search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison drinking"

    வேதாரண்யம் அருகே 2 வாலிபர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் செந்தில் (வயது 28). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த செந்திலுக்கு சூர்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தாணிகோட்டம் சின்னதேவன் தெரு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்து கல்யாணசுந்தரம் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டடு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி அதியமான் கோட்டை அடுத்துள்ள லளிகம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி (வயது28),  இவர் தீராத வயிற்று வலியால் நீண்ட  நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் பூச்சி மருந்து குடித்தார். 

    இதை பார்த்த குடும்பத்தினர் மீட்டு லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாரண்டஅள்ளி அருகே குடும்ப தகராறில் மீன் வியாபாரி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்துள்ள 5 வது மயில் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வேலம்மாள் (வயது50). 

    சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேலம்மாள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வேலம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி அருகே வேலைக்கு செல்லாத மகனை தாய் திட்டியதால் மனமுடைந்த வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள முள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சுசீலா (வயது65). இவரது மகன் பெரியசாமி (26). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் தாய் சுசீலா, பெரியசாமியை திட்டியதாக தெரிகிறது. 

    இதனால் மனமுடைந்த பெரியசாமி நேற்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பெரியசாமி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடும்ப தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  மொள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 55). இவர் வெளிநாட்டில் கூலிவேலை செய்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்தார். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த தஸ்தகீர் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து குருசீலாபட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தஸ்தகீருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
    தண்டராம்பட்டு அருகே உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள வாழவச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமசாமி வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் தந்தை திட்டியதால் மனமுடைந்த பெண் வி‌ஷம் குடித்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா, ரேவதி, கலைமகள் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மேனகாவுக்கு கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மணமகன் வீட்டார் அழகேசன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அழகேசன் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள், மணமகன் வீட்டாரை சரியாக உபசரிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மணமகன் குடும்பத்தினர் அழகேசனிடம் புகார் கூறினர்.

    அழகேசன் வீட்டிற்கு வந்து மேனகா, ரேவதி, கலைமகள் ஆகியோரை அழைத்து சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த 3 பேரும் கடந்த மாதம் 28-ந் தேதி ஓரே நேரத்தில் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மேனகா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு அருகே விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்ட மூதாட்டி மனமுடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மணியகாரன்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 60). இவர்களுக்கு ஒரு பெண் உள்ளது. சின்னபொண்ணு சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டிருந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் கடந்த 21-ந் தேதி விஷம் குடித்தார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சின்ன பொண்னை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சின்னபொண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணிக்கு உயிரிழந்தார்.

    இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் ஜேக்கப் (வயது56), விவசாயி. இவர் வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். 

    அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு ஏசுதாஸ் ஜேக்கப் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காரப்பேட்டை அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்த நார்த்தாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னன் (வயது 50), விவசாயி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வீட்டில் இருந்த பூச்சுக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பல்லடத்தில் மனைவி குடிக்க பணம் தராததால் விசைத்தறி தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து பாப்பாள் குழந்தைகளுடன் சூலூரில் உள்ள ராசிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிக்க பணம் கேட்டு ஜோதிமணியை அடிக்கடி தொந்தரவு செய்தார். நேற்றும் காலை குடித்து விட்டு வந்த சந்திரன் ஜோதிமணியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டார். பணம் ஏதுவும் இல்லை என்று கூறிய ஜோதிமணி கடைக்கு சென்று விட்டார். கடைக்கு சென்று சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சந்திரன் சாணிப்பவுடர் குடித்து வாயில் மஞ்சள் நிற நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். 

    அதிர்ச்சியடைந்த ஜோதிமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் பழனிவேல் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் வீடு கட்ட அதிக கடன் வாங்கி உள்ளார். எனவே குடும்பத்தினர் பழனிவேலுவை கண்டித்து உள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

    இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் பழனிவேலுவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பழனிவேல் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×