search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassment boy"

    திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரையை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவன் ரஞ்சித் (வயது 6), பெயர் மாற்றப்பட்டுள்ளது. சிறுவன் ரஞ்சித் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் மாணவணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 

    இது குறித்து மாணவனின் பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலக்கரை கீழப்புதூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி பாபா என்ற சக்திவேல் (50) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ×