் சென்னை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.யாக பதவி உயர்வுபெற்றுள்ளார். ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், என்.ஐ.பி. சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோரும் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வுபெற்றுள்ளனர்.

    • பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு.
    • பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், நாகப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் குண்டுமல்லிகை ரூ.400- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.150- க்கும், முல்லை ரூ.400- க்கும், செவ்வந்தி ரூ.150- க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லிகை கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.300- முல்லை கிலோ ரூ.1500-க்கும், பச்சை முல்லை ரூ.1500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.320- க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    பூக்களின் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பூக்கள் விலை‌ உயர்வு அடைந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு நிலைகளில் துணைப்பதிவாளர்களாக பணிபுரிந்து வரும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • மொத்தம் 11 பேர் இணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு நிலைகளில் துணைப்பதிவாளர்களாக பணிபுரிந்து வரும் 11 பேருக்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராக பணிபுரிந்து வந்த மீனா அருள், கள்ளக்குறிச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக பதவி உயர்வு அளித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோல், நெல்லை சரக துணைப்பதிவாளர் லட்சுமணக்குமார், தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராகவும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி துணைப்பதிவாளர் முருகேசன், திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளராகவும், கோபிச்செட்டிபாளையம் துணைப்பதிவாளர் கந்தராஜா, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    மொத்தம் 11 பேர் இணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்து ள்ளார்.

    இதேபோல், கரூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் உள்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது. நேற்று சேலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.320-க்கு விற்பனையானது. முல்லை ரூ. 240, ஜாதி மல்லி, ரூ. 260, காக்காட்டான் ரூ.160, கலர் காக்காட்டான்

    ரூ. 120, அரளி ரூ. 100, வெள்ளைஅரளி ரூ. 100, மஞ்சள் அரளி ரூ. 100, செவ்வரளி ரூ. 120, நந்தியாவட்டம் ரூ. 60, சம்பங்கி ரூ. 80, சாதா சம்பங்கி ரூ. 80 க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சேலம் மார்க்கெட்ககளில் மல்லிகைபூ ஒரு கிலோ இன்று 500 ரூபாக்கு விற்பனையானது. முல்லை 360, ஜாதி மல்லி 260, காக்காட்டான் 200, கல்ர் காக்காட்டான் 160, அரளி 120, செவ்வரளி 140, நந்தியாவட்டம் 60, சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாது. ஆனாலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    • துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கி நேற்று உத்தரவிடப்பட்டது.
    • இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

    சேலம்:

    தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் சார் பதிவாளர்கள் நிலையில் பணியாற்றி வரும் 58 பேருக்கு துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கி நேற்று உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, சேலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் குமார், கோபால், சின்னபையன், தனசேகரன், வெங்கடேசன், நாமக்கல் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் பரமசிவன், ரவிச்சந்திரன், நாகராஜன் உள்பட 58 கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப் பதிவாளராக பரமசிவன், கிருஷ்ணகிரி பொது வினியோக திட்டத்தின் துணைப்பதிவாளராக குமார், திருச்செங்கோடு கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளராக ராம்குமார், தர்மபுரி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளராக மதியழகன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளராக நாகராஜன் உள்பட 58 கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

    • மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது.

    நெல்லை:

    தமிழகத்தின் 6-வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வார்டுகளில் அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு உதவி கமிஷனர், பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேஸ்திரிகள் என சுமார் 100 பேர் வரை பணியில் இருக்கின்றனர்.

    இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் உள்ளனர். இது தவிர சுமார் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கமிஷனர், நிர்வாகம், கணக்கு உள்ளிட்ட தனித்தனி துறைகளுக்கு உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணிகள் மேற்கொள்வதற்கு என மொத்தமாக மாநகராட்சியில் 1,500 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    இவ்வாறு பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு மண்டலத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றினால் அவருக்கு சுகாதார அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படும்.

    ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் மாநகராட்சி கமிஷனர் பார்வைக்கு கடிதம் சென்று அவர் ஒப்புதல் அளித்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பதவி உயர்வு பெறும் இடத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி வகித்து வந்தால் அதாவது காலி பணியிடம் இல்லை எனில் பதவி உயர்வுக்கு தகுதியான நபருக்கு அந்த உயர் பதவிக்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது.

    அந்த வகையில் சமீபத்தில் பதவி உயர்வுக்கு தகுதியான 5 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு கமிஷனர் பார்வைக்கு சென்றதாகவும் அவர் கையெழுத்திட்டு அனுப்பிய நிலையில், கவுன்சில் கூட்டத்தில் அந்த பதவி உயர்வு ஆணைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.

    அதாவது மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான பணி ஆணையை வழங்குவதற்கு கமிஷனர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார். ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது. இதேநிலைதான் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேட்டால், மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், பதவி உயர்வு கொண்டு வந்தால் சம்பளமும் உயர்த்தி வழங்க வேண்டும். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் கூறி கவுன்சில் கூட்டத்தில் அந்த தீர்மானத்தை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்.

    அதே நேரத்தில் பதவி உயர்வு மற்றும் அதற்குரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனில் மிகப்பெரிய தொகையை அரசியல் பிரமுகர்கள் லஞ்சமாக கேட்கின்றனர் என்றும் அதிகாரிகள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபட வில்லை.
    • மேலும் பதவி உயர்வுகளில் பாரப்பட்சம் காட்டி கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் கடந்த 50 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபட வில்லை.

    மேலும் பதவி உயர்வுகளில் பாரப்பட்சம் காட்டி கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் 95 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிப்பதவி உயர்வு ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டுள்ளது.

    இதைச் சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் ரங்க சாமியிடம் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் உள்ள காலியிடங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை புதுவை பூர்வீக ஆதிதிராவிடர் மற்றும் அட்டவணை கட்டமைப்பு தலைவர் ராமலிங்கம் வழங்கினார்.

    கூட்டமைப்பின் நிர்வாகிகள் கஜேந்திரன் விநாயகமுருகன், அன்புமணி, காரல்மாரஸ், சரவணபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ரங்கசாமி கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

    • கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன.
    • பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் தவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன் மற்றும் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அங்கன்வாடி பணிகளை மேற்கொள்வதற்காக ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைபேசி வழங்கப்பட்டது. தற்போது இந்த கைபேசிகள் முற்றிலும் பழுதடைந்து விட்டன. ஆனாலும் பழுதடைந்த கைபேசிகளை வைத்து பணி செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.

    இதனை கண்டித்து வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவல ர்களிடம் கைபேசியை ஒப்படைப்பு என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூன்றாண்டு பணி முடித்த அங்கன்வாடி உயர்வு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வில் சென்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

    எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவமிக்க அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். சில்லறை செலவினம் பயணப்படி ஆகியவைகளை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி வரன்முறை செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தரமணியில் உள்ள இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள காத்திருப்பு போராட்ட த்தில் திருவாரூர் மாவ ட்டத்திலிருந்து ஏராளமா னவர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இறுதியில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.

    • தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    • தேர்வுக்காக 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று பணியில் உள்ள போலீசார் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்காக 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தேர்வு எழுத வராதவர்களின் விவரம் மாலையில் தெரியவரும்.

    இந்த தேர்வை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    புதுவையில் 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீசில் 8 சூப்பிரண்டுகள் இடம் காலியாக இருந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த மாறன், பாஸ்கர்,, ஜிந்தா கோதண்டராமன் உள்பட 8 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர்.

    இதையடுத்து அந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடங்கள் காலியாக இருந்தது. அந்த இடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப முடிவு செய்தனர்.

    அதன்படி சப்-இன்ஸ் பெக்டர்களாக பணிபுரிந்த சுப்பிரமணியன், ஜபாஹிரில்லா, சந்திர சேகரன், வெற்றிவேல், சேகர், பேட்ரிக், ரகுபதி, தியாகராஜன் ஆகிய 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

    இந்த உத்தரவை போலீஸ் தலைமையக போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார். இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தர விடப்பட்டுள்ளது.

    சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    செல்லப்பாண்டியன், சீனிவாசன், செல்வராஜ், பிரகாஷ்குமார், செந்தில், இளங்கோவன், கமலக்கண்ணன், பாலகிருஷ்ண பிள்ளை, கருணாகரன், ராதாகிருஷ்ணன், பாபு, ஹரிதாஸ், மனோகர் ஆகியோர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். #tamilnews
    ×