என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "posco law"
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பகவதிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்(வயது19). அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று 3 வயது சிறுமி இவரது கடைக்கு மிட்டாய் வாங்க வந்துள்ளார்.
அந்த சிறுமியை நைசாக பேசி தனது வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மகளை காணாமல் தேடினர். நீண்டநேரத்திற்கு பின்பு வந்த சிறுமியின் உடலில் மாற்றம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அசோக்கை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை:
கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் - தந்தை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாய் தனியாக பிரிந்து சென்று வேடப்பட்டி நாகராஜபுரத்தில் வசித்து வருகிறார். அவருடன் மாணவி தங்கி உள்ளார்.
சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்த போது வெங்கிடாபுரத்தை சேர்ந்த கோவை ரெயில் நிலையத்தில் ஆவின் டீக்கடை நடத்தி வரும் சுப்பிரமணியம் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் மாணவியை அழைத்து சென்று பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்.
கோபி:
திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நம்பியூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்ற போது அங்கு உறவினர் ஒருவரின் மகனான செந்தில் என்பவர் மாணவிக்கு ஆப்பிள் ஜீஸ் கொடுத்தார். அப்போது அதில் மயக்க மருந்து கலந்ததால் மயங்கிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்நிலையில் மாணவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே நம்பியூர் மற்றும் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற போது மாணவி கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் வழக்குபதிவு செய்ய விசாரணை நடத்தினார். தலைமறைவான வாலிபர் செந்திலை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
முகப்பேர், பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெருமாள் (33) என்பவர் மாணவியிடம் அடிக்கடி பேசினார். அவரது கொடூர பார்வையை அறியாத மாணவியும் நட்பாக பேசி வந்தார்.
மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரது தாய் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய பெருமாள் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவர் மாணவியை மிரட்டி பலமுறை கற்பழித்தார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டினார்.
இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் தெரிவிக்கவில்லை. இதனை பயன்படுத்தி பெருமாள், பல மாதங்களாக மாணவியிடம் உல்லாசமாக இருந்து உள்ளார்.
இதற்கிடையே மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை தாயார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.
மாணவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
பேரையூர்
மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பிரபு-தேவி தம்பதியினர் தங்களது பெண் குழந்தை என ஒரு குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மஞ்சள் காமாலை பாதிப்புக்குள்ளான அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
இதனை தொடர்ந்து குழந்தை எங்கு பிறந்தது என்பது பற்றிய விவரத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டபோது வெங்கடேஷ் பிரபு-தேவி தம்பதியர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த குழந்தை கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என கருதி போலீசில் புகார் செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெங்கடேஷ்பிரபு-தேவி தம்பதியினர் பணம் கொடுத்து குழந்தையை வாங்கி இருப்பது தெரியவந்தது.
திருமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமங்கலம் அருகே உள்ள பூலையாபுரத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி வயிற்றுவலி காரணமாக திருமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த பரிசோதனையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
அதே ஆஸ்பத்திரியில் மாணவிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அந்த குழந்தை வேண்டாம் என்று மாணவியும், அவரது பெற்றோரும் கூறி விட்டு 28-ந்தேதி அங்கிருந்து சென்றுள்ளனர்.
பிறந்த குழந்தைக்கு மஞ்சள்காமாலை தொற்று இருந்த நிலையில் அங்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வந்த மதுரையை சேர்ந்த வெங்கடேஷ்ராவ் தனது நண்பருக்காக அந்த குழந்தையை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர்தான் வெங்கடேஷ்பிரபு-தேவி தம்பதியினருக்கு குழந்தை வாங்கி கொடுத்துள்ளார் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் அருகே மகளிர் தையல் நிறுவனம் நடத்தி வந்த பங்களாச் சேரியைச் சேர்ந்த முத்துப் பாண்டி (32) என்பவர்தான் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முத்துப்பாண்டியை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்