search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison drinking"

    கண்டமங்கலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கண்டமங்கலம்:

    கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு சின்ன காலனியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 45) விவசாயி. இவர் நேற்று இரவு திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பழனியாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பழனியாண்டிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த பழனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
    பர்கூர் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் அபிராமி (வயது 12). இவர் படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் கூலி வேலைக்காக வெளியே சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபிராமி விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகன், அபிராமி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிறுமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிராமி இறந்தார். இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து சிறுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார். 
    சேரன்மகாதேவியில் வி‌ஷம் குடித்து மூதாட்டி சாவு

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது85). இவருக்கு கண் சரியாக தெரியாததால் ஆஸ்பத்தியில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இவரை சரியாக கவனிக்காததால் மனமுடைந்த ஆறுமுகத்தம்மாள் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சேரன் மகாதேவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஆறுமுகத்தம்மாள் இறந்தார்.  

    இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த  திம்மராயசமுத்திர கிராம நிர்வாக அலுவலர் அனுபிரியா அவரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். 

    இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில், இறந்தவர் மதுரையை சேர்ந்த ராமசாமி மனைவி காமாட்சி (வயது 60) என்பதும், விஷம் குடித்து விட்டு மயங்கி  கிடந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி திருச்சிக்கு வந்தார்? இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தங்கை அவரது காதலனுடன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனவேதனையடைந்த வெங்கடேசன், அங்குள்ள பழமை வாய்ந்த கோட்டை அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இந்த சம்பவம்  குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் பாடாலூரை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை, விவசாயி. சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர் அருகே வாந்தி, மயக்கத்தால் அவதிபட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே விக்கிரவாண்டியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட இருள்நீக்கி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சங்கீதா (வயது 23).  சங்கீதா கடந்த சில நாட்களாக வாந்தி, மயக்கத்தால் அவதிபட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் நோய் குறையவில்லை. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். 

    இதுகுறித்து விக்கிரவாண்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி செல்வரங்கன் (வயது 58). இவருக்கு திருமணமான 3 மாதத்தில் மனைவி இறந்து விட்டார். இதனால் சிவாஜி செல்வரங்கன் 83 வயது தாயுடன் வசித்து வந்தார்.

    சிவாஜி செல்வரங்கனுக்கு தாய் மீது பாசம் அதிகம். இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    தாய் இறந்துபோன துக்கத்தை சிவாஜி செல்வரங்கனால் தாங்க முடியவில்லை. ‘அம்மாவே இறந்து போய்விட்டார். இனிமேல் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?’ என்று அழுது புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

    இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டின் அருகே தகர கொட்டகைக்குள் சிவாஜி செல்வரங்கன் இறந்து கிடந்தார். அவர் பக்கத்தில் குருணை மருந்து டப்பா கிடந்தது.

    இதனையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து சிவாஜி செல்வரங்கன் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

    இது தொடர்பாக சிவாஜி செல்வரங்கனின் சகோதரர் பிரபாகரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாத்தான்குளம் அருகே குடிப்பழக்கத்தை தந்தை கண்டித்ததால் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு சிலுவை தெருவை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது 2-வது மகன் சுரேஷ்(வயது20). இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றினாராம். இதனால் சுரேசை பெருமாள் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த சுரேஷ் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வி‌ஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பு வீட்டுக்கு சீல் வைத்ததால் முன்னாள் கோவில் ஊழியர் மனைவி மற்றும் தாய் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் அங்குள்ள கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருப்பவர்களை அகற்றி வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் இன்று மதியம் அங்கு திடீர் என்று சென்றனர். அங்கு ஆக்கிரமித்து குடியிருந்து வரும் ராஜா என்பவர் வீட்டுக்கு சென்று பூட்டி சீல் வைக்க முயன்றனர்.

    அப்போது வீட்டில் இருந்த ராஜா அதிகாரிகளிடம் வீட்டை காலி செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்து அவரது வீட்டை பலகைகளால் அடைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.

    இதனால் மனமுடைந்த ராஜாவின் மனைவி அபினேஸ்வரி (வயது35) மற்றும் ராஜாவின் தாய் சந்திரா(80) ஆகிய இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்ப கோணம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கீழமணக்குடி, ரங்கராஜபுரம் ஆகிய கோவில்களின் ஐம்பொன் சிலைகள் மாயமான வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட 10 பேரில் பந்தநல்லூர் கோவில் முன்னாள் தலைமை எழுத்தர் ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    இதுகுறித்து ராஜா கூறுகையில், வருகிற 11-ந்தேதி சிலை மாயமானது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே என்னை மிரட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோழத்தரம் அருகே டிராக்டரை தனியார் நிறுவனத்தினர் எடுத்து சென்றதால் மனமுடைந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கருணாகரநல்லூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 45). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து டிராக்டர் ஒன்று விலைக்கு வாங்கி இருந்தார். அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழரசனால் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், தவணை தொகையை உடனே செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

    மேலும் அவர் டிராக்டரை ஒரு மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று தமிழரசனின் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த டிராக்டரை எடுத்து சென்று விட்டனர். இதனால் தமிழரசன் மனஉளைச்சல் அடைந்தார்.

    பின்னர் அவர் தவணை தொகையை தன்னால் கட்ட முடியவில்லையே என வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம் பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    தவணை தொகையை செலுத்த முடியாததால் தனியார் நிறுவனத்தினர் டிராக்டர் எடுத்து சென்றதால் விவசாயி மனம் உடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கோவை செல்வபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த அரசு ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை செல்வபுரம் அருகே உள்ள தில்லை நகரை சேர்ந்தவர் மண்ணாதன். இவரது மகன் விஜயகுமார் (வயது 28). கோவை கலெக்டர் அலுவலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் பயிற்சி முகாமுக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி உள்ளார். வீட்டில் இருந்த தனது தந்தையிடன் உடல் சோர்வாக இருப்பதால் நாளைக்கு வேலைக்கு செல்லவில்லை என கூறி உள்ளார்.

    இன்று காலை மண்ணாதன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் தற்கொலை செய்த கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குற்றாலம் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்ததில் பெண் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென்காசி:

    ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி பொன் ஏஞ்சல் (வயது35). இவர் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காய்கறி கடைக்காரர் சுதாகர்(35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    சுதாகருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களது கள்ளத்தொடர்பு அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓட்டம்பிடித்தது.

    இது தொடர்பாக சுதாகரின் மனைவி சுமதி தனது கணவரை காணவில்லை என ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுதாகரை தேடி வந்தார்கள் இதனிடையே ஊரை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு நேற்று குற்றாலத்துக்கு வந்தனர்.

    குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் ஒரு விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினர். இன்று காலை அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை எட்டி பார்த்தனர்.

    அங்கு பொன் ஏஞ்சலும், சுதாகரும் வி‌ஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர். உடனே இதுபற்றி குற்றாலம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாட்ஜ் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பொன் ஏஞ்சல் இறந்து கிடந்தார். சுதாகர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இதை தொடர்ந்து சுதாகரை போலீசார் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன் ஏஞ்சல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×