search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison drinking"

    திருவெறும்பூரில் திருமணமாகாத ஏக்கத்தில் அரசு ஊழியர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்:

    திண்டுக்கல் வீரபுரையான் பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (30). இவர் திருப்பூர் தாராபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார். கருப்பையாவுக்கு திருமணமாக வில்லை. 

    இந்நிலையில் கருப்பையா திருநள்ளாறுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ரெயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  இந் நிலையில் ரெயில் திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் நின்றது. உடனே கருப்பையா இதில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் எலி மருந்தை சாப்பிட்டு ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா இறந்தார். 

    இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திருமணமாக வில்லை என்ற ஏக்கத்தில் கருப்பையா விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 
    பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிபட்டியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மகன் உசேன் (வயது 29). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 10 நாட்களாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் இவரது மனைவி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த உசேன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட உசேனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதியமான்கோட்டை அருகே கோவில் பூசாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்துள்ள சாமிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது55). இவர் அங்குள்ள மாரியம்மன்கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். 

    சம்பவத்தன்று சின்னசாமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்னசாமிக்கு 3 மகனும், 2 மகளும் உள்ளனர்.
    புதுவையில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பிச்சைவீரன்பேட் வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது46). தச்சு தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுடைய மகள் நந்தினி. (வயது21). இவர் புதுவை அடுத்த கெங்கராம்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது தந்தை ஜெயவேலு தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் இதேபோல ஜெயவேலு குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த வந்த நந்தினி தந்தையை திட்டினார்.

    இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த நந்தினி வீட்டில் இருந்த (எலிபேஸ்ட்) வி‌ஷத்தை சாப்பிட்டு விட்டார். இதனால் மயங்கி விழுந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து ஜெயவேலு ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் கணவரை இழந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 22). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து தமிழ்செல்வி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று சாலை சாணி பவுடர் குடித்து தமிழ்செல்வி வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியி ல் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி அருகே குடும்ப தகராறில் 3 பொண்டாட்டிகாரர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தருமபுரி:

    தருமபுரியை அடுத்துள்ள வேப்பிலைப்பட்டி செங்கான் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது50). லாரி டிரைவரான இவருக்கு 3 மனைவிகள் உள்ளன. முதல் மனைவி கோவிந்தம்மாள், மகாலட்சுமி, அம்பிகா. இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளன. முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் கணவன்-மணைவிகளுக்கு இடையே தகராறு நடந்தது. 

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கடத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக முருகன் உயிரிழந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மகன் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை உசிலம்பட்டி அருகேயுள்ள பூச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 45). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித்குமார்.

    குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரஞ்சித்குமார், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதையடுத்து மாயாண்டி, தனது மகனிடம் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்தார். ஆனாலும் ரஞ்சித்குமார் குடிப்பழக்கத்தை நிறுத்த வில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாயாண்டி சம்பவத்தன்று மாலையில் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாயாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக ஜெயலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரூர் அருகே விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 52). விவசாயி. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 31). இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கவுதம் அங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது பத்மாவதி (21) என்ற பெண்ணுக்கும் கவுதமுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த தகவல் இருவரது வீட்டுக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விரக்தியடைந்த கள்ளக்காதல்ஜோடி நேற்று வேடசாமி கோவில் அருகே வி‌ஷம் குடித்தனர். மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு கவுதம் சிகிச்சை பலனின்றி இறந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் இன்று காலை பத்மாவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சூலூர் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 41). இவரது மனைவி பத்மாவதி (35).

    நேற்று தேவராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது பத்மாவதியை காணவில்லை. மனைவியை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார்.

    இன்று காலை சூலூர் குளத்தில் இளம்பெண் பிணம் மிதப்பது குறித்து தகவல் கிடைத்ததும் தேவராஜ் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடப்பது தனது மனைவி பத்மாவதி என்பதை உறுதி செய்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புளியங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவரது மனைவி திருமலை(50). மோகன்தாஸ் அந்த பகுதியில் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். திருமலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் வைக்கோல் வாங்குவதற்காக வெளியூர் சென்றார். வீட்டில் இருந்த திருமலை திடீரென வி‌ஷத்தை குடித்து விட்டார்.

    உடனே அவரை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே திருமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒருதலைக்காதல் விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை கல்மேடு டேவிதார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 20). மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் இவரை காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துக்குமார் வி‌ஷம் குடித்தார். அவரை உடனடியாக அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக முத்துக்குமாரின் தாய் முருகேஸ்வரி சிலைமான் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×