search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea shop man"

    கோவையில் வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த டீக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தாய் - தந்தை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாய் தனியாக பிரிந்து சென்று வேடப்பட்டி நாகராஜபுரத்தில் வசித்து வருகிறார். அவருடன் மாணவி தங்கி உள்ளார்.

    சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்த போது வெங்கிடாபுரத்தை சேர்ந்த கோவை ரெயில் நிலையத்தில் ஆவின் டீக்கடை நடத்தி வரும் சுப்பிரமணியம் மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் மாணவியை அழைத்து சென்று பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார்.

    ×