search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested employee"

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை எம்.சி. ரோட்டில் ரெடிமேட் ஜவுளிக்கடை உள்ளது. இங்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

    அவரிடம் கடை ஊழியரான கொருக்குப் பேட்டை கண்ணன் தெருவை சேர்ந்த செல்லத்துரை (44). அடிக்கடி பேசி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் மாணவி புறப்பட தயார் ஆனார். அப்போது ஊழியர் செல்லத்துரை கடையின் குடோனில் இருக்கும் துணிகளை எடுத்து தந்து விட்டு செல்லுமாறு கூறினார்.

    இதையடுத்து மாணவி, குடோனுக்கு சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த செல்லதுரை, திடீரென மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு வந்த கடை ஊழியர்கள் செல்லத்துரையை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். செல்லத் துரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன் விரோதத்தில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    ராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று கோவிந்தன் பஜாரில் நின்றபோது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் வெட்டியதில் கோவிந்தன் காயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கீழராஜ குலராமன் போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யர்விளையை சேர்ந்தவர் அந்தோணி பாக்கியம் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் தனது மகளுடன் அந்தோணி பாக்கியம் வீட்டில் வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில் சிறுமியிடம் அந்தோணி பாக்கியம் அடிக்கடி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். 

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தொழிலாளி அந்தோணி பாக்கியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    ஆர்.டி.ஓ. அலுவலக இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்வரன். இவருடைய மனைவி முத்து சித்ரா (வயது 29). ஆலம்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இதே அலுவலகத்தில் ஆலம்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த அழகு மகன் வீரவல்லவ வர்மன் (25) தற்காலிக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் உரிமம் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது உண்டு.

    அப்படி வரும் உரிமங்களின் உரிமையாளர்களை வீரவல்லவ வர்மன் தனியாக சந்தித்து பணம் பெறுவதாக, இளநிலை உதவியாளர் முத்து சித்ராவுக்கு புகார் வந்தது.

    இது பற்றி வீரவல்லவ வர்மனிடம் அவர் கேட்டார். அப்போது தன்னை கையால் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக வீரவல்லவ வர்மன் மீது திருமங்கலம் தாலுகா போலீசில், முத்து சித்ரா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீரவல்லவ வர்மனை கைது செய்தனர்.

    திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரையை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவன் ரஞ்சித் (வயது 6), பெயர் மாற்றப்பட்டுள்ளது. சிறுவன் ரஞ்சித் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் மாணவணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 

    இது குறித்து மாணவனின் பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலக்கரை கீழப்புதூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி பாபா என்ற சக்திவேல் (50) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    சென்னிமலையில் பெண்ணை கடத்தி கொலை செய்த தொழிலாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24). தொழிலாளி.

    இதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    சிந்துவுக்கு தனசேகர் உறவு முறையில் தம்பி ஆவார். இந்த நிலையில் தனசேகரிடம் சிந்துவின் கணவர் ஆறுமுகம் குடும்ப செலவிற்கு ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டார்.

    நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார். நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூறினார்.

    இதையடுத்து சிந்துவை அழைத்து செல்லுமாறு ஆறுமுகம் கூறினார். அதன் படி சிந்துவை மோட்டார் சைக்கிளில் தனசேகர் அழைத்துச் சென்றார். பின்னர் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகர் ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து விட்டு சிந்துவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றி விட்டேன் என கூறினார்.

    ஆனால் அதன்பின்னர் சிந்து வீட்டுக்கு வரவில்லை. அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஆறுமுகம் இது பற்றி தனசேகரை விசாரித்தார்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சிந்துவின் உறவினர்கள் தனசேகரனை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது சிந்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    மேலும் பிணத்தை ஊத்துக்குளி அருகே உள்ள அரசன்ன மலை வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறினார். சிந்துவின் பிணத்தை அடையாளம் காட்டினார்.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார், சென்னிமலை ஆய்வாளர் செல்வராஜ், தடய அறிவியல் நிபுணர்கள் சென்றனர். அங்கு சிந்துவின் பிணம் கிடந்தது. பிணத்தின் மீது கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    பிணத்தை போலீசார் கைப்பற்றி தனசேகரை கைது செய்தனர். போலீசாரி டம் தனசேகர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் ஆறுமுகம் என்னிடம் பணம் கேட்டார். அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினேன்.

    அவர் கூறியபடி பணம் வாங்க சிந்துவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். அவளது கழுத்தில் கிடந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

    விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய்? என கேட்டு தகராறு செய்தாள்.

    அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் அவள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக் கொடியை கழற்றி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் ரூ. 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன். பின்னர் அதே பணத்தில் ரூ. 5 ஆயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன்.

    எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்துவை பஸ் ஏற்றி விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன்.

    இவ்வாறு தனசேகர் கூறினார்.கொலையுண்ட சிந்துவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிந்துவை கொன்றதாக தனசேகர் கூறி இருந்தாலும் அவர் மட்டும்தான் சிந்துவை கொன்றாரா? அல்லது பலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×