என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆதிதிராவிடர்களுக்கு கூட்டுறவு வங்கியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபட வில்லை.
- மேலும் பதவி உயர்வுகளில் பாரப்பட்சம் காட்டி கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் கடந்த 50 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பபட வில்லை.
மேலும் பதவி உயர்வுகளில் பாரப்பட்சம் காட்டி கடந்த 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் 95 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிப்பதவி உயர்வு ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் ரங்க சாமியிடம் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் உள்ள காலியிடங்கள் மற்றும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கை மனுவை புதுவை பூர்வீக ஆதிதிராவிடர் மற்றும் அட்டவணை கட்டமைப்பு தலைவர் ராமலிங்கம் வழங்கினார்.
கூட்டமைப்பின் நிர்வாகிகள் கஜேந்திரன் விநாயகமுருகன், அன்புமணி, காரல்மாரஸ், சரவணபெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ரங்கசாமி கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்