search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student harassment"

    தூத்துக்குடியில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அய்யர்விளையை சேர்ந்தவர் அந்தோணி பாக்கியம் (வயது 48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணிற்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் தனது மகளுடன் அந்தோணி பாக்கியம் வீட்டில் வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில் சிறுமியிடம் அந்தோணி பாக்கியம் அடிக்கடி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். 

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தொழிலாளி அந்தோணி பாக்கியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை மாணவி ஊரின் காட்டுப் பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம் என்பவரின் மகன் தண்டீஸ்வரன் (வயது 30) என்பவர் மாணவியிடம் ஆபாச சைகை காட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    உடனே அவர்கள் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தண்டீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான தண்டீஸ்வரன் ரெயில்வே ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×