search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son suicide"

    தஞ்சையில் தாய் இறந்த சோகத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 41). பழைய இரும்பு வியாபாரி. இவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் தாய் மீது அதிகம் பாசம் உடையவராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவரது தாய் இறந்து விட்டார். இதனால் குமார் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர். இருந்த போதிலும் அவர் சரியாக சாப்பிடாமல் சோகத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று நள்ளிரவில் அனைவரும் தூங்கியதும் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தஞ்சை கீழவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேனாம்பேட்டையில் தாயை கொன்று மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தேனாம்பேட்டை தாமஸ்ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் நடேசன். இவரது மனைவி சுந்தரவள்ளி, மகன் விக்னேஷ். நடேசன் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதனால் பெரும்பாலான நேரங்களில் சுந்தர வள்ளியும், விக்னேசும் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.

    இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீடு நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது சுந்தரவள்ளி தரையில் பிணமாக கிடந்தார். விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சுந்தரவள்ளியின் காதில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி உள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தரவள்ளி லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்து வந்துள்ளார்.

    இதனால் வீட்டில் இருக்கும் போது சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாராம். இதனால் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்தார். இதன் காரணமாக பெற்ற தாய் என்றும் பாராமல் மனதை கல்லாக்கிக் கொண்டு சுந்தரவள்ளியை விக்னேஷ் வி‌ஷம் கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதன்பினர் தாயை கொன்ற வலி தாங்க முடியாமல் விக்னேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் சுந்தரவள்ளி எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    மனைவி மகனின் உடலை பார்த்து நடேசன் கதறி அழுதார். தாய்-மகனின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு மகன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூர் பம்பு ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயகோபால் (வயது 42).

    கூலித்தொழிலாளியான இவருக்கு வள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும், மணிபாலா (வயது 18) என்ற மகனும் உள்ளனர். வள்ளியும் கூலி வேலைக்கு சென்று வருவார். மணி பாலா 8-ம் வகுப்பு படித்து விட்டு சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த தீபாவளிக்கு முன்பு சில நாட்களாக மணிபாலா வேலைக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து தாய் வள்ளி மகனிடம் தீபாவளி நெருங்கி வருகிறது. அப்பாவும், நானும் வேலைக்கு சென்று வருகிறோம். நீ மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே? என்று கேட்டுள்ளார். இதனால் தாய் - மகன் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மணிபாலா வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் தாயிடம் தான் எலிமருந்தை சாப்பிட்டு விட்டதாக கூறினார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதனால் பதறிப்போன வள்ளி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிபாலா நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்- இன்ஸ் பெக்டர்கள் இனியன், குமார், ஏட்டு சங்கர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தி, மகன் கேசவன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அன்று முதல் கேசவன் (வயது 21) மன உளைச்சலில் இருந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

    தந்தையின் மரணம் கேசவனை வெகுவாக பாதித்தது. அவர் இல்லாத உலகில் தானும் வாழ விருப்பம் இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று மாமா வீட்டுக்கு செல்வதாக தாயிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற கேசவன் கயிறால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செயது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி செல்வரங்கன் (வயது 58). இவருக்கு திருமணமான 3 மாதத்தில் மனைவி இறந்து விட்டார். இதனால் சிவாஜி செல்வரங்கன் 83 வயது தாயுடன் வசித்து வந்தார்.

    சிவாஜி செல்வரங்கனுக்கு தாய் மீது பாசம் அதிகம். இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

    தாய் இறந்துபோன துக்கத்தை சிவாஜி செல்வரங்கனால் தாங்க முடியவில்லை. ‘அம்மாவே இறந்து போய்விட்டார். இனிமேல் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?’ என்று அழுது புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

    இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டின் அருகே தகர கொட்டகைக்குள் சிவாஜி செல்வரங்கன் இறந்து கிடந்தார். அவர் பக்கத்தில் குருணை மருந்து டப்பா கிடந்தது.

    இதனையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து சிவாஜி செல்வரங்கன் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

    இது தொடர்பாக சிவாஜி செல்வரங்கனின் சகோதரர் பிரபாகரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×