search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவுளிக்கடையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- ஊழியர் கைது
    X

    ஜவுளிக்கடையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- ஊழியர் கைது

    பழைய வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை எம்.சி. ரோட்டில் ரெடிமேட் ஜவுளிக்கடை உள்ளது. இங்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

    அவரிடம் கடை ஊழியரான கொருக்குப் பேட்டை கண்ணன் தெருவை சேர்ந்த செல்லத்துரை (44). அடிக்கடி பேசி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்ததும் மாணவி புறப்பட தயார் ஆனார். அப்போது ஊழியர் செல்லத்துரை கடையின் குடோனில் இருக்கும் துணிகளை எடுத்து தந்து விட்டு செல்லுமாறு கூறினார்.

    இதையடுத்து மாணவி, குடோனுக்கு சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த செல்லதுரை, திடீரென மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறினார். சத்தம் கேட்டு வந்த கடை ஊழியர்கள் செல்லத்துரையை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். செல்லத் துரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×