search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death of mother"

    • டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி. அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தனது சொந்த அக்காள் அஞ்சலையின் மகள் சிவகாமியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததார். இந்நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிவகாமியும், தாய் அஞ்சலையும் சென்றனர். இவர்கள் கணியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சென்றபோது பின்னால் கரும்பு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் அஞ்சலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சிவகாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் முன்பே தாய் விபத்தில் பலியானதை பார்த்து சிவகாமி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சிவபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் கண் முன்பு தாய் பலியானார்.
    • இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ஓம்சக்திநகரை சேர்ந்தவர் விஜயா (வயது 70). இவரது மகன் குமார் (40). சம்பவத்தன்று இவர் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். நிலையூர் சந்திப்பில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

    இதில் விஜயா, அவரது மகன் குமார் ஆகியோர் கீழே விழுந்தனர். தலையில் காயமடைந்த விஜயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பே தாய் இறந்ததை பார்த்து குமார் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி செல்வரங்கன் (வயது 58). இவருக்கு திருமணமான 3 மாதத்தில் மனைவி இறந்து விட்டார். இதனால் சிவாஜி செல்வரங்கன் 83 வயது தாயுடன் வசித்து வந்தார்.

    சிவாஜி செல்வரங்கனுக்கு தாய் மீது பாசம் அதிகம். இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    தாய் இறந்துபோன துக்கத்தை சிவாஜி செல்வரங்கனால் தாங்க முடியவில்லை. ‘அம்மாவே இறந்து போய்விட்டார். இனிமேல் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?’ என்று அழுது புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

    இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டின் அருகே தகர கொட்டகைக்குள் சிவாஜி செல்வரங்கன் இறந்து கிடந்தார். அவர் பக்கத்தில் குருணை மருந்து டப்பா கிடந்தது.

    இதனையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து சிவாஜி செல்வரங்கன் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

    இது தொடர்பாக சிவாஜி செல்வரங்கனின் சகோதரர் பிரபாகரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×